Friday, April 12, 2019

அதிக அளவு ஆன்மீக ஆற்றல்


தொழில் தெய்வத்தின்” அளவிடமுடியாத (incredible) ஆன்மீக ஆற்றல்!


D 193 TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்

 ஏற்கனவே கூறப்பட்ட, ‘உண்மைக் கடவுளின்’ வழிபாட்டினை ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வந்த பிறகு உங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை இந்த வழிபாட்டுக்குப் பயன்படுத்துவது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

இந்த வழிபாடு ஒரு நாள் முழுவதும் செய்யும் வழிபாடாகும். அதாவது 1000 நிமிடங்களிலும் இறைவனை வழிபடுகிறீர்கள். உண்மைக் கடவுளை ஒரு நாளில் 40 நிமிடங்கள் மட்டும் வழிபடுகிறீர்கள்; அப்படியானால், ஆன்மீக ஆற்றல் எவ்வளவு கிடைக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்!  மிக மிக அதிக அளவு ஆன்மீக ஆற்றல் கிடைக்குமல்லவா! அந்த அளவு ஆற்றலில்தான், நீங்கள் ஆன்மீகத்தில் முழுமை பெறுகிறீர்கள்;  உங்கள் மனதில் உள்ள மனவழுத்தமும் மனகவலையும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, மனம் தூய்மையான பளிங்குத தண்ணீரைப் போல களங்கமற்று இருக்கும்; ‘

உண்மைக் கடவுளோடு’ ஐக்கியமாகி விடுகிறீர்கள். ‘தொட்டதெல்லாம் துலங்குகிறது” எந்தவித பயத்திலிருந்தும் முற்றிலுமாக நீங்கிவிடுகிறீர்கள். இறைவன் எப்போதும் எல்லாவற்றிற்கும் பாதுகாவலனாக இருப்பான்; அறிவுரை வழங்குபவனாக இருப்பான்; உங்களது வாழ்க்கை வளமாவதற்கு வேண்டிய பாதையை காட்டிக்கொண்டே முன் செல்வான். வேறு என்ன வேண்டும்; அனைத்தையும் தருவான். அந்த வாழ்க்கை வாழுவதுதான் “கவனவாழ்க்கையாகும் (Attentive life)” இறைவனை விட்டு பிரிவதற்கு முன்பு ஆதாமும் ஏவாளும் “கவனவாழ்க்கை”தான் வாழ்ந்தார்கள்.

               ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: