Tuesday, April 16, 2019

மருந்து இல்லாமல்


இம--மருந்துமாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் வாழ முடியுமா>   

2014-ஆம் ஆண்டு நவம்பர் கடைசிவாரம்தான் நான் அக்குபங்சர் சிகிச்சை பயிற்சியில் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எனக்கு நானே அக்குபங்சரிலும் எனக்குள்ள நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். 2016-ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும், கம்பம் அகடமி ஆப் அக்குபங்சரும் சேர்ந்து நடத்திய அக்குபங்சர் ஓராண்டு கோர்சில் சேர்ந்து படித்து டிபளமோ பட்டயம் பெற்றேன்.

நோய்கள் வராமலிருக்க முடியாது. அரோமணியின் 11 இயற்கை விதிகளில் எதை ஒன்றை மீறினாலும் நோய்கள் வரத்தான் செய்யும். அதோடு தொழில் ரீதியாக ஏற்படக் கூடிய பலவீனங்களால் நோய்கள் வரத்தான் செய்யும். நான் தினசரி எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன். அதனால் எனது உடல் பலவீனமாகி, கழிவுப்பொருட்களின் தேக்கம் அதிகமாகும்போது நோய்கள் தோன்றத்தானே செய்யும். அவ்வாறு தோன்றும்பொழுதெல்லாம், மருத்துவ மனப்பயிற்சிகளின் (Medicinal Meditations) மூலமாகவும், அக்குப்பங்சர் மூலமாகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டு எனக்கேற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடுவேன். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது கிடையாது.

                    ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: