Wednesday, April 12, 2017

மன கழிவுகள் (முக)!

J 212-TM--WASTE-(முழு கட்டுரை)

நோய்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்! (முழு கட்டுரை)
கிருமிகளால் (VIRUS AND BACTERIA) நோய்கள் உருவாவதில்லை.
1.   உடல்மன நலம் சம்பந்தப்பட்ட கருத்துக்களில், கொள்கைகளில், வணிகம் (BUSINESS) மக்களிடையே அறியாமையையும் (IGNORANCE), பயத்தையும் (FEAR) காலம் காலமாகப் புகுத்திக்கொண்டு வருகிறது. 1864-ம் ஆண்டிலிருந்து உலக மக்களை அறியாமையில் வைத்து பயப்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு கொள்கையைத்தான் விளக்கமளித்து மறுக்கப் போகிறேன்.  அந்த அறியாமைக் கொள்கையால், உலக மக்கள் உடல்மன நலம் பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அறியாமையையும், பயத்தையும் போக்கி, அவர்கள் இழந்த உடல்மன நலத்தை மீட்டெடுப்பதுவும் மருந்தில்லா மருத்துவத்தின் கடமையாகும்.. அந்த மருந்தில்லா மருத்துவத்தைதான் இப்பொழுது உங்களுக்கு நான் தர இருக்கிறேன். நோய்களைக் கண்டு யாரும் பயப்படத்தேவையில்லை.  நீங்கள் பயப்படும் நோய்கள், நோய்களே இல்லை

2.   தொழிற்சாலைகள் பொருட்களை உற்பத்தி செய்யும்போது, கழிவுகள் மிஞ்சுகின்றன. வீடுகளில் உணவு தயாரிக்கும்போது காய்கறிக் கழிவுகள் மிஞ்சுகின்றன. அதேபோலதான், உணவு செரிக்கும்போது, கழிவுகள் மிஞ்சுகின்றன. இந்தக் கழிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சாதாரண கழிவுகள்: இந்தக் கழிவுகள் அன்றாடம் உடலின் பராமரிப்பு ஆற்றலால் (IMMUNITY POWER), வெளியேற்றப்படுகின்றன. உதாரணத்திற்கு மனக்கழிவுகளான கோபம், பொறாமை, வெறுப்பு முதலியன. உடல் கழிவுகளான வியர்வை, வாயு, சிறுநீர், மலம் முதலியன. இவைகள் அன்றாடம் வெளியேற்றப்படுகின்றன. இவைகளின் வெளியேற்றத்தால் தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

தேக்கமுற்ற கழிவுகள்: இயற்கை விதிகளான அரோமணியின் 9 விதிகளையும் மீறும்பொழுது, சாதாரண கழிவுகள் அளவுக்கு அதிகமாகி, வெளியேறமுடியாமல் தேங்கி, தேக்கமுற்ற கழிவாக மாறுகிறது.. உடல், இயற்கையாக உடலைப் பராமரிப்புச் செய்யும்போது நடைபெறும், தேக்கமுற்ற கழிவுப்பொருட்களின் (WASTE) வெளியேற்றத்தையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்கிறோம். உதாரணமாக, மனவழுத்தம் (DEPRESSION) என்னும் மனக்கழிவும்,  வலி, அரிப்பு, சளி, வாந்தி, சிறுநீர், மலம், உமிழ்நீர், ஏப்பம், இளப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், தும்மல், சிறுநீரில் சர்க்கரை, உப்பு வருதல், வியர்வை, காய்ச்சல் ஆகிய உடலின் கழிவுப்பொருட்களைச் சொல்லலாம். இந்த கழிவுப்பொருட்களின் வெளியேற்றமும், தொந்தரவுகளும் ஒரு வரையறைக்குள்ளிருந்தால், உடலுக்கு சேதம் அதிகம் ஏற்படாது. இல்லாவிட்டால் மரணம் கூட நிகழலாம்.

3.   ஆகவேதான் இந்த நோய்களைக் கண்டு, ஆதிகாலத்திலிருந்தே மனிதன் பயந்தான். நோய்களால் தாங்கமுடியாத வேதனை, உணவு தேடமுடியாமை, தனக்குப்பிறகு தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணவு கிடைக்காமை போன்ற மனப்பயத்தால், மருந்து கண்டுபிடித்து பயன்படுத்தத் துவங்கினான். அப்பொழுதும் வணிகம் மக்களிடையே அறியாமையை வளர்த்தது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஆத்தா மாரியம்மாளால் தரப்படுவது அம்மை என்றும், அதற்கு மந்திரித்தால் போதும் என்ற அறியாமைக் கொள்கையானது ஆன்மீகத்தின் பெயரால் வணிக நோக்கோடு பரப்பப்பட்டு, இன்றளவும் நிலைத்திருக்கிறது. அம்மை போடுவதென்பதுவும் உடல் வெளியேற்றும் தேக்கக் களிவுப் பொருள்தான்.

நிரந்தர தேக்கமுற்ற கழிவுகள்: உடல் தனது பராமரிப்பு ஆற்றலால் வெளியேற்ற முடியாத நிலையில் தேங்கும் கழிவுகள்தான் இந்த நிரந்தரத் தேக்கமுற்ற கழிவுகளாகும். இந்த வகை தேக்கமுற்ற கழிவை நீக்கத்தான், இறைவனின் ஆக்கப் படைப்புப் பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றித்தான் கீழே விரிவாகச் சொல்ல இருக்கிறேன்.

4.   நோய்கள் உண்டாவது நல்லதா கெட்டதா!
சுவை இல்லாத இயற்கை உணவு, நெருப்பால் சுவைமிக்க சமைத்த உணவாக மாறியது. ஆகவே, சுவைக்கு அடிமையாகி அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் மனிதனிடம் தொற்றிக்கொண்டது. பசி எடுத்தப்பிறகு சாப்பிடவேண்டும் என்பதை மாற்றி, நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும் என்ற தவறான கொள்கைக்கு வந்தான். தாகம் எடுத்து ஆற்றுக்குச் சென்று மற்ற மிருகங்களோடு மிருகங்களாக தண்ணீர் குடித்தவன், பானை, குடம் கண்டுபிடித்து, அவற்றில் நீரை வீட்டிற்கே கொண்டுவந்தான். அதன் விளைவு, இரண்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் உடல்நலம் பெறுவீர்கள் என்ற தவறான கொள்கை சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் மற்ற அரோமணியின் இயற்கை விதிகளை கடைபிடிக்காமல் போனதால் உடலின் வலிமையை இழந்து கொண்டுவந்தான் உடலின் வலிமை இழப்பு வயிற்றைத் தாக்கியது; செரித்தலைத் தாக்கியது. செரிக்கும் உணவின் அளவு குறைந்தது. மீதம் பெருமளவு கழிவுப்பொருளாக மாறியது.

5.   உடல் தன்னைத்தானே காத்துக்கொள்ளும்படியாக, இறைவன், உடலை வடிவமைத்திருக்கிறான். இந்த வடிவமைப்பின்படி, மேலே கூறப்பட்ட  தேங்கிய கழிவுப்பொருளை, உடலானது வெளியேற்ற ஆரம்பிக்கிறது. அவ்வாறு வெளியேறும் கழிவுப்பொருட்களில் சிலதுதான், வாந்தி, பேதி, மயக்கம். மற்றது தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல். இருமல் முதலியன..

6.   வாந்தி ஏன் வருகிறது (VOMIT)? இரப்பையினால் (STOMACH) செரிக்க (DIGESTION) இயலவில்லை; அது கெட்டுவிட்டது; ஆகவே செரிக்காத பொருளை உடலானது வாந்தி மூலம் வெளியே தள்ளி இரப்பைக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறது. நல்ல காரியத்தைத்தானே உடல் செய்கிறது!

7.   தும்மல் (SNEEZING) எதற்காக வருகிறது? தலையில், முகத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கழிவுப்பொருளான நீரை, சளியை வெளியேற்ற உடல் தும்மலை உண்டுபண்ணுகிறது. தும்மல் ஏற்பட்டு நீரும், சளியும் மூக்கிலிருந்து வெளியேறியவுடன் நமக்கு ஆறுதலாகத்தானே இருக்கும். இது நல்லதுதானே!

8.   இருமல் (COUGH) எதற்காக ஏற்படுகிறது? உடலில் சேர்ந்திருக்கும் கழிவுப்பொருளான சளியை உடல் வெளியேற்ற எடுக்கும் நடவடிக்கைதான் இருமல். இருமல் உடலுக்குள் காற்று சுழற்சியை ஏற்படுத்தியும், வெப்பத்தை உற்பத்தி செய்தும் தசை சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் சளியை சரியான வேகத்துடன் உடலை விட்டு வெளியேற்றுகிறது. இது உடலுக்குக் கெட்டது இல்லையே!

9.   சளியை வெளியேற்றாவிட்டால், நமக்கு என்ன நடக்கும்? இதற்கு விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
தலைவலியைப் போக்க வலிநிவாரண மாத்திரை (PAIN KILLER TABLET) சாப்பிட்டால், வலி நின்றுவிடும். ஆனால், அது எப்படி குணமாகிறது என்பது மாத்திரை சாப்பிடுபவர்களுக்குத் தெரியாது. ஆனால், தலைவலிக்கு மருத்துவ மனப்பயிற்சி (MEDICINAL MEDITATION) செய்த எனக்கும், என்னால் நேரிடையாகவும், தொலைபேசி மூலமாகவும் சிகிச்சை எடுத்தவர்களுக்கும், தலைவலி எப்படி குணமாகிறது என்பது நன்றாகத் தெரியும்.

10.  தலைவலிக்கு மருத்துவ மனப்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, வயிற்றிலிருந்து நாக்கு வரைக்கும், வராமல் தசைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் சளி, சிறிது சிறிதாக வாய் வழியாக வெளியேறிக்கொண்டிருக்கும். சளி வெளியேற வெளியேற தலைவலியும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வரும். சளி முழுவதும் வெளியேறியவுடன், தலைவலியும் முற்றிலுமாகக் குணமாகி விடும்; தலைவலியோடு காய்ச்சலுமிருந்தால், காய்ச்சலும் குணமாகிவிடும். குணமானவுடன் நல்ல பசி எடுக்கும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம். உடலில் சளி இருந்தால், தலைவலியோடு காய்ச்சலும் ஏற்படும்; பசியும் எடுக்காது; இப்பொழுது நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்! இருமல் ஏற்படுவது நல்லதா, கெட்டதா!  

11.  மேற்குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது, நாம் என்ன செய்கிறோம்! வாந்தியை , தும்மலை, இருமலை நிறுத்தவும், மாத்திரை, மருந்து என்று எடுத்துக்கொள்கிறோம். இந்த மாத்திரை, மருந்து என்ன செய்கிறது? நான் சொல்ல வேண்டியதில்லை! உங்களுக்கே இப்பொழுது புரிந்திருக்கும்! ஆம்! மருந்து, மாத்திரை வாந்தி எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறது; தும்மல் வராமல் தடுக்கிறது; இருமலையும் வரவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. அதனால் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களான, செரிக்காத உணவு, தலை முகத்தில் தேங்கியுள்ள நீர், சளி, வயிற்றிலிருந்து வாய் வரை தேங்கியுள்ள சளியை வெளியேற்றாமல் ஆங்காங்கே தங்க விட்டு விடுகிறது. அதனால்தான்  மருந்து மாத்திரைகளுக்குப் பூரண குணம் கிடைக்காமல், தற்காலிக நிவாரணமாகத்தான் குணம் கிடைக்கிறது.

12.  மேலே குறிப்பிட்டவையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வாந்தியையும், தும்மலையும், இருமலையும் வர அனுமதியுங்கள். வாந்தியைக் குணப்படுத்த பசி எடுக்கும்வரை வயிற்றைப் பட்டினியாகப் போடுங்கள். கெட்டுப்போன இரைப்பைக்கு ஓய்வு கிடைக்கும்; ஓய்வு பெற்ற வயிற்றில் பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுத்த பிறகு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பசிக்குறிய மருத்துவ மனப்பயிற்சி தெரிந்திருந்தால், அதை 20 நிமிடங்கள் செய்தால், கூடுதலான சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம் (SPECIAL RESERVED EXTRA BLOOD) இரைப்பைக்குச் சென்று, சீர்கேட்டைக் களைந்து விரைவில் பசிஎடுக்க வைக்கும்.

13.  மேற்குறிப்பிட்டதைப்போல, தும்மல் இருந்தால், தலையில் நீர் கோர்க்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம் சுடு நீரில் (34 டிகிரி செண்டிகிரேடு) தலை வழியாக ஊற்றிக் குளியுங்கள். இளம் சுடு நீர் என்பது மிகவும் சூடாகவோ, அல்லது குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. உச்சந்தலையில் நீரை ஊற்றும்போது வெது வெதுப்பாக உணர வேண்டும். காயந்த துண்டால் தலையை துவட்டக் கூடாது. சிறிய துண்டை குளித்த இளஞ்சுடு நீரில் நனைத்துப் பிறகு பிளிந்து தலையைத் துவட்ட வேண்டும். இந்த முறையில் ஈரத்துண்டு தலையின் ஈரத்தை ஈர்த்து எடுக்கும். நாம் சேவிங் செய்யும் போது என்ன செய்கிறாம். முதலில் முகத்தை தண்ணீரால் தடவி, அதற்குப் பிறகு சேவிங் கிரீம் போட்டு சேவிங் செய்கிறோம். இதன்மூலம் சேவிங்கிரீம் முகத்தில் அழுத்தமாக அப்பும்; சுலபமாக முடி வந்து விடும். இதேபோல, பழுதுபட்ட கான்கிரீட் தரையை பழுது பார்க்கும்பொழுது பழுதுபட்ட தரையை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு, பிறகு தண்ணீரைத் தெளித்து, அதன் மேல் சாந்து போட்டுப் பூசுகிறோம். இதன்மூலம் தண்ணீரானது சிமெண்ட் சாந்தை தரையில் நன்றாக ஒட்டிக்கொள்ள வைக்கிறது. மேலும் இந்த முறையில் துவட்டும்போது, உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை ஈரத்துண்டு நன்றாக ஈர்க்கிறது ;குளித்ததின் புத்துணர்ச்சி நீடித்து இருக்கும்.  

14.  குளிர்காலத்திலும், மழைகாலத்திலும், இரவில் தூங்குவதற்கு முன்பு மின்விசிறியின் வேகத்தைக் குறைக்கும்படியாக, ரெகுலேட்டரில் இரண்டு பாயிண்ட் குறைத்துவிட்டுப் படுங்கள்; அதனால், அறையில் ஹீட்டரைப் போட்டதைப்போல, அறைமுழுக்க வெப்பம் (HEAT) பரவும். குளிர்ச்சி மட்டுப்படும். காலையில் ஏற்படும் தும்மல், நீராக ஒழுகுதல் இருக்காது. மிகவும் நாள்ப்பட்ட தும்மல் (SNEEZING), நீர்வடிதல் (WATERING NOSE), மூக்கடைப்பு (NASAL BLOCK), மூக்கிலிருந்து சளி வருதல் (COLD), பிறகு இளப்பு (WHEEZING) ஆகிய அனைத்திற்கும் இரண்டு மருத்துவ மனப்பயிற்சிகள் தெரிந்து வைத்திருந்தால் போதும். அனைத்தையும் விரைவில் குணப்படுத்திவிட முடியும்.    

15.  அடுத்து இருமல் இருந்தால், உடலில் சளி உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை எடுக்கும் காலங்களில் பால், தயிர் சேர்க்காமலிருப்பது சளி உற்பத்தியைக் குறைக்கும். அதனால் இருமலும் குறையும். சளி இருக்கும் காலங்களில், நடைப்பயிற்சி, சிறு சிறு உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடல் முழுவதும் வெப்பப் பரவலும், காற்றோட்டமும் ஏற்பட்டு, தசையில் ஒட்டிக்கொண்டிருக்கிற சளியைப் பிய்த்துக் கொண்டு வரச்செய்யும். சளியை வெளியேற்றுவதற்குரிய மருத்துவ மனப்பயிற்சி மூலமும் சளியை வெளியேற்றிக் குணம் பெறலாம்.

16.  அனைத்து நோய்களும் வராமலிருப்பதற்கும், வந்த நோய்கள் விரைவில் குணமாவதற்கும், ’ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்’ புத்தகத்தில் கூறியபடி 9 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கவேண்டும். மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தைப்பற்றிய விளக்கத்தை, ‘கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை” புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

17.  அனல்மின் நிலையங்களில், பராமரிப்பு வேலைகளைத் (MAINTENANCE WORKS) தவறாமல் செய்கிறார்கள். அப்பொழுதுதான் நிலையம் நன்றாக இயங்கி, மின் உற்பத்தி தடங்கல் இல்லாமல் திறமையுடன் நடைபெறும். இந்த பராமரிப்பு வேலைகள் தினசரி பராமரிப்பு, காலாண்டு பராமரிப்பு, அரையாண்டு பராமரிப்பு, முழுஆண்டு பராமரிப்பு என்று பிரித்துக்கொண்டு வேலைகள் நடக்கின்றன. முழு ஆண்டு பராமரிப்பில்தான் இயந்திரங்களின் அனைத்துப் பாகங்களும் பிரிக்கப்பட்டு பழுதுகள் பார்க்கப்பட்டு, பிறகு பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பராமரிப்பு வேலை முடிக்கப்பட்டு இயந்திரம் மின் உற்பத்தியைத் தொடங்கும்.

18.  மேலே குறிப்பிட்டதைப்போலவே, நமது உடலும் தினசரிப் பராமரிப்பு வேலை, காலாண்டு பராமரிப்பு வேலை, அரையாண்டு பராமரிப்பு வேலை, முழு ஆண்டு பராமரிப்பு வேலை என்று பிரித்து பராமரிப்பு வேலைகளை செய்து முடிக்கிறது.

19.  தினசரி பராமரிப்பு வேலையில், உடல் வெளியேற்றும் கழிவுப்பொருட்கள்: காலையில் மலம் (FAECES), சிறுநீர் (URINE), தும்மல் (COUGH), சளி (SPUTUM), வாயு (GAS)  முதலியன. இந்தக் கழிவுப்பொருட்கள் எப்பொழுதுமே காலை நேரம் எழுந்தவுடன் வெளியேறுகின்றன. மதியச் சாப்பாட்டிற்கு முன்பும்,, மாலை சிற்றுண்டிக்கு முன்பும், இரவு சாப்பாட்டுக்கு முன்பும். வாயு வெளியேறும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேற்படி கழிவுப் பொருட்கள் வெளியேறியவுடன்தான் பசி எடுக்க ஆரம்பிக்கும். சராசரி உடல்மன நலத்துடனிருப்பவர்கள் மேற்படி கழிவுபொருடகள் மேற்குறிப்பிட்ட காலங்களில் வெளியேறுவதை உணரமுடியும். மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களால் உணர முடியாது.

20.  அதாவது உணவை வயிற்றிற்குள் போட்டவுடன், பராமரிப்பு ஆற்றலானது (ENERGY OF MAINTENANCE) உணவு செரித்தலுக்கு உதவி செய்யச் சென்று விடுகிறது. செரித்தலின் போது மேற்குறிப்பிட்ட கழிவுப்பொருட்கள் உபயோகமற்றது என உடலால் கழிக்கப்படுகின்றன. உணவு எரிக்கப்பட்டு செரிப்பதற்கு நான்கு மணி நேரம் பிடிக்கிறது. செரித்தலால் கிடைத்த ஆற்றலை ரத்தத்திற்கு அனுப்பிவிட்டு, பராமரிப்பு ஆற்றல், கழிவுபொருட்களை வெளியில் எடுத்தெறிய வருகிறது. வந்து, வாயு இருந்தால், மல ஆசண வழியாகவும், சளியை வாய் வழியாகவும், சிறுநீரை சிறுநீரகம் வழியாகவும் மற்ற கழிவுகளையும் அந்தந்த வெளியேற்றும் மார்க்கம் வழியாக அனுப்புகிறது. இந்த கழிவுப்பொருட்கள் வெளியேறும்பொழுதும், வெளியேறிய பிறகும் மகிழ்ச்சிதான் ஏற்படும்; தொந்தரவாக இருக்காது. வெளியேறி முடித்தவுடன் பசி எடுக்க ஆரம்பிக்கும். மேற்குறிப்பிட்டதுபோல வெளியேறிக் கொண்டே வந்தால், அனைவரும் உடல் மன நலத்துடன் வாழமுடியும்.

21.  அப்படியானால் எங்கே கோளாறு ஏற்பட்டு நோய்கள் தோன்றுகின்றன? நோய்கள் என்று நான் சொல்லும்பொழுதெல்லாம் தேக்கமுற்ற கழிவுப்பொருட்களின் வெளியேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

22.  அறியாமையால் உற்பத்தியாகும் மனக் கழிவுகள்
மனத்தில் ஏற்படும் கழிவுகள்:

பேராசை, கோபம், பயம், பொறாமை, வெறுப்பு, பதட்டம், தாழ்வு மனப்பான்மை, அதிர்ச்சி, மனக்கவலை, எதிலும் நம்பிக்கையின்மை, எப்பொழுதும் குழப்பத்தில் மூழ்கியிருப்பது, பொருமையின்மை, ஏமாற்றம், அமைதியின்மை முதலியன மனதில் கழிக்கப்பட்டு சேரும் கழிவுகளாகும்.

23.  இறைவன் உடலை இரண்டுவிதமான வாழ்க்கை வாழும்படியாக வடிவமைத்திருக்கிறான். ஒன்று கற்பனை வாழ்க்கை (IMAGIN LIFE). இந்த வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகள் எடுக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று கவனவாழ்க்கை (ATTENTIVE LIFE). இவ்வாழ்க்கை வாழ்ந்து, புண்ணியங்கள் பல சேர்த்து, மறுபிறவி தொடராமல் இருப்பது அல்லது மறுபிறவியில், மேல் நிலையில் பிறந்து துன்பங்கள் குறைந்தும், இன்பங்கள் நிறைந்தும் வாழ்வது.

24.  மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கற்பனை வாழ்க்கைதான், அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ வேதமான பைபிலில், நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் பழங்களைத் சாப்பிட்ட பிறகுதான் ஆதாமும் ஏவாளும் அவர்களது சந்ததியினரும் கற்பனை வாழக்கை வாழ்ந்ததாகக் கூறுகிறது.   

25.  மனம் உடலுக்கு எல்லாமாக இருந்து செயல்படுகிறது. இந்த மனதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்களோ அப்படித்தான் வாழ்க்கை அமையும். மேற்கூறிய இரண்டு வாழ்க்கை முறைகளையும் தீர்மானிப்பது மனம்தான். கற்பனை வாழ்க்கையில் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கப்போகும் வரை நீங்கள் செய்யும் செயல்களான எழுந்திருப்பது, மலம் போவது, குளிப்பது, நடப்பது, உட்காருவது, பணி செய்வது ஆகிய அனைத்திலேயும் உங்கள் முழுக்கவனம் செல்லுவதில்லை. எதையாவது சிந்தித்துக்கொண்டே செய்வீர்கள். இவ்வாறு செய்யும்போது மூன்றுவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.

26.  ஒன்று செய்யும் செயல்களில் அல்லது செயல்களால் விளைந்த விளைவுகளில் நுணுக்கம், ஒழுங்கு, நேர்த்தி இருப்பதில்லை.

27.  மற்றொன்று முழுக் கவனமும் செய்யும் செயல்களில்/ வேலைகளில் இல்லாததால், சிறப்பு ஒதுக்கப்பட்ட கூடுதல் ரத்தம் (SPECIAL RESERVED EXTRA BLOOD) அந்தச் செயல்களில்/பணிகளில் ஈடுபட்டிருந்த உறுப்புகளுக்குச் செல்லாமல், எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற மூளைக்குச் சென்று விடுகிறது. அதனால், அவ்வுறுப்புகள் பலவீனமடைகின்றன.

28.  மூன்றாவது, கவனமற்று செய்யும் வேலைகளின் போது ஏற்படும் எண்ணங்கள் மனவழுத்த எண்ணங்களாக மாறி மனக் கழிவுகளாக மனதில் தேங்குகின்றன. செயல்களில்/வேலைகளில் கவனம் இல்லாததால், அந்தக் கழிவுகள் வெளியேறாமல் மனதிலே தங்கி, தேக்கமுற்ற கழிவாக மாறிவிடுகிறது.

29.  இறைவன் உடலை வடிவமைத்த நுணுக்கத்தை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். செயல்களில்/வேலைகளில் கவனத்தைச் செலுத்துப்பொழுது இரண்டுவிதமான கழிவுகள் தேங்காமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலே கூறியபடி உறுப்புகளின் தேய்மானங்கள் தடுக்கப்பட்டு, வலிமை குறைவு தடுக்கப்பட்டு, உடல் கழிவுகள் தேங்காமல் தடுக்கப்படுகிறது. மற்றொன்று, செயல்களில்/வேலைகளில் கவனத்தைச் செலுத்துப்பொழுது, மன அலைபாய்தலின் மூலம் மனவழுத்தங்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு மனவழுத்த எண்ணங்களால் உற்பத்தியாகும் மனக்கழிவுகள் வெளியேறுகின்றன. இவ்வாறு மனிதனின் கவனமான செயல்பாடுகளினால், உடல் கழிவுகள் உற்பத்தியாகாமலும், மனக்கழிவுகள் வெளியேறும்படியாகவும்  உடலும் மனமும் இணைந்து செயல்படும்படியாக உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.      

30.  மூளை எப்பொழுதும் சிந்தித்திக்கொண்டே இருக்கிறது. இந்தச் சிந்தனைகள் அனைத்தும் கடந்தகால நிகழ்வுகளைச் சம்பந்தப்படுத்தியும், எதிர்காலத்தில் நடக்கப்போகும், நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்ட நிகழ்வுகளையும்தான் இணைத்துத்தான் இருக்கும். அப்படி வரும் சிந்தனைகளில், துன்பம், துயரம், மனவழுத்தம் போன்ற மனக்கழிவுகளைத் தரக்கூடிய சிந்தனைகள்தான் அதிகமாக இருக்கும்.  

31.  கற்பனை வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மேலும் மூன்று தூண்களைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவை: தனிமையில் உட்கார்ந்து கற்பனை செய்தல், எதிர்காலத்திற்காகத் திட்டமிடுதல் மற்றும் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதற்காக நீண்ட நேரம் யோசித்தல். இதில் பெரும்பாலும் துயரம் தரக்கூடிய நினைவுகள்தான் இடம்பெறும். இந்த நினைவுகள் எதிர்மறை எண்ணங்களைத்தான், உணர்ச்சிகளைத்தான் தோற்றுவிக்கும். இந்த எண்ணங்களும், உணர்ச்சிகளும் மேற்கூறிய எதிர்மறை மனக்கழிவுகளைத்தான் உற்பத்தி செய்கின்றன.. இந்தக் கழிவுகளை, நீங்கள் முயற்சித்தால் குறைக்க முடியும்; இல்லாமலேயும் செய்ய முடியும்.

32.  நாமாக இழுத்துப்போட்டுக் கொள்ளும் அறியாமை மனக்கழிவுகள்!
மேலை குறிப்பிட்ட மனக்கழிவுகளில் தேவையற்ற கழிவுகள் நமது அறியாமையால் சேருகின்றன.
முதல் பகுதி: கடந்த காலம் செல்லாக் காசுக்குச் சமம். அதைக் கடைக்காரனிடம் கொடுத்து எதையும் வாங்க முடியாது. எதிர்காலம் இறைவனுக்குச் சொந்தம். அந்தக் காலத்தில் கோட்டை கட்டிவிடலாம் எனத் திட்டமிடுவது, இறைவனுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாகிவிடும். அப்படி ஆக்கிரமிப்பு செய்யும்போது அதற்குரிய தண்டனை கிடைக்கும். நமக்குச் சொந்தமான காலம் ‘அக்கணம்தான் (LIVING PRESENTLY IN ATTENTIVE LIFE)”. ஆகவே கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்கால நடக்கப்போகும் நிகழ்வுகளையும் இணைத்து வரக்கூடிய எண்ணங்களைத் தவிர்த்து, ‘அக்கணத்தில்’ வாழப்பழகிக்கொள்வதால், அதாவது கவனவாழ்க்கை வாழப்பழகிக்கொள்வதால், நாமே வரவழைத்துக் கொள்ளும் தேவையில்லாத கழிவுகள் மனதில் தேங்குவதை தவிர்த்து விடலாம்..

இரண்டாம் பகுதி: கற்பனை வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கும் முதல் தூண், தனிமையில் உட்கார்ந்து வாழ்க்கையைப் பற்றிய கற்பனை. இந்தக் கற்பனையில் ஒரு அழகான பங்களாவின் போர்டிகோவில் உயர் பதவியில் இருந்து கொண்டு, தனது அழகான மனைவியுடன், தனது இரண்டு அழகிய குழந்தைகளுடன் காரில் வந்து இறங்குவது போல கற்பனையில் ஒரு நொடியில் நினைக்கலாம். உண்மை வாழ்க்கையில் சொந்தமாக ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு கூட முடியாத நிலை ஏற்படலாம்; மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;; குழந்தைகள் பிறக்கலாம், பிறக்காமலும் போகலாம்.

ஆகவே கற்பனையில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் எதார்த்த நிலைக்கு அப்பால் நமது முயற்சிக்கு எட்டாத வெகு தூரத்தில் இருக்கின்றன. ஆகவே கற்பனைக்கு செலவழிக்கும் நேரத்தில் ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாமே! கற்பனையின்படி நடக்காதபோது ஏமாற்றம் என்னும் மனவழுத்த கழிவு மனதில் சேருகிறது. கற்பனை செய்வதைத் தவிர்த்து அறியாமைக் கழிவை தவிர்த்து விடலாமே!

கற்பனை வாழ்க்கையின் இரண்டாவது தூண் திட்டமிடுதல்: எதிர்காலத்தில் நடத்தப்போகும் நிகழ்வுகளுக்காக, உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக இறைவனால் வழங்கிய ‘அக்கணத்தில்’ திட்டமிடலாமா? ‘அக்கண நேரத்தை’ வீணாக்கலாமா?. இதுதான் என்னுடைய கேள்வி  ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் “எதிர்காலம் இறைவனுக்குச் சொந்தம்! அந்தக் காலத்தை, மனிதன் ‘அக்கணத்தில் வாழும்போது செய்யும் நல்லது கெட்டதுக்குத் தகுந்தாற்போல வெகுமதி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறான். அதை ஆக்கிரமிப்புச் செய்யும்போது மனிதன் போடும் திட்டத்தை தவிடுபொடியாக்கி நிறைவேறாமல் செய்து விடுகிறான்.” திட்டம் நிறைவேறாமல் போகும்போது ஏமாற்றம், பணவிரயத்தால் ஏற்படும் விரக்தி போன்ற மனக்கழிவுகள் ஏற்பட வாய்ப்பேற்கிறது. இது நாமா கழிவை இழுத்து மனதில் தேங்கி வைப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா! திட்டமிடுவதைத் தவிர்த்து அறியாமைக் கழிவு தேங்குவதைத் தடுக்கலாமே! சுவாமி விவேகானந்தர்,தான் போட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேறுவதில்லை என்று அறிந்து தனது இறுதிக் காலத்தில் திட்டமிடுவதை நிறுத்தி விட்டாராம்.

மூன்றாவது பகுதி: பிரச்சனைக்கு நீண்ட நேரம் யோசித்து முடிவு எடுத்தல்; நீண்ட நேரம் யோசித்தாலே மனக்கழிவுகள் ஏற்பட்டு தேங்க ஆரம்பித்து விடும். முடிவு எடுப்பதற்கு நீண்ட நேரம் யோசிக்காமல் சிறிது நொடிகள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மறந்து விடுங்கள். சிறிது நேரத்தில் முடிவு தானாக வரும்.

33.  மேலை குறிப்பிட்ட எல்லா நேரங்களிலும் எதையாவது நினைத்துக்கொண்டேயிருத்தல், கற்பனை செய்தல், திட்டமிடுதல், முடிவெடுத்தல் ஆகிய வற்றைத் தவிர்த்து, மேலே குறிப்பிட்ட அறியாமை மனக்கழிவுகள் மனதில் தேங்குவதை தடுத்து நிறுத்துங்கள்!

34.  தவிர்க்க முடியாத, உண்மையான மனக்கழிவுகள்
மேலே குறிப்பிட்ட கழிவுகள், அறியாமை மனக்கழிவுகள் என்றால், இப்பொழுது சொல்லப்போகும் கழிவுகள்தான் உண்மையான, தவிர்க்க முடியாத மனக் கழிவுகளாகும். ஒரு கொடூர விபத்தை, கொலையைப் பார்க்கிறீர்கள்; அப்பொழுது ஏற்படும் அதிர்ச்சி நீண்டகாலம் தேக்கமுற்ற கழிவாக மனதில் தங்கிவிடுகிறது. இதேபோல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும். பிறத்தியார், உங்கள் உறவினர், குடும்பத்தார் உட்பட, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், உங்களுக்குக் கெடுதல் செய்யும்போது ஏற்படும் கோபம், அதிர்ச்சி, பயம், பதட்டம் முதலியன உங்கள் மனதில் தேக்கமுற்ற கழிவுகளை உற்பத்தி செய்கின்றன.

35.  தொலைக்காட்சி நெடுந் தொடர்களை பார்க்கும் குறிப்பாகப் பெண்கள், அக்காட்சிகளில் வரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், காவல் நிலையத்தில் நடக்கும் கொடூர காட்சிகள், மருத்துவ மனையில் பிரசவ துயரச் சம்பவம் இன்னும் பல துயரச் சம்பவங்கள் மேலே குறிப்பிட்ட மனக்கழிவுகளை தேங்கச் செய்கின்றன. இவைகள்தான் தவிர்க்க முடியாத உண்மையான கழிவுகளாகும். இந்தக் கழிவுகளைத்தான் நீங்கள் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். TV பார்க்கும் நெரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

36.  மேற்குறிப்பிட்ட கழிவுகள் தேங்காமல் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருந்தால், மனநிலை பாதிக்கப்படாது; தேக்கத்தின் அளவு அதிகமாகும்போதுதான் மனவழுத்தம் (DEPRESSION) என்னும் மனநோய் உண்டாகிறது. ரசாயனப் பொருட்களை அடிக்கடி சேர்த்தாலும், மூளையின் செயல் முறைகளில் கோளாறு ஏற்பட்டு மனவழுத்தம் தோற்றுவிக்கப்படுகிறது. இது முற்றும்போதுதான் மனக்கோளாறு (MENTAL DISORDER) என்னும் பைத்தியம் ஏற்பட்டுவிடுகிறது.

37.  மனம் என்பது ஒரு அருவம். ஆகவே மனதில் ஏற்படும் நோய்க்கு அதே அருவத்தின் மூலமாகத்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் (முள்ளை முள்ளால் எடுப்பது போல). ஒரு உருவம் கொண்டு அதாவது மாத்திரை கொண்டு சிகிச்சை அளிப்பது சரிவராது. ஆகவே மனநோய்க்கு பக்கவிளைவுகள் ஏற்படாமல் சிகிச்சை அளிக்க வேண்டுமானால், அந்த சிகிச்சையை மருத்துவ மனப்பயிற்சி மூலமாகவும், அக்குபங்சர் மூலமாகக் கொடுப்பதுதான் சிறந்தது.

38.  மேலே குறிப்பிட்ட அறியாமை மனக்கழிவுகள், மற்றும் உண்மையான, தவிர்க்கமுடியாத மனக்கழிவுகள் எங்கே சேர்ந்து தேக்கமுறுகின்றன என்பதைப் பார்ப்போம். அதைத் தெரிந்தால்தானே அதை பெருக்கி தூய்மைப்படுத்த முடியும்! அந்த இரண்டு மனக்கழிவுகளும் மார்புப் பகுதியின் மையத்தில் பள்ளமாக குவிந்திருக்கும் பகுதியில்தான் சேர்ந்து தேங்குகின்றன.

39.  அறியாமை மனக்கழிவையும், உண்மையான, தவிர்க்கமுடியாத மனக்கழிவையும் தேங்கவிடாமல் மனதைவிட்டு எப்படி அகற்றுவது? மார்புப்பகுதியை நோக்கி மருத்துவ மனப்பயிற்சியை செய்வது ஒன்றுதான் சிறந்த முறையாகும். 15 நிமிடங்கள் வீதம் காலை, மதியம், மாலை, இரவு படுக்கையில் தினசரி தவறாது செய்ய வேண்டும். ஓரளவுதான் இதில் கழிவை வெளியேற்ற முடியும். மனிதன் ஊழ்வினையில் ஆட்பட்டிருப்பதால், மீண்டும் மீண்டும் மனக்கழிவுகள் சேர்ந்து, தேங்கிக்கொண்டே யிருக்கும். கவனவாழ்க்கையில்தான் தேங்கவிடாமல் தினசரி வெளியேற்றிக்கொண்டே இருக்கும்.  நான் 2006-லிருந்து கவனவாழ்க்கை வாழ்வதால், என்னிடம் மனக்கழிவுகள் தேங்குவதில்லை.

40.  பேராசை, கோபம், பயம், பொறாமை, வெறுப்பு, பதட்டம் முதலிய எதிர்மறை உணர்வுகள் தேக்கமுற்ற கழிவுகள் என்பதற்கு என்ன ஆதாரம்?
உடலில் ஏற்படும் கழிவுகளில் ஒன்றான வலிக்கு மருத்துவ மனப்பயிற்சி செய்யும் போது, வாயு, சளி, ஏப்பம், சிறுநீர், மலம், வியர்வை மற்றும் உமிழ்நீர் முதலியன வெளியேற்றப்பட்டு வலி குணப்படுத்தப்படுகிறது. இதேபோலத்தான் மேற்குறிப்பிட்ட எதிர்மறை உணர்வுகள் தோன்றி அவை மனவழுத்தமாக மார்பின் மையப் பள்ளத்தில் சேர்ந்து மனம் கணக்கும். அப்போது மார்பை நோக்கி மருத்துவ மனப்பயிற்சி செய்யும்போது, மேற்குறிப்பிட்ட கழிவுகளான வாயு, சளி, ஏப்பம் முதலியன வெளியேற்றப்பட்டு, மனவழுத்தம் குணப்படுத்தப்படுகிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட எதிர்மறை உணர்வுகள் தேக்கமுற்ற அல்லது நாள்ப்பட்ட கழிவுகளாக மாறுகின்றன.  

41.  உடலில் ஏற்படும் உடல் கழிவுகள்:
அரோமணியின் ஒன்பது இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்காமல் போவதால் உடல் பலவீனமடைகிறது. நாம் செய்யும் தொழில்களின் மூலமும் உடல் பலவீனமடைகிறது. அதாவது பஞ்சாலைகளில் வேலை பார்ப்பதாலும், சிமெண்ட் புழங்கும் தொழில்களில் ஈடுபட்டாலும், பெய்ண்ட் தொழில், சிற்பத் தொழில், தூசு தும்பு மற்றும் மற்ற அசுத்தங்களை அப்புறப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டாலும், சுருங்கச் சொல்லும்போது காற்று மாசுவில் (AIR DUST) தொழில் செய்யும் பொழுதும், உடல் பலவீனமடைகிறது. மாசு அடைந்த தண்ணீரில் தொழில் செயவதாயிருந்தாலும், கணனியில் நீண்ட நேரம் பணிபுரிவதாலும், செல் போனை அதிக நேரம் பயன்படுத்துவதாலும், A.C.அறையில் உட்கார்ந்து எல்லாகாலங்களிலும், எல்லா நேரங்களிலும் பணி செய்வதாலும், தொலைக்காட்சி நிலயங்களில் கண் விழித்து நீண்ட நேரம் பணி செய்வதாலும் உடல் பலவீனமடைகிறது.

42.  4-2-2015-ந் தேதி ’THE HINDU’ ஆங்கில நாளிதழில் வெளியிட்ட கட்டுரையின்படி, “12 வயதுக்கு மேல் 20-க்குள் உட்பட்ட இளைஞர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் கணினிகளிலும், கைத்தொலை பேசிகளிலும் நேரத்தைச் செலவிட்டால், இரவு நேரத்தில் ஐந்து மணி நேரத்திற்குக் குறைவாகவே தூங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்குத் தூக்கம் வருவதற்கு 30 நிமிடங்களுக்குப் பதிலாக 60 நிமிடங்கள் ஆகிறது ”. என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

43.  “ஒரு நாளைக்குச் சராசரியாக ஐந்து மணி அல்லது அதற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு (TV) மிகவும் முக்கியமான நுரையீரல் தமனிகளில் (PULMONARY ARTERIES) ஒன்றில் அடைப்பு ஏற்பட்டு இறப்பு வரை கூடக் கொண்டுசெல்லும் ஒரு மோசமான நிலைக்குத் தள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.  நன்றி: ’THE HINDU’ தேதி:31-8-2015

44.  மேற்சொன்ன ப,லவீனங்கள் செரித்தலைத் தாக்குகிறது. இதனால் செரித்தலின் அளவு சுருங்கி, வீணாகும் கழிவுபொருட்களின் அளவு அதிகரிக்கிறது. கழிவுப்பொருட்களின் அளவு மேலே குறிப்பிட்டதைப்போல, அளவாக இல்லாமல் கூடுதலாக இருக்குமானால், அப்பொருட்கள் வெளியேறாமல், தேங்க ஆரம்பிக்கும். இப்படி தேக்கமுற்ற கழிவுப் பொருட்கள்தான் காலாண்டு பராமரிப்பின்போது வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுகள்தான் வாந்தி, பேதி, மயக்கம், இருமல், சளி, முதலியன. இந்த பராமரிப்பு முடிய ஒருவாரம் ஆகலாம்.

45.  நாம் சாப்பிடும் ரசாயன பொருட்களும் கழிவைச் சேர்க்கிறது. இயற்கையின் விதி மீறல்கள் அதிகரிப்பால், கழிவுப்பொருட்களின் தேக்கம் அதிகமாகி அரை ஆண்டுப்பராமரிப்பு முடிவடைவதற்கு ஒருமாதம் கூடப் பிடிக்கலாம். அதாவது நோய்களின் தீவிரம் குறைந்து குணமாவதற்கு ஒரு மாதம் கூட ஆகலாம்.

46.  அனல்மின் நிலையங்களில், வருடாந்தர பராமரிப்பு எப்பொழுதும் மழைகாலம் துவங்கும் காலத்தில் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால், மழைகாலத்தில் மழை பெய்து அணைகளில் நீர் நிரம்பியிருக்கும். அதனால் நீரிலிருந்து மின் உற்பத்தி துவங்கி, மின்விநியோகத்தில் தங்கு தடங்கள் இருக்காது. இதேபோல, உடல் ஆண்டுப்பராமரிப்பு வேலையை எப்பொழுதும் நவம்பர் மாத குளிர், மழைகாலத்தில்தான் ஆரம்பிக்கும். காரணம், மழைகாலத்தில் மக்களின் செயல்பாடுகள் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, வெட்ட வெளியில் நடைபெறும் கட்டிட மற்றும் மற்ற கட்டுமான வேலைகள், செங்கல் சூளை வேலைகள் முதலியன நடைபெறாது.  காலாண்டு, அரையாண்டு பராமரிப்பு வேலைகள் கூட வானம், மப்பும் மந்தாராமாக இருந்து மழைதூரல் போடும்போதுதான் நடைபெறும். காரணம், குளிர், மழை காலத்தில்தான், உடல் தன்னைத் தானே குளிரால் சுருக்கி, கசக்கிப் பிழிந்து, கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது. ஆகவேதான் குளிர் மழைகாலங்களில், மருத்துவ மனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதும். இறப்புகளும் அதிகமாக இந்தக் காலத்தில்தான் இருக்கும். இவ்வாறு பருவகாலம் நமது உடல்மன நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இறைவன் தெரியப்படுத்தியதை அறிந்தபோது வியப்புக்குள்ளானேன்..

47.  சென்ற ஆண்டு, எனக்கு, காலாண்டு பராமரிப்பு வேலை எப்பொழுது ஆரம்பித்து எப்பொழுது முடிந்தது என்பது எனக்குச் சரியாக ஞாபகமில்லை.  சென்ற ஆண்டு 2016-ம் ஆண்டு, மே மாதம் 25-ந் தேதிதான் என்னுடைய அரையாண்டு பராமரிப்பு வேலை துவங்கியது. அன்று தும்மல், இருமல் சளியும், மூக்கில் நீராக வடிதலுடன் பராமரிப்பு வேலை துவங்கியது. இளப்பிலிருந்து விடுபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே அது இந்தப் பராமரிப்பில் வரவில்லை. மனப்பயிற்சி மருத்துவத்தையும், அக்குப்பங்சர் மருத்துவத்தையும் இந்தப் பராமரிப்பு வேலைக்குப் பயன்படுத்தினேன்.15 நாட்களுக்குப் பிறகு பூரண குணம் கிடைத்தது.,


48.  அனல்மின் நிலையத்தில், ஒவ்வொரு வருடாந்தர பராமரிப்பின் போதும், நிலைய இயக்குபவர்கள் (OPERATORS), எந்திரங்களின் இயக்கத்தை நிறுத்தி, அதனை பராமரிப்பு செய்பவர்களிடம் (MAINTENANCE PERSONS) ஓப்படைத்துவிடுவார்கள். ஒப்படைத்து விட்டு, எந்தெந்த வேலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்று அருகிலேயே இருந்து பராமரிப்பு வேலை செய்பவர்களுக்கு சுட்டிக்காட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலே குறிப்பிட்டதைப் போல, 2016-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதியன்று, ஆத்மாவானது உடலை பராமரிப்பு வேலைக்கு உடலிடம் ஒப்படைத்தது. பராமரிப்பு வேலை முடியும்வரை ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கும். அந்த நாளிலிருந்து பராமரிப்பு வேலை துவங்கியது. எனக்கு தும்மல், இருமல், சளி, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கடைப்பு ஆரம்பித்துவிட்டது.. தொடர்ந்து இருந்தது.. அந்த நோய்கள் அதிக தொந்தரவுகளைத் தராதபடி, மருத்துவ மனப்பயிற்சி மருத்துவமும், அக்குப்பங்சர் மருத்துவமும் பார்த்துக் கொண்டன. அதேசமயத்தில் மேற்படி கழிவுப் பொருட்கள் வேகமாக வெளியேற உதவிசெய்தன. பிபரவரி மாதம் இரண்டு தேதி வரை இருமல் சளி இருந்தது இதற்குப் பிறகு அரிப்பும் சேர்ந்து கொண்டது அரிப்பு எப்பொழுதும்,எந்த வியாதியாக இருந்தாலும் கடைசியில்தான் அது வெளியேறும்.. அதற்குப் பிறகு உடலானது இறுதி கழிவுப்பொருளை அரிப்பு மூலம் வெளியேற்றியது. உடலானது தன் பராமரிப்பு வேலையை முடித்துக் கொண்டு, தன்னை ஆத்மாவிடம் மார்ச் 5-ந் தேதி  ஒப்படைத்தது. இனி இந்த பராமரிப்பு வேலையினால், உடல், உயிர், ஆத்மா மற்றும் பரமாத்மா ஆகிய நான்கும் ஒன்றிணைந்த அமைப்பு அடுத்து எட்டு மாதங்களுக்கு பணி செய்வதற்கு தயார் நிலைக்கு வந்து விட்டது.

49.  தேங்கிய கழிவு வெளியேற நான்கு மாதங்கள் தேவையா? அதுவும் இரண்டு சிகிச்சை முறைகள் மேற்கொண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் ஏற்படலாம். தேங்கிய கழிவுகளின் அளவு குறைவாக இருந்தால், நான்கு மாதங்கள் தேவைப்படாது. எழுபத்து நான்கு வயது நிரம்பிய நான், தினசரி ஏழரை மணி நேரம் கணினியிலே வேலை செய்யும்போது என்னிடம் கழிவுபொருள் அதிகமாக சேர்ந்து விடுகிறது. இறைவன் வெளிப்படுத்திய உடல்மன நலம் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல நான் அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அதுவும் கோடைகாலத்திலும், வசந்த காலத்திலும்தான் வேலை செய்யமுடியும். குளிர்காலத்தில் உடல் பராமரிப்புச் செய்யும்போது கணினியில் வேலை செய்வதை முழுவதுமாக நிறுத்திவிடுவேன். அப்படி நிறுத்தாவிட்டால், பராமரிப்பு வேலை முடியும் நாள் தள்ளிப் போகும். ஆகவேதான் எனது உடல் எனது உடலைப் பராமரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்டது.

50.  இரண்டு சிகிச்சை முறைகளைப் பற்றி சொன்னேன். அக்குபங்சர் சிகிச்சை முறை அண்டத்திலிருந்து இறை ஆற்றலை இழுத்து வந்து, பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குக் கொடுத்து,  அங்குள்ள தேக்கமுற்ற கழிவுகளை, இருமல், சளி, தும்மல், மூக்கில் நீராக வடிதல், மூக்கடைப்பு ஆகியவற்றின் மூலமாக விரைவில் வெளியேற்றுகிறது. இப்படி, அக்குபங்சர், உடல், தனது பராமரிப்பு வேலையை விரைவில் முடிக்க உதவுகிறது..

51.  அப்படி மேற்குறிப்பிட்ட தேக்கமுற்ற கழிவுகள் (இருமல், சளி,தும்மல், மூக்கில் நீராக வடிதல்,மூக்கடைப்பு முதலியன)  வெளியேறும் போது ஏற்படும் தொந்தரவுகளுக்கு. தொந்தரவுகள் தரும் வேதனைகளுக்கு, வலிகளுக்கு வாயு, சளி, ஏப்பம், சிறுநீர், மலம், உமிழ்நீர் ஆகிய இறுதியாக உடலில் தேங்கியுள்ள கழிவுபொருட்கள்தான் காரணம். இவற்றை, மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம், வெளியேற்றி,, அந்தத் தொந்தரவுகள் கொடுக்கும் வேதனையை, வலியை இல்லாமல் செய்துவிடுகிறது.

52.  மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தில் மனவாற்றல் அதாவது இங்கும் இறையாற்றல்தான் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மனதின் உத்தரவால் ரத்தம் ஏவப்பட்டு, நோயுள்ள பகுதியில் ரத்தம் தான் கொண்டுவந்துள்ள ஆற்றலை செல்களுக்கு அளித்து மேற்குறிப்பிட்ட கழிவுப்பொருட்களை (வாயு, சளி, ஏப்பம், சிறுநீர், மலம், உமிழ்நீர் முதலியன) விரைவில் வெளியேற்றச் செய்கிறது.

53.  மேற்குறிப்பிட்ட கழிவுபொருட்களை வெளியேற்றும் காலத்தைக் குறைக்க வேறு வழியில்லையா? 
ஒன்பது இயற்கை விதிகளை சரியாக கடைப்பிடித்து வந்தால், பலகீனத்தைக் குறைத்து, தேங்கும் கழிவுப்பொருட்களையும் குறைத்து, பராமரிப்புக் காலத்தை இரண்டு மாதங்களாக அல்லது ஒரு மாதமாகக்  குறைக்கலாம். ஆனால் செய்யும் தொழில்களின் மூலம் ஏற்படும் பலகீனத்தையும் அதனால் ஏற்படும் தேக்கமுறும் கழிவுகளையும் குறைக்க முடியாது..அதற்குரிய காலத்தை உடல் எடுத்துத்தான் ஆகும்.

54.  வேறு மருத்துவ மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு பராமரிப்புக் காலத்தைக் குறைக்க முடியாதா? நான் மேற்கூறிய இரண்டு மருத்துவங்களில் சிகச்சை எடுப்பதற்கு முன்பு, இளப்பு உட்பட மேற்குறிப்பிட்ட நோய்கள் இருந்த காலங்களில் எல்லா மருத்துவங்களிலிருந்தும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். அந்த மாத்திரைகளையும் நவம்பர் முதல் மார்ச் வரை எடுத்துத்தான் ஆகும்படியான நிலைதானிருந்தது. இடையில் ஓரிரு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்து பார்ப்போம் என்று விட்டுவிட்டால், இருமல் சளி, இளப்பு மீண்டும் வந்து விடும். உடலின் பராமரிப்பு வேலையைப்பற்றி தெரியாமலிருக்கும்போது அப்பொழுது நான் நினைத்தது “வெயில் காலம் வந்ததால்தான் சளி, அரிப்பு முதலியன இல்லாமல் போய்விட்டது” ஆனால், இப்பொழுதுதான் தெரிகிறது, ”பராமரிப்பு வேலை முடிந்ததால்தான் சளி, அரிப்பு இல்லாமல் போகிறது” என்பது.  

      மூன்றாவது வகையான நிரந்தர தேக்கமுற்றக் கழிவை உடல் எப்படி
      வெளியேற்றுகிறது?
55.  உடல் வெளியேற்றமுடியாத கழிவை நிரந்தர தேக்கமுற்றக் கழிவு என்று சொல்கிறோம். இந்தக் கழிவை வெளியேற்ற கிருமிகளைப் படைத்து கழிவுகளை அழிக்கிறான் இறைவன்.

56.  நோய்களை உண்டாக்கும், பரப்பும் கிருமிகள்
மேலே, உடல் தன்னிடமுள்ள தேக்கமுற்ற உடல் மற்றும் மனக் கழிவுகளை வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத் தான், அந்த தொந்தரவுகள் தரும் வேதனைகளைக் கொண்டுதான் நோய்கள் என்று சொல்கிறோம் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். எப்பொழுதும் வணிகம் உண்மைக்கு நேர் எதிரான கொள்கையைத்தான் கொண்டிருக்கும். வணிகம் என்ன சொல்கிறது? நோய்கள் உடலில் உற்பத்தியாகும் கிருமிகளாலும், காற்று, நீர் ஆகியவற்றில் கலந்து வரும் கிருமிகளாலும்தான் நோய்கள் பரவுகின்றன என்று வணிகம் சொல்லுகிறது. இது உண்மயல்ல.

57.  லூயிஸ் பாஸ்டர் என்னும் அறிவியலர் (SCIENTIST) 1864-ம் ஆண்டு, உடலில் காணப்படும் நுண்ணுயிர்கள் என்னும் கிருமிகள் நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்று பாரீஸ் வியன்னா பல்கலைக்கழகத்தில் அவர் நடத்திய ஆய்வின் முடிவைத் தெரிவித்தார். இவருக்கு முன்னாலேயே டாக்டர் பீச்சாம்ப் என்பவர்தான் உடலில் கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அவர் லூயிஸ் பாஸ்டருடைய கொள்கையை, அதாவது உடலிலுள்ள கிருமிகளால் நோய்கள் உண்டாகிறது என்பதை மறுத்தார்; நிரூபித்தும் காட்டினார். அதேபோல இன்னும் டாக்டர் பெட்டின் காபர் (பவேரியா, 1892), டாக்டர் ரேடர்மண்ட் விஸ்கான், டாக்டர்.ஜான் பி.பிக்ரேசர் (கனடா, 1916), டாக்டர் எம். பெட்டோ பேலீ, டக்ளஸ் ஹ்யூம் ஆகிய பல விஞ்ஞானிகள்  ‘நோய்கள் கிருமிகளால் தோன்றுவதில்லை என்று அறிவித்தார்கள்.  

58.  லூயிஸ் பாஸ்டர் தன் மரணப்படுக்கையில் இருந்தபோது “உடல் தான் எல்லாமே; கிருமிகள் ஒன்றுமில்லை (TISSUE IS EVERYTHING; GERM IS NOTHING)” என்று தன் ஆய்வுகளுக்கு எதிரான கருத்தை தானே வெளியிட்டார். இருந்தாலும் வணிகம் வெற்றிகண்டு இன்றுவரை ‘நோய்கள் கிருமிகளால் உண்டாகின்றன’ என்ற கொள்கையை வைத்து, மக்களின் அறியாமையாலும், பயத்தாலும் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.  

59.  ஒரு நாள் என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற நோயாளி நண்பர் (35) வந்தார். அவர் மிகவும் கவலை மிகுந்தும், குழப்பத்துடனும், வாழ்க்கையை வெறுத்தவர் போலவும் காணப்பட்டார்.

60.  “என்ன! ஒரு மாதிரி இருக்கிறாயே!” என்று கேட்டேன். அதற்கு அவர் உடனே பதில் சொல்லாமல் தயங்கினார்.

61.  “சும்மா எதுவாயிருந்தாலும் சொல்லுப்பா!’ என்று பேசுவதற்கு ஊக்கம் கொடுத்தேன்.

62.  அதற்கு அவர் “மூன்று மாதங்களுக்கு முன்னாள் ஒரு விசேஷத்திற்கு வேறு ஊருக்குப் போயிருந்தேன். அங்கு இலேசாக மது அருந்தியிருந்தேன். வேறொருவனுடன் அந்த ஊரில் ஒரு மாதிரியான பெண்ணுடன் தகாத உறவு கொண்டேன். இப்பொழுது அந்தப் பெண் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவதாக என் நண்பன் சொன்னான். நீயும் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துப் பார்” என்று சொன்னான்.

63.  எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது. “தனக்கு அவள் மூலமாக எய்ட்ஸ் நோய் இருக்குமோ” என்று அஞ்சுகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. நான் அவருக்கு “HIV என்ற ஆள்க்கொல்லி கிருமியே இல்லை. கிருமியால் நோய் உண்டாவதில்லை  என்னும்போது எய்ட்ஸ் (AIDS) என்னும் நோயும் வணிகத்தின் பொய்யான கற்பனைதான் என்று தெரியப்படுத்தினேன் ஆனால் சமாதானமாகவில்லை. பிறகு தெளிவுபெற ஒரு எய்ட்ஸ் சம்பந்தமான புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன்.

64.  மூன்று நாளைக்கு ஒருமுறை வந்து, சோகத்துடன் உட்கார்ந்து கொள்வார் “ எனது மனைவியும்,சுற்றியுள்ள எனது உற்றார் உறவினர் என்ன நினைப்பார்கள்; எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது” என்று புலம்புவார்.. தெளிவுபடுத்தி விளக்கியபிறகும் அவர் பயம் அவரைவிட்டுப் போகவில்லை. அவருக்கு பயத்திற்குரிய சிகிச்சை அளித்தேன். மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனப்பயிற்சியை காலை, மதியம், பிற்பகல், இரவு படுக்கையில் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் வீதம் ஒரு வாரத்திற்குச் செய்தபிறகு தன்னை வந்து பார்க்கும்படி அனுப்பினேன். அப்படியே ஒரு வாரம் கழித்து சிரித்த படியே வந்தார். “எல்லாம் சரியாகிவிட்டதா?” என்று கேட்டேன். அவர் புன்முறுவலுடன் “அந்தப் பயம் என்னைவிட்டுப் போய்விட்டது” என்று சொன்னார்.

65.  மேற்குறிப்பிட்ட நோயாளி நண்பருடைய கதையை கேட்டபிறகுதான், HIV கிருமியைப் பற்றியும், எய்ட்ஸ் நோயைப்பற்றியும் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இக்கட்டுரை, எனது நண்பரைப்போல பயத்தில் உறைந்துபோய்க்கொண்டிருக்கும் அனைத்து வயதினருக்கும் HIV கிருமி மற்றும் எய்ட்ஸ் பற்றிய பயத்தைப் போக்கி சரியான வாழ்க்கைப் பாதையில் அடிஎடுத்து வைக்க வழிவகுக்கும என்று நம்புகிறேன்.

66.  சுவிட்ஸர்லாந்தின் பெர்ன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆல்ப்ரெட் ஹாஸ்ஸிக் கூறுகிறார் “எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய் என்று பிரச்சாரம் செய்வதை ஒழிக்க வேண்டும்”.

67.  கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹாரி ரூபின் கூறுகிறார் “எய்ட்ஸூக்கு காரணம் HIV கிருமி தான் என்பதை நிரூபிக்க முடியவில்லை’

68.  மரபணு உயிரியல் துறைப் பேராசிரியர் ஹார்வி பியாலி (ஸ்பின், ஜூன்1993) “HIV என்பவை மிகச் சாதாரண கிருமிகள். விஞ்ஞானிகள் கூறும் அசாதாரணமான விளைவுகள் HIV கிருமிகளால் சாத்தியமே இல்லை” என்று கூறுகிறார்

69.  நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வால்டர் கில்பர்ட் (ஆம்னி, சூன்1993) கூறுகிறார் “எய்ட்ஸ் நோய்க்கு HIV வைரஸ் காரணமல்ல.”

70.  HIV கிருமியை முதன் முதலில் கண்டுபிடித்த பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் லுக்மோன் பிக்னியர் (மியாமி, ஹெரால்டு தேதி:23-12-1990 ) “HIV கிருமி எய்ட்ஸ்க்குக் காரணமல்ல; இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ளன.” என்றார்.
நன்றி. அக்கு ஹீலர் அ.உமர் பாரூக். அக்குபங்சர்-வரலாறும் தத்துவங்களும்-பாட நூல்.

71.  மேலே கூறிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு புதிய கிருமியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு HIV கிருமி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கிருமி எய்ட்ஸ் நோய்க்குக் காரணமல்ல என்பது தெளிவாகிறது. அப்படி ஒரு  நொய் இருக்குமானால், அந்த நோய்க்கும் தேக்கமுற்ற கழிவுதான் காரணம். வணிகம்தான் HIV கிருமியால் எய்ட்ஸ் நோய் உண்டாவதாகவும், ஆள்க்கொல்லி நோயென்றும் பயத்தை உண்டுபண்ணி லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறது.

72.  என்னிடம் வலிமையான, அசைக்கமுடியாத ஆதாரம் உள்ளது
நோய்கள் கிருமிகளால் உண்டாகவில்லை; தேக்கமுற்ற கழிவுகளால்தான் உண்டாகின்றன என்று நிரூபிப்பதற்கு என்னிடம் வலிமையான ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரத்தை அருளிய இறைவனுக்கு நன்றி. அந்த ஆதாரம் இருந்ததால்தான் இந்த கட்டுரையை எழுத எனக்குத் துணிச்சல் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, உலகின் எந்த சபையிலும் என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்.

73.  12-12-2000-ல் தான் இரட்டை மருத்துவத்தில் (TWIN MEDICINE-TM) இரண்டாவது மருத்துவமாக மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை (MEDICINE OF MEDICINAL MEDITATION-MMM) கண்டுபிடித்தேன். முதன் முதலில் மருத்துவ மனப்பயிற்சி (மம) யின்  (MEDICINAL MEDITATION-MM) மூலம் தலிவலியைக் குணப்படுத்தினேன். அடுத்த ஓரிரு மாதங்களில், பூச்சிக்கடியால் ஏற்பட்ட வலி, அளவுக்கு அதகமாகச் சாப்பிட்டதால் வயிற்றில் ஏற்பட்ட மந்த உணர்வு, பிறகு இளப்பு (WHEEZING), அந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் எனது கவனம் மம- செய்யும்போது உடலில் ஏற்படும் நிகழ்வுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். மம-செய்தவுடன் உடல் முழுவதும் வெப்பம் பரவுகிறது. அதற்கப்புறம் வியர்வை துளிர்க்கிறது; நோயின் தீவிரம் குறைய ஆரம்பிக்கிறது; பிறகு வாயு (GAS) வெளியேறுகிறது; நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் (BELCHING) வெளியேறுகிறது; சிறுநீர் (URINE) அதிகமாகச் சுரக்கிறது; உமிழ்நீர் (SALIVA) அதிகமாகச் சுரக்கிறது; மலம் (FAECES) அதிகமாகச் சேர்ந்திருந்தால் அதுவும் இறுதியாக வெளியேறும். அது வெளியேறும்போது, நோய் உதாரணமாக வலி (PAIN) முற்றிலுமாகக் குணமாயிருக்கும். நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள நோய்களுக்கு மம-செய்து  குணப்படுத்தியிருக்கிறேன்.

74.  எனது தலையிலிருந்து ஆரம்பிக்கிறேன். தலைவலி, தலைவலியுடன் காய்ச்சல், காது வலி, தும்மல், சளி, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கடைப்புடன் தலைவலி, பல்வலி, பல்லீரல் வலி, பல்வலியுடன் தலைவலி மற்றும் காய்ச்சல், தொண்டை கரகரப்பு, புரைஏறுதல், தோள்ப்பட்டை வலி, நெஞ்சுவலி, நெஞ்சு கரிப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், இளப்பு, வயிற்றில் மந்த உணர்வு, வயிற்று வலி, இடுப்பு வலி, ஹெர்னியா வலி,  சிறுநீர் எரிச்சலாக வருதல், மூட்டு வலி, கால் ஆணி, நகச் சுத்தி, தெரியாமல் பிளேடு கத்தியால் அறுத்துக்கொள்ளுதல், முதலியன.

75.  என்னை ஒரு முறை பூச்சி கடித்திருக்கிறது. பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது மூன்று முறையும், கீழே குனிந்து எழும்போது ஜன்னல் கதவில் மோதி இரு முறையும் தலை அடிபட்டிருக்கிறது. இருமுறை கதவிடுக்கில் விரல்களை விட்டு நசுக்கிக் கொண்டேன். பேருந்தில் பயணிக்கும்போது பல முறை எனது கால் விரல்களை நடத்துனரும், பயணிகளும் நசிக்கியிருக்கிறார்கள். ஒரு முறை மிக்ஸி பாதத்தில் விழுந்திருக்கிறது. இந்த மாதிரியான சிறு சிறு விபத்துக்கள் நடக்கும்போது எவ்வளவு பொறுக்கமுடியாத வலியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உடனே வீங்கி புடைத்து விடும். மம செய்தவுடன் வலி குணமாகி, வீங்காமல் அமுங்கிவிடும். தடவிப் பார்ப்பேன். எந்த வீக்கமும் தலையில் அடிபட்ட இடத்தில் இருக்காது.

76.  மனம் மிகவும் சஞ்சலத்தில் இருக்கும்போதெல்லாம், மார்பை நோக்கிச் செய்யும் மனப்பயிற்சியை செய்து சரி செய்வேன். கவனவாழ்க்கையில் இருப்பதால், மனச்சஞ்சலங்கள் அப்போதைகப்போது வெளியேறிக்கொண்டே யிருக்கும். உடல் உறுப்புக்களின் தேய்மானமும் குறைந்து, சாதாரண கழிவுப்பொருட்களும் தேங்காமல், அப்போதைக்கப்போது வெளியேறிக் கொண்டேயிருக்கும்.

77.  மேற்கூறிய நோய்களை அதற்குரிய மருத்துவ மனப்பயிற்சிகளை செய்துதான் குணப்படுத்துவேன். அவ்வாறு செய்யும்போது மேற்சொன்ன சாதாரண கழிவுகள் வெளியேற்றப்பட்டு குணமாகின்றன. எந்த நோய்க்கிருமிகளும் கொல்லப்பட்டு குணப்படுத்தப்படவில்லை.

78.  எனது ஆராய்ச்சிக்காகவும், மக்களின் அறியாமையை விலக்கி, பயத்தைப் போக்குவதற்காகவும் நான் கடந்த மூன்று மாதங்களாக கைகளைக் கழுவாமல்தான் சாப்பிடுகிறேன். அருவருப்பான பொருளைத்தொட்டபோதும், கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்திய போதும் கைகளைக் கழுவியிருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இதுவரை வரவில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. 

7
80.  நவீன மருத்துவத்தில் உள்ள ஆதாரம்.
நவீன மருத்துவத்திலேயும், நோய்கள் கிருமிகளால் உண்டாவதில்லை, தேக்கமுற்ற கழிவுப் பொருள்களால்தான் உண்டாகின்றன என்பதற்கு ஆதாரம் உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை குளிர்காலம் வந்தால், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி, சளி, இளப்பு ஆகியவற்றிற்கு மருந்து எடுத்துக்கொள்வேன். இதற்கு அமாக்‌ஷ்லின் 250மிகி (AMOXLIN 250mg), பாராசிடாமல் (PARACITAMOL 500mg) 500மிகி மற்றும் சிட்டிரிசன் 2 மிகி (CITIRIZEN 2mg) 15 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வேன். கடைசி நாளில் வயிற்றோட்டம் ஏற்படும். மறுநாள் சளி, இளப்பு சுத்தடியாக இருக்காது. அதாவது கழிவுப்பொருள் வெளியேற்றப்பட்டு, வயிறு சுத்தமாக ஆகிவிடுவதால் சளியும், இளப்பும் இல்லாமல் போய்விடுகிறது.

81.  பல ஆண்டுகளாக எனக்கு மேற்கூறப்பட்ட அநுபவம் உண்டு. அந்த அநுபவத்தை எனக்குக் கொடுத்து, அரோமணியின் ஆறாவது விதியை இறைவன் அருளினான். ஆறாவது விதியானது, வயிற்றில் வெளியேறாமல் தங்கியிருக்கும் கழிவுப் பொருட்களின் அளவுக்குத் தகுந்தாற்போல உடல் பலவீனமாகி நொய்கள் உண்டாகின்றன என்று கூறுகிறது. ஆகவே நவீன மருத்துவத்திலும் ‘தேங்கியுள்ள கழிவுப் பொருள் வெளியேற்றப்பட்டுத்தான் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன’ என்பது தெளிவாகிறது..

82.  டாக்டர் ஆண்டனி பீச்சாம்ப், தனது ஆய்வின் முடிவை வெளியிட்டார் “உடலில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருட்களிலிருந்து கிருமிகள் உருவாகின்றன. இக்கிருமிகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலிற்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில், கழிவுகள் தீர்ந்த நிலையில் கிருமிகள் தானே அழிந்து விடுகின்றன”

83.  சாலையில் ஒரு நாயை லாரி ஒன்று அடித்துச் சென்று விடுகின்றது. இறந்த நாயை சாலையின் ஓரமாக இழுத்துப் போட்டு விடுகிறார்கள். சில நாடகளில் அந்த நாயிடமிருந்து பொறுக்கமுடியாத நாற்றம் வரும்; பக்கத்தில் போய்ப்பார்த்தால் கரையான் அளவுள்ள சிறு சிறு புளுக்கள் மொய்த்துக்கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்துப் போய்ப் பார்த்தால், நாற்றமும் இருக்காது; அந்தப் புளுக்களும் இருக்காது. சதைப்பகுதி எல்லாம் எதுவும் இருக்காது. நாய் காய்ந்துபோய் வற்றிப்போயிருக்கும்.” இப்பொழுது சில கேள்விகள்; புளுக்கள் எங்கிருந்து வந்தது? மீண்டும் எங்கே போய்விட்டது? அழுகிப்போயிருந்த சதைப்பகுதி எங்கே போனது.  

84.  டாக்டர் ஆண்டனி பீச்சாம்ப் சொன்னதுதான் சரி. நாயின் உடலில் அழுகிப்போயிருந்த சதைப்பகுதிகளை சாப்பிடுவதற்காகவே புளுக்கள் நாயின் உடலிலே உற்பத்தி செய்யப்பட்டு, சாப்பிட வைத்து, அழுகிய தசைப்பகுதிகள் தீர்ந்தவுடன், மேலும் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாததால், அவைகள் இறந்து மடிகின்றன. மக்களுக்கு நோய்களை வரவிடாமல் தடுப்பதற்காகவே, சுற்றுப்புறச் சூழ்நிலையை தூய்மையாக வைத்திருப்பதற்காகவே இறைவன் நாயின் உடலில் புளுக்களை தானாகவே உற்பத்தி செய்கிறான்.

85.  நீங்கள் உங்களது வீட்டில் பார்த்து அநுபவப்பட்டிருப்பீர்கள். டப்பா, பானை முதலியவற்றில் பருப்பு, அரிசி முதலிய உணவுப் பண்டங்களை போட்டு மூடிவைத்தபிறகு மறந்துவிடுவீர்கள். மூன்று அல்லது நான்கு மாதம் கழித்து அந்த டப்பாவை, பானையை திறந்து பார்ப்பீர்கள். டப்பாவிற்குள் இருக்கும், பருப்பிலும், பானையில் இருக்கும் அரிசியிலும் வண்டுகள் காணப்படும். அந்த உணவுப்பொருட்கள் கெட்டுவிட்டது. இனி அவைகள் மக்கள் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்று அவற்றை காலி செய்வதற்காக, வண்டுகளை அந்த பொருட்களுக்குள்ளேயே இறைவன் படைக்கிறான். அப்படிப்பட்ட இறைவனா, உடலில் நோய்களை உண்டுபண்ண கிருமிகளைப் படைப்பான்! நிச்சயம் படைக்கமாட்டான்! சிந்தித்துப் பாருங்கள்!

86.  ஏற்கனவே எனது ‘கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை’ புத்தகத்தில், “கொசு, ஈ, எறும்பு ஆகியவற்றை இறைவன் படைத்ததே மனிதனுக்குத் தொந்தரவு கொடுப்பதற்கு அல்ல. வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்குத்தான். காரணம் மக்களின் ஊழ்வினைக்காலம் முடியும் வரை அவர்களின் உடலில் அவன் தங்கியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தில் இருப்பவன் உடலுக்குள்ளே நோய்க்கிருமிகளைப் படைப்பானா! படைக்க மாட்டான்!

87.  இறைவனின் படைப்பின் அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். நீரில் இருக்கும் முதலை தனது வாயைத் திறந்து கொள்கிறது. சிறு மீன்களின் கூட்டம் வந்து, முதலையின் வாயில் ஒட்டியுள்ள கழிவுப்பொருளை சாப்பிடுகின்றன. இப்படி ஒரு விநோதமான ஏற்பாடு!

88.  எனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று எனது ஞாபகத்திற்கு வருகிறது. எனது மலத்தின் வழியாகப் அரை அடி நீளத்திற்கு புளு ஒன்று வந்து விழுந்தது. அதைப் பார்த்து பயந்து, மிரண்டு அழுதுவிட்டேன். விழுவதற்கு முன்பு இலேசான சுருக், சுருக் கென வயிற்றில் வலி இருந்து கொண்டிருந்தது. எனது தாயிடம் சொன்னேன். அதற்கு அவர் “புளு கடிக்கிறது. ஒரு நாள் பொறுத்துக்கோ,; அது தானாகவே மலத்தோடு வந்துவிடும்” என்று சொன்னார். அவர் சொன்னதைப்போலவே இரண்டு நாட்கள் இருந்தது. மூன்றாவது நாள் வலி இல்லை. நான்காவது நாள் மலத்தோடு வந்து விழுந்தது. இரண்டு நாட்களும் வயிற்றில் உள்ள கழிவுப்பொளை அது சாப்பிடுவதுதான், சுருக் சுருக் வலிக்குக் காரணம். சாப்பிட்டு முடித்தவுடன் இறந்து வந்து விழுந்தாலும் விழலாம்; உயிரோடு கூட விழலாம்.
89.  குழந்தைக்கு அதிகப்படியான உணவு, பிஸ்கட், மிட்டாய், பழம் என்று பசி இல்லாமலே கொடுத்து வயிற்றில் அதிகப்படியான கழிவுப்பொருளை தேங்க வைத்துவிடுகிறீர்கள். இறைவன், அந்தக் கழிவுப்பொருளை சாப்பிட்டு உடல் நலத்திற்கு வழிவகை செய்ய, புளுவைப் படைத்தால், அந்தப் புளுவை ஊசி போட்டும், மருந்து கொடுத்தும் கொள்ளுகிறீர்கள்! இது அறியாமையின் உச்சகட்டம் அல்லவா!

90.  காயச்சல் (FEVER) என்று ஒன்றுதான் உண்டு. இந்தக் காய்ச்சல் தலைவலி அதிகமாக இருக்கும்போது, தலைவலியுடன் காய்ச்சலும் சேர்ந்து இருக்கும். பல்வலி அதிகமாக இருக்கும்போது, பல்வலியுடன் காய்ச்சலும் சேர்ந்து இருக்கும். நெஞ்சில் சளி, மூக்கில் தும்மல், நீர்வடிதல், வாந்தி ஆகியவை இருக்கும்போது காய்ச்சல் இருக்கும். நான் இவற்றிற்கு வலிக்குரிய மருத்துவ மனப்பயிற்சி செய்யும்போது, வலி குறைந்து கொண்டே வரும்போது காய்ச்சலும் குறைந்துகொண்டே வரும். வலி முழுவதும் குணமாகும்போது காய்ச்சலும் குணமாகிவிடும். தனியாக காய்ச்சல் மட்டும் வராது.

91.  ஆனால் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சுவைன் புளூ காய்ச்சல் என்று பல காய்ச்சல்கள் இருப்பதாக பத்திரிகைகளின் வழியாக அறிய முடிகிறது. டெங்கு காய்ச்சல் ஒரு வகை கொசுவால் உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. கொசுக்களை ஒழிப்பதற்காக நான் நடத்திய ஆராய்ச்சியில், நான், என்னை கொசுக்கள் கடிக்க பல முறை அனுமதித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம்.கொசு கடிக்கும் இடத்தில் அரிப்பு மட்டும் ஏற்படும். அதை, அரிப்புக்குரிய மருத்துவ மனப்பயிற்சி செய்து சரி செய்திருக்கிறேன் காய்ச்சல் எனக்கு வந்ததில்லை.

92.  இந்தக் காய்ச்சல்கள் வணிகக் காய்ச்சல்களே தவிர உண்மையான உடல் காய்ச்சல்கள் கிடையாது. உடலில் ஏற்படுவது கழிவுப் பொருட்களின் தேக்கத்தால் ஏற்படும் தலைவலிக் காய்ச்சல், பல்வலிக் காய்ச்சல், சளிக்காய்ச்சல் ஆகியவைதான்.

93.  காலரா (plague) நோய், அந்நொயினால் பாதிக்கப்பட்ட எலிகளில் உள்ள கிருமிகளால் (BACTERIA) மக்களிடம் தொற்று நோயாகப் பரப்பப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு பாலைவன நகரத்தில் ஒரு இந்து பெண் தெய்வக் கோவில் இருக்கிறது. அந்த மாதாத் தெய்வம் எலிகளைத் தனது பிள்ளைகளாக பாவித்து அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். ஆகவே, அந்த கோவிலில் கடந்த அறுநூறு ஆண்டுகளாக எலிகள் வளர்க்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

94.  தற்பொழுது 20,000 எலிகளுக்கு மேல் அங்கு வாழ்கின்றன. பக்தர்கள் எலிகளுக்கு உணவு அளிக்கிறார்கள். கோவில் குளத்தில் அவர்களும், எலிகளும் சேர்ந்தே தண்ணீர் குடிக்கிறார்கள். இதுவரை, அதாவது அறுநூறு ஆண்டுகளாக காலரா நோய் வரவில்லையே! அப்படி வந்திருந்தால், எலிகளை அழித்திருக்கமாட்டார்களா அந்நகர மக்கள். ஆகவே எலிகளின் கடியால், பாக்டீரியா மூலம் காலரா பரவுகிறது என்பது தவறான கருத்தாகும்.

95.  டாக்டர் B.M.ஹெக்டே. இவர் ஆங்கில மருத்துவத்தில் M.D.படித்த இருதய நிபுணர்; மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். டாக்டர் R.C.ராய் விருதும், ‘பதமபூஷன்’, ’பத்ம விபூஷன்” ஆகிய விருதுகளைப் பெற்ற பெருமை கொண்டவர்.இவர் நவீன மருத்துவத்தின் தீமைகளை எடுத்துரைத்து, மருந்தில்லா மருத்துத்தை மக்கள் பின்பற்ற விழிப்புணர்வு பெறும்படியாக எழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வருகிறார்.

96.  “இந்த நூற்றாண்டின் மாபெரும் மருத்துவ ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவர் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார், “மனித உடலமைப்பானது (META-GENOME) ஏராளமான வைரல் மரபணுக்களால் (VIRAL GENES) கட்டமைக்கப்பட்டது; அதில், 250 கோடி (2.5 TRILLION) மரபணுக்களின் கிருமிகள் இருக்கின்றன. நாம் அடிப்படையில் மரபணுக்களின் கிருமிகளால் ஆனவர்கள். ஆகவே மேற்கூறிய கிருமிகளிலிருந்து, ஒரு நாவல் வைரல் கிருமியை மைக்ராஸ் கோப்பின் வழியாக (VIRAL MARKERS) நம்மில் ஒருவரிடம் ஒரு அறிவு ஜீவியால் (AN INTELLIGENT CROOK) கண்டு பிடிப்பது ஒரு கஷ்டமும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தனித்துவமான (INGENIOUS) முறையில் (மக்களிடையே) ஒரு பெரிய பயம் ஏற்படுத்தப்பட்டது. இன்புளூயன்சா பருவத்தில் (நோய்க்காலத்தில்) (INFLUENZA SEASON), ஒரு மருந்து நிறுவனம் தனது விஞ்ஞானிகளின் மூலம், அவர்கள் கண்டு பிடித்த கிருமிக்கு ‘ஹினி (HINI)’ என்ற புதிய வைரஸ் கிருமி (VIRUS) என்று பெயரிட்டு அது பரப்பும்  நோய்க்கு, ‘ஸ்வைன் புளூ’ (SWINE FLU) என்ற புளூ காய்ச்சல் என்று பெயரிட்டார்கள். அதே மருந்து நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தை (WORLD HEALTH ORGANIZATION-WHO) தனது (மூலதனச்) செல்வாக்கால், அதை‘தொற்று நோய் (PANDEMIC)’ என்று அறிவுக்கும்படி செய்தார்கள். அந்த அறிவிப்பானது, (உலக நாடுகளின்) அரசுகள் அந்த ‘டமிபுளூ (TAMIFLU) என்ற ’அற்புதமான மருந்தை (WONDERFUL DRUG)’ வாங்கி இருப்பு வைக்கும்படியான கட்டாய நிலைக்குத தள்ளப்பட்டார்கள். இதன்மூலம் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் பதினெட்டு பில்லியன் டாலர்கள் ஜாக்பாட் (அந்த மருந்து நிறுவனத்திற்குக்) கிடைத்தது”. நன்றி: டாக்டர் B.M.ஹெக்டே, NATURE CURE WORLD, அக்-டிச, 2014

97.  ஒரு சினிமா பாடல் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அது “மைந்தனுக்குக் கோபம் வந்தால் மன்னனிடம் போகலாம். மன்னனுக்கே கோபம் வந்தால், நான் யாரிடம் போவேன்” உலக மக்கள் நோய்களுக்குப் பரிகாரம் தேட உலக சுகாதார நிறுவனத்திற்குப் போவார்கள். அந்த நிறுவனமே சோரம் போய்விட்டால், மக்கள் யாரிடம் போவார்கள்! சோரம் போகாத ஒருவன் இருகிறான் என்றால் அவன் இறைவன்தான். உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் தவறாது செய்து ஆன்மீக ஆற்றலைப் பெருக்குங்கள். அந்த ஆற்றல் உங்களை நோய்களிலிருந்து காப்பாற்றும்; வாழ்க்கையை வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்லும்.  

98.  ஆகவே உலகில் நோய்க்கிருமிகள் என்று ஒன்றுமில்லை. உடலுக்குள் படைக்கப்படும் கிருமிகள், உடலில் நிரந்தரமாகத் தேங்கியுள்ள கழிவுபொருட்களை தின்று அழிக்கின்றன. கழிவுப்பொருட்கள் தீர்ந்தவுடன் அவைகள் மடிந்து விடுகின்றன. மக்கள் உடல்மன நலம் பெற அக்கிருமிகள் கழிவுகளைச் சாப்பிட்டுவிட்டு, அவை தீர்ந்தவுடன், தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு தியாகம் செய்கின்றன. அவைகளுக்கு நாம் நன்றி சொல்லி வணங்குவோம்.

99.  தடுப்பூசி (VACCINATION):
100.தடுப்பூசி மருந்து ஒருவரது நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி அதை ஒரு (நோயை உண்டாக்கும்) கிருமிக்கு தகவமைப்பு எதிர்ப்பு சக்தியாக (adaptive immunity) மாற்றுகிறது. நோயை உருவாக்கும் கிருமிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.  இறைவன் எனக்கு அருளிய ஆராய்ச்சி முடிவின்படி, நோயை உருவாக்கும் கிருமிகளே இல்லை என்ற பிறகு, அந்த இல்லாத கிருமிக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதென்பது, ‘இல்லாத ஊருக்கு வழி கேட்டு செல்வது’ போலத்தான் ஆகும்.

101.மேலும், பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தேவைக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துத்தான் இப்பூமிக்கு இறைவன் அனுப்புகிறான். ஏனென்றால், அக்குழந்தையின் ஊழிக்காலம் முடியும் வரை அதன் உடலில் அவன் தங்கியிருப்பது அவசியமாகிறது. ஆகவே, நாம் செயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் வெளியிலிருந்து அனுப்பும் எந்தப் பொருளும் உணவைத் தவிர உடலுக்கு அந்நியப் பொருளாகும். அந்தப் பொருளை உடல் ஏற்றுக்கொள்வதில்லை. அதை ஒவ்வாமையின் (ALLERGY) மூலம் வெளியேற்றி விடும். இதனால்தான், தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. உடல் ஏற்றுக்கொள்ளாத ஒரு பொருளை நாம் வலிய திணிக்கலாமா!
தடுப்பூசியால் கேன்சர் தாக்கிய சிறுவன் பரிதாப மரணம்”
மேற்குறிப்பிட்ட தலைப்பு “தினமலர்” செய்தித் தாளின் தலைப்பு. தடுப்பூசியால் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவன், உயர்மன்ற உத்தரவின்படி, அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்பது மாத சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.

அன்பரசு ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது, அம்மை தடுப்பூசி வலது தொடையில் போட்டனர். அந்த இடத்தில் சிறிய ரத்தக் கட்டு உருவானது. சிறுவன் வளர வளர ரத்தக் கட்டு வளர்ந்தது. அவனுக்கு ஆறு வயதான நிலையில், மூன்று கிலோ எடையில் கேன்சர் கட்டியாக மாறியது.
-    நன்றி. ‘தினமலர்’ தேதி: 25-9-2018




102.தடுப்பூசி என்ன செய்கிறது! நோய் உண்டாகாமல் உடலைப் பாதுகாக்கிறது என்று சொல்லப்படுகிறது. நான் மேற்குறிப்பிட்டது போல,  உடல் தனது நலத்திற்காக, தேங்கிய கழிவுப்பொருளை வெளியேற்றும்போது ஏற்படும், தொந்தரவைத்தான் நோய் என்று சொல்கிறோம்; நோய் உண்டாவது நல்லது என்று சொல்லியிருக்கிறோம். நல்லதை தடுப்பூசி போட்டு கெட்டதாக மாற்றுவது அறியாமையல்லவா! இது நல்லது செய்யும் குடல் புளுவை ஊசி, மருந்து கொடுத்து கொல்வதற்கு சம்மாகும்!


கவன வாழ்க்கை வாழுக! வளமுடன் வளர்க!  
HEALER R.A.BHARAMAN alias AROMANI. CELLNOs: +91 9442035291; +91 7092209028