Wednesday, December 25, 2019

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 11 விதிகள்!-இம
     

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

முதல் விதி: அளவாக சாப்பிடுவது; ஒவ்வொரு கவளத்தையும் 30  முறை மென்று விழுங்க வேண்டும்; மூன்று ஏப்பங்கள் வரும்; மூன்றாவது ஏப்பத்துக்கு பிறகு வயிறு மந்தமாக இருந்தால், இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திவிடுங்கள்.
2-வது விதி: இயற்கை உணவு நோய்களை தருகிறது. ஆகவே பழங்களை இடலி பானயில் 2 அல்லது 3 நிமிடங்கள்  ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
3-வது விதி; உணவு சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது.
4-வது விதி; தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5-வது விதி: பசி எடுத்தபிறகுதான் உண்ண வேண்டும்.
6-வது விதி: மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.
7-வது விதி: காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்.   கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்த கூடாது.
8-வது விதி: பகலில் தூங்க கூடாது.
9வதுவிதி: உடலிலுள்ளதுவாரங்கள்அடைபடக்
கூடாது.
10-வது விதி. காலையிலும் மதியத்திலும் சாப்பிட்ட பிறகுதான்   நடக்க வேண்டும்.
11-வது விதி: காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு மார்பை  அல்லது தலையைக் கவனித்து,மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும்.  
               ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.

Tuesday, December 24, 2019

எப்பொழுதும் மகிழ்ச்சி!


   எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேனே! - இம         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குணபடுத்தலாம்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 25-TM
அதற்கு பரிகாரம் என்ன? குழந்தைகள் பிறக்கும்போதும், திருமணங்கள் கைகூடும்போதும், வேலைவாய்ப்பு கிடைக்கும்போதும், பதவி உயர்வு கிடைக்கும்போதும், அந்தஸ்து உயரும்போதும் மகிழ்ச்சியடைகிறீர்கள். இன்று இந்த பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியை என்னால் தாங்கமுடியவில்லை, அதற்கு பரிகாரம் காணவேண்டும் என்று எவரும் பரிகாரத்தைத் தேடிப் போவதில்லை! நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு தகுந்தாற்போல உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் நடக்கின்றன

அதேபோலதான், நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்குத் தகுந்தாற்போல, துன்பச் செயல்கள் நடக்கின்றன!. இதற்கு மட்டும் பரிகாரத்தைத் தேடி மக்கள் ஏன் ஓடுகிறார்கள். உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செயல்களைத் தடுக்க எப்படி எவராலும் முடியாதோ, அதேபோல உங்களுக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை எந்த பரிகாரத்தாலும் தடுக்க முடியாது!

அதற்கு ஒரே ஒரு பரிகாரம் கவனவாழ்க்கை வாழ்வதுதான். கடந்த காலத்தையும் எண்ணாமல், எதிர்காலத்தையும் எண்ணாமல், எப்பொழுதும் செயல்களில், வேலைகளில் கவனத்தைச் செலுத்துவதுதான். அவ்வாழ்க்கையில் இறைவனின் பாதுகாப்பில், நேரடி பார்வையில் வந்துவிடுகிறீர்கள். அதன்மூலம் ஊழ்வினை தாக்கத்தை எளிதில் எதிர்கொள்ள முடியும். கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு, மருத்துவ மனபயிற்சி உறுதுணையாக இருக்கும்.
                            
         ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

Sunday, December 1, 2019

இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்பு (Wheezing)-காரணம்-சிகிச்சை! -இம
              அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

           இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்புக்கு காரணம் மலசிக்கல்- அதுவும் குளிர்காலத்தில், மலசிக்கல் இருக்கும்போது, சிறிது அதிகமாக சாப்பிட்டாலும், பழங்களை வேகவைக்காமல் சாப்பிட்டாலும், தாகம் எடுக்காமல் நீர் குடித்தாலும், பசி எடுக்காமல் சாப்பிட்டாலும், காற்றோட்டமில்லாத அறையில் தூங்கினாலும், கொசுவலைக்குள் தூங்கினாலும், பகலில் தூங்கினாலும், உடலில் உள்ள வியர்வைத்துவாரங்கள் அடைபட்டாலும், உணவுக்கு தகுந்த உழைப்பு இல்லாவிட்டாலும் மனவழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்காவிட்டாலும் தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, இளப்பு கட்டாயம் ஏற்படும். மேலும் குளிர்காலம் உடல், தன்னை, பராமரிப்புக்கு உடபடுத்தி கழிவுப்பொருட்களை வெளியேற்றும் காலம்.

இதற்கு சிறந்த தீர்வு, காலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சி செய்வதுதான். மேலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் மார்பு,  மூக்கு ஆகியவற்றை கவனித்து செய்யகூடிய மம-வை செய்து சேர்ந்திருக்கிற சளியை அப்புறபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் இரவில், மேற்கூறிய தொந்தரவுகள் இல்லாமல் நல்ல தூக்கம் தூங்க முடியும்.  மேலே குறிப்பிட்டபடி, மற்ற வாழ்வியல் விதிகளையும் கடைப்பிடிக்கும்போதுதான், உடல் ஆற்றல் பெற்று, கழிவுப்பொருட்கள் குறைந்து இளப்பிலிருந்து விடுபடுவீர்கள்.

                                   ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Thursday, November 14, 2019

தஞ்சம் யாரிடம்?


     குளம், குட்டை, கண்மாய்கள் நீரால் நிரம்பி வழிய வேண்டுமா!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வணிகம் நாகரீகத்தை வளர்த்தது; நாகரீகம் வணிகத்தையும் நோய்களையும் வளர்த்தது. நோய்கள் வணிகத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது.

மகான்கள், மக்களின் வளத்திற்காக மதங்களை தோற்றுவித்தார்கள்; அம்மதங்களை வணிகம் வளர்த்துக்கொண்டிருக்கிறது; உதாரணமாக, ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகர்கள், தங்கள் வணிக ஆட்சி நிலைத்திருக்க, கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள்;

வணிகம் தலைவர்களை வளர்த்தது; தலைவர்கள் வணிகத்தை  வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி அனைத்துத் துறைகளிலும், பின்புலத்தில் வணிகத்தின் கைதான் ஒங்கியிருக்கிறது. அதனால், உலகின் அமைதி கெட்டு, வானிலை மாற்றங்களால், மூன்றாவது உலகபோர் தண்ணீருக்காகதான் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

மேற்கூறிய நிலையில், நாம் தஞ்சம் அடைய வேண்டியது ஆன்மீகத்திடம்தான். கூட்டு பிரார்த்தனை, கூட்டு மனபயிற்சி ஆகியவற்றால்தான் வானிலை மாற்றத்தை சரிசெய்ய முடியும். 

இந்து மதத்தில் உருவவழிபாட்டை குறைத்து, மனபயிற்சி வழிபாட்டை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான், அனைவரும் எதிர்பார்க்கும் மேற்குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழியும். 
                       ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். 

Saturday, November 2, 2019

-மறதி மூளை சம்பந்த பட்டது.


    மறதியை போக்க எளிய சிக்ச்சை!          

           அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார். செல் எண்கள்:9442035291;7092209028

A 34-மம 1
                      மறதி மூளை சம்பந்த பட்டது. 
மறதி மூளை சம்பந்த பட்டது. மூளையில், வாய்வு, கெட்ட நீர், சளி முதலிய கழிவுப்பொருட்கள் சேர்ந்து தேங்கிவிடும்போதுதான் மறதி ஏற்படுகிறது. அந்த கழிவுப்பொருட்களை நீக்கி விட்டால், மறதி நீங்கிவிடும்.

எளிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சை: வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். சில நொடிகள் எண்ணமில்லாமல் வெறுமனே மனதை வைத்திருந்துவிட்டு, மருத்துவ மனபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.



கண்களை மூடியவாறே, 20 நொடிகள் வரை தலையை மனகண்ணால் கவனியுங்கள் அல்லது பாருங்கள். கழிவுப்பொருட்களால் ஏற்பட்ட தலைக்கண வலி உங்கள் கவனத்துக்கு வரும். அதையே கவனியுங்கள். வலி அதிகமாகிக்கொண்டே வந்து பிறகு குறைய ஆரம்பிக்கும். இடை இடையே வரும் எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து வலியை கவனித்து, அது முற்றிலும் போகும்வரை மம-செய்யுங்கள். உங்களிடமுள்ள மறதி உங்களை விட்டு பறந்தோடிவிடும். இது அரோமணியின் 11-வது விதியாகும்.

காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் அரோமணியின் 10-வது விதி.

அரோம்ணியின் மற்ற 9 இயற்கை விதிகள், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
                       ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Monday, October 21, 2019

யாதும் ஊரே!


    ஜாதகம் பார்ப்பதால் பலன் உண்டா?          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


பலன் உண்டா இல்லையா என்பது முக்கியமல்ல. ஐ.நா. சபை கூடத்தில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர் தர வராது” என்ற தமிழ்புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலைத்தான், சமீபத்தில், அமெரிக்காவில், நமது பாரத பிரதமர் ஐ.நா. பொதுக்குழு மாநாட்டில் பேசும்போது,மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

அந்த பாடலின்படி, தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. வெள்ளத்தின் வழியே தெப்பம் செல்லுவதைப் போல, உயிரின் வழியே ஊழ்வினை பயணிக்கிறது. ஊழ்வினை என்ற விதியின்படியே ஒருவருக்கு தீமையும், நன்மையும் நடக்கிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. இப்படி வேதமும், கீதையும் கூறியிருக்கிறது., விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார்.

மாற்ற முடியாத ஒன்றை ஜாதகத்தின் மூலம் அறிவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் நோய்களை குணபடுத்திக்கொண்டு, அதன் அனுபவத்தைக்கொண்டு கவனவாழ்க்கை வாழும்போதுதான் புலவர் சொன்ன உண்மையைக் காண்பீர்கள். மேலும் வரக்கூடிய தீமையையும், நன்மையையும் சமமாக பார்ப்பீர்கள். இயற்கை என்ற இறைவன், துயர காலங்களில் உங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதை நன்கு உணருவீர்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Tuesday, October 8, 2019

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி!


                  

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

      மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி! 
      
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது பெரியாருக்கும் தெரியும். மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, வேறுவழியில்லாமல், “கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை கையிலெடுத்தார். மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவை நீடிக்கவில்லை.

அதற்கு காரணம், மக்களின் ஆன்மீகத்தின் வடிகாலாக,  புதிய வழிபாட்டு முறையை, பெரியார், அறிமுகபடுத்தி முற்றுப்புள்ளி வைக்காமல் மறைந்துவிட்டார். அதனால், தாய்க்கழகமான, திராவிட கழகத்தில் உள்ளவர்களைத் தவிர, பிரிந்து சென்றவர்கள் மூட மத சடங்குகளை கடைபிடிப்பதில் வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள்.

தற்காலத்தில் ஊழ்வினையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உதவ பெற்றோர்,உறவினர், நண்பர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றல் வரையறுக்கபட்டது. அளவில்லாத ஆற்றலைப் பெற்ற இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஆகவே வழிபாடு அவசியம் என்றாகிவிட்டது.

அந்த குறையை நிவர்த்தி செய்யதான், ‘கவனவாழ்க்கையை’ இறைவன் அறிமுகபடுத்தியிருக்கிறான். இந்த வாழ்க்கை முறையில், வழிபாடு முறை உள்ளடங்கியது. மூட நம்பிக்கைகள்,, பழக்கவழக்கங்கள் மத சடங்குகளுக்கு இடமில்லை. ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது, அந்தஸ்து பேதங்களுக்கு இடமில்லை. எவர் கவனவாழ்க்கை வாழ்கிறாரோ அவர் உயந்த நிலையில் இருப்பார்..
                          
              ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



Wednesday, October 2, 2019

இப்பொழுது இரவு 7 மணி.


   திட்டமிடுதல் ஆக்கிரமிப்புக்குச் சமம்!                

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

         இப்பொழுது இரவு 7 மணி.

இப்பொழுது இரவு 7 மணி. இந்த நேரத்தில் இந்த கட்டுரையை படிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். 7.00.01 நேரம் தள்ளி வருகிறது. உங்களது உழைப்பும் தள்ளிப் போகும்.

நீங்கள் உழைக்கும் 7 மணிதான் உங்கள் நேரம்; ‘அக்கண நேரம்’; அதாவது செயல் நிகழக்கூடிய ‘நிகழ்காலம்’; அதை அடுத்து வரக்கூடிய காலம்கூட எதிர்காலம்தான். 7.00.01 நேரமும் எதிர்காலம்தான்; உங்களுக்கென்று, உறுதிப்படுத்தப் படாத காலம். 

அந்த உறுதிப்படுத்த படாத காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் கற்பனையிலும், திட்டமிடுதலிலும்,யோசித்துமுடிவெடுத்தலிலும் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். 

அதனால் தோன்றும் எண்ணங்களால் விளையும் மனவழுத்தத்தால்தான் 50% துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். அதாவது துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமலே துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.  

இறைவன், நீங்கள் ஏற்கனவே செய்த நல்லது, கெட்டதுக்கு ஏற்றாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் துன்ப நிகழ்வுகளை, எதிர்காலத்தில்தான் திட்டமிட்டு வைத்திருக்கிறான். அதில் நீங்கள் திட்டமிடுவது அவனுடைய கால நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகும். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதுபோல, உங்கள் கற்பனை, திட்டம், முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் தவிடுபொடியாக்கப்படுகிறது.

ஆகவே ‘அக்கணம்’ என்னும் ‘நிகழ் காலத்தில்’ வாழ மருத்துவ மனபயிற்சிகளில் அனுபவம் பெற்று, கற்பனை வாழ்க்கையிலிருந்து, கவனவாழ்க்கைக்கு மாறுங்கள்; புதிய மகிழ்ச்சியான, உலகைக் காண்பீர்கள்!
                 ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Tuesday, October 1, 2019

எது உங்கள் நேரம்?


      24 மணி நேரத்தில் எது உங்கள் நேரம்                                       

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028. 

A 50- 




உங்கள் நேரம் என்பது, உங்களை வளமாக்க, நீங்கள் உழைக்கும் நேரம்தான் உங்கள் நேரம்.

கடந்த காலம் உங்களை கடந்து போய்விட்டது. அதில் நீங்கள் உழைக்க முடியாது. ஆகவே அதில் உங்க நேரம் கிடையாது.

நிகழ்காலத்தில்தான் நீங்கள் உழைக்க முடியும். நிகழ்காலத்திலும், இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் உழைப்பை செய்துகொண்டிருக்கிறீர்கள். உழைக்கக்கூடிய அந்த நேரம்தான் உங்கள் நேரம்.

இரவு 7.40-க்கு படிக்கிறீர்கள் என்றால், அந்த நேரம்தான் உங்களுக்குச் சொந்தமான நேரம். மணி 7.41- கூட உங்களுக்குச் சொந்தமில்லை. அந்த நேரத்தில் நீங்கள் உழைக்கவில்லை. ஆகவே, அது எதிர்காலத்தைச் சேர்ந்தது. அக்காலம் இறைவனுக்குச் சொந்தம்.

நீங்கள் நிகழ்காலத்தில் செய்யகூடிய நல்லது, கெட்டதுக்குத் தகுந்தாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சியோ, துன்பமோ இறைவனால் கொடுக்கப்படும் காலம்தான் எதிர்காலம். அதாவது ஊழ்வினை என்னும் விதியின் காலம்.


அந்த 7.40-துதான் ‘அக்கணம்” என்பது, ‘நிகழ்காலத்தில் வாழ்வது (Presently living)’ என்பது. ஆகவே ‘அக்கணத்தை’ பயனுள்ளதாக மாற்றி வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் கவனத்தைச் செலுத்தும்போதுதான், அந்த வேலை பயனுள்ள வேலையாக மாறும். எண்ணங்களை நீடிக்கவிடாமலிருப்பதுதான் கவனம் என்பது.  

               ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..     

Wednesday, September 4, 2019

புத்திசாலிகள்!

கேளிக்கைகளுக்கு இடம் கொடுத்துவிட்டு. வளர்ச்சி பின்வாங்கிக் கொண்டது!-இம!

     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028.

ஆதிகால மனிதர்கள் ஆவிகளை ஆற்றலைக்கொடுக்கும் தெய்வங்கள் என்று நினைத்தார்கள். பிறகு சூரியனை வழிபட்டார்கள்.

ஆதிகால மனிதர்களில் புத்திசாலிகள் சிலர்,, பிழைப்புக்காக, கற்பனை கதைகளை உருவாக்கி, அதன் கதாநாயகர்களை, ஆண், பெண் உறவில்லாமல் பிறந்ததாகவும், அற்புதங்கள் செய்வதாகவும் சிறப்பாகச் சொல்லி, வழிபட வைத்தார்கள்.

இன்று மனிதன் வேறு கிரகங்களுக்குச் சென்று வாழுகின்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் வழிபாட்டு முறையில் மட்டும் மாற்றமில்லாதது வேதனைக்குறியதாகும்.

உருவவழிபாடு சடங்குகளை உருவாக்கியது, சடங்குகள் கேளிக்கைகளுக்கு தாராளமாக கதவுகளை திறந்து விட்டன. வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மனபயிற்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்தியா 400 ஆண்டுகளாக அந்நியர்களிடம் அடிமையாக இருந்தது. விடுதலை பெற்றும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாடுகளில் சிறைகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் உருவ வழிபாட்டின் சிறப்பு இதுதான். 

               ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Sunday, August 25, 2019

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-


             ”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-இம            
     அரோமணி ஆராய்ச்சிமைய  மருந்தில்லா  மருத்துவமனை.
                         செல் எண்கள்: 9442035291; 7092209028/

                            

v  உங்களுடைய கடின முயற்சிக்குப் பிறகு “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது::
v  உங்களது கடின முயற்சிக்குப் பிறகு “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”
v  உங்களது பெரு முயற்சிக்குப் பிறகு “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---அதுதான் கற்பனை வாழ்க்கை!

v  உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடந்ததோஅது நன்றாகவே நடந்தது!

v  உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”
v  உங்களது பெரு முயற்சி இல்லாமல் “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---இதுதான் கவன வாழ்க்கை!
 
      அரோமணியின் 11 விதிகள் உடல்மன நலத்தைக் காக்கும்.
                ஹீலர் அரோமணி. 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.




 
      



Tuesday, August 20, 2019

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பார்லிமெண்டில் சில வார்த்தைகள் மட்டும் பேசிய எம்.பி!-இம
         
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291; 7092209028.

   பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், எம்.பி. அவர்கள் ஒரே ஒரு தடவைமட்டும் தான் “ஜன்னலை திறந்து விடுங்கள், காற்று வரட்டும்!” என்று சேவகர்களிடம் கூறியிருக்கிறார். அதேபோல, ”உங்கள் வீடுகளின் ஜன்னல்களை, திறந்து விடுங்கள். காற்று வரட்டும்” என்று உங்களிடம் கூறுகிறேன்.

காற்று இல்லாமல் ஒரு சில நொடிகள் கூட இருக்க முடியாது. வாழ்வில், உடல்மன நலத்திற்கு முக்கியமான, ஐந்து முக்கிய ஆற்றல்களில் ஒன்றுதான் காற்று.

அந்த ஆற்றல் மிகுந்த காற்று இல்லாமல், ஒரு நாளில்,மூன்றில் ஒரு பங்கு நேரம்  இருக்கும் படுக்கை அறையில், ஜன்னல்களை மூடி தூங்குகிறீர்கள். அதற்கு கொசு, திருடர் பயம் காரணமாக கூறப்படுகிறது.

கொசுவிற்கு ‘பிளீட்சிங் பவுடர் அல்லது லைசாலை கழிப்பறைகோப்பையில் கரைத்து ஊற்றியும், , குளியலறையிலும், சமயலறையிலும் தூவி, அதை ஒழித்துவிடலாம். திருடர் பயத்திற்கு, ‘உண்மைக் கடவுளை’ வழிபடுங்கள். அவன்உங்கள் வீட்டுக்கு காவலாளியாக இருப்பான்.

நோய்களிலிருந்து விடுபட அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடியுங்கள். 
       
                ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 


 ,

Monday, August 19, 2019

“தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள


      “தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள எளிய சிகிச்சை!-இம            
        அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. 
                           செல்கள்: 9442035291; 7092209028.
தற்கொலை எண்ணம் மீண்டும் மீண்டும் வரும்போது, பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக உணறுகிறார்கள்; “உலகில் வாழ்வதில் இனி அர்த்தமில்லை” என்ற முடிவுக்கு வருகிறார்கள்; அந்த முடிவுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..இதற்கு எளிய சிகிச்சை முறைகள் இருக்கு.

தலைப்பயிற்சி: மெதுவாக கண்களை மூடவும்
.சில விநாடிகள் கழித்து, தலையை மனதால் கவனிக்கவும். இலேசான வலியை, தலைக் கணத்தை உணருவார்கள். அதை கவனித்துக்கொண்டே இருக்கவும் வலி முழுவதும் தீரும்வரை மருத்துவமனபயிற்சி செய்யவும். மாலையும் செய்யவும். ஒரே நாளிலே தற்கொலை எண்ணம் அவர்களை விட்டு நீங்கி விடும். தினசரி செய்ய வேண்டும்.
                       அல்லது
மார்புப் பயிற்சி:: கண்களை மூடி மார்பையும், அதில் உள்ள இருக்க (Tightness) உணர்வையும் கவனிக்கவும். இருக்கம் விலகும்வரை செய்யவும். காலையும், மாலையும் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யவும். தற்கொலை எண்ணஙகள் தலைகாட்டாது.   
                    ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

தய்

Saturday, August 17, 2019

ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான்

 சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்யவேண்டும்! ஏன்?-இம
          அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. 
                      செல் எண்கள்: 9442035291’ 7092209028.
ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான் வேட்டையாடச் சென்றான். 


ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடச் செல்லும்போது, சாப்பிட்டுவிட்டுத்தான் சென்றான். அப்படிச் சென்றதால், சாப்பிட்ட உணவு செரித்தல் ஆனது; செரித்தலினால் பசி எடுத்தது; பசியினால் மீண்டும் உணவு உண்டான். ஆகவே அவனுடைய வாழ்வின் வாழ்வாதாரம் உழைப்பு. உழைப்பு செரித்தலுக்காக; செரித்தல் பசிக்காக; பசி உணவுக்காக; உணவு உழைப்புக்காக.

நவீன கால மனிதனுக்கும் உழைப்புதான் வாழ்வாதாரம். ஆனால்,  உழைப்பு குறைந்துவிட்டதால், உழைப்பை ஈடுகட்ட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கத்திற்கு வந்தது. அப்படி வரும்போது, அவன் சாப்பிட்டுவிட்டு உழைக்கச் சென்றதைப் போல, இவனும் சாப்பிட்ட பிறகுதானே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், அதை மாற்றி வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு காபி மட்டும் குடித்துவிட்டு நடைப்பயிற்சி செய்து நோய்களை வரவழைத்துக் கொள்கிறான். ஆகவேதான் அரோமணியின் 10-விதி காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வலியுறுத்துகிறது..

அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடித்து நோயின்றி வாழுங்கள்.

                           ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.





                       ஹீலர் அரோமணி

!உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!


உடல் மற்றும் மனச் சோர்வுகளை குணப்படுத்தும் எளிய சிகிச்சை

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.  
           செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!

உடலின் கழிவுப் பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர், மலம், சர்க்கரை அந்த கழிவுப்பொருட்கள் உழைப்பினாலும், உண்ணும் உணவுகளாலும், விதி மீறல்களாலும் உடலின் தலையிலும் தேங்குகின்றன. அதனால் தலைக்கனம் ஏற்படுகிறது. ஆனால் அந்த கனம், உங்களால் உணராத அளவில் இருக்கும். அந்த கனம்தான் உங்கள் உடலில் சோர்வையும் மனதில் சோர்வையும் தோற்றுவிக்கிறது. அந்தச் சோர்வுகளினால், அன்றாட பணிகளைச் சரிவர செய்ய முடியாது.

அந்தக் கனத்தைப் போக்க, கண்களை மூடுங்கள் நெற்றிப்பொட்டையும், தலையையும் மனகண்ணால் கவனியுங்கள். இலேசானை வலி தோன்றும், அந்த வலியை கவனியுங்கள்; நினையுங்கள்; உணருங்கள். அந்த வலி கூடிக்கொண்டே குறைந்து வரும். வலி முழுவதுமாக தீரும்வரை மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். மாலையிலும் நேரம் இருந்தால் செய்யுங்கள். உடல் மற்றும் மனச்சோர்வுகள் இருக்காது.

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கும்போது, தலைக்கனம் குறைந்துவிடும். காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள்.
              ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.







                              ஹீலர் அரோமணி

தங்குமிடங்கள்,

நோய்க்காரணிகள், தங்குமிடங்கள், நோய்கள்!-இம
  A 73-MLM           
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. 
                        செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலிலுள்ள கழிவுப்பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர், மலம், சர்க்கரை. இந்த கழிவுப்பொருட்கள் (க.பொ) தலையில் தேங்கும்போது, தலைக்கனம்,கிறுகிறுப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, உடல் மனச் சோர்வுகள், உடல் வலிகள், சோம்பேறித்தனம், மறதி, அறியாமை.முதலிய நோய்கள் உண்டாகின்றன..

முகம், மூக்கு ஆகியவற்றில் தேங்கும்போது, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி முதலியன. தொண்டையில் தேங்கும்போது “கரகரப்பு” நோய். மார்பு மற்றும் நுரையீரல்களில் தேங்கும்போது சளி, மூச்சுத்திணறல், இதய நோய்கள்.

வயிற்றில் தேங்கும்போது, அஜீரணம், மந்தம், வலி, கால் பாத, விரல் நரம்புகளை சுண்டி இழுத்தல். சிறுநீரகத்தில் தேங்கும்போது, கற்கள், சிறுநீரக நோய்கள், சிறுநீரக செயலிழப்பு.. தோலில் தேங்கும்போது, நீர்க்கட்டிகள், அரிப்பு. மார்பில் தேங்கும்போது மனம் சம்பந்தபட்ட நோய்கள். கணயத்தில் தேங்கும்போது சர்க்கரை குறைவு நோய்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கும்போது, உடல் வலிமை பெற்று, தேங்கும் கழிவுப்பொருட்கள் குறைந்துவிடுகின்றன. நோய்களுக்குரிய மருத்துவ மனபயிற்சிகளைச் செய்து அவற்றிலிருந்து குணம் பெறுங்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


 

Thursday, August 15, 2019

உடலின் முயற்சி!

உடலின் முயற்சியை தடுப்பதா!-இம அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291; 7092209028.

உடல், தன்னிடமுள்ள நோய்களை குணபடுத்த எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கிறது. கண்களின் பார்வைக் குறைபாட்டை கண்ணாடி அணிந்து சரிசெய்து விடுகிறோம். சரி செய்து விடுவதால், விதிமீறல்களை திருத்திக் கொள்வதில்லை. உடல், கண் குறைபாட்டை சரிசெய்யும் முயற்சியை கைவிட்டுவிடுகிறது. அதாவது, செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு விடுகிறது. தவழும் குழந்தையிடம் சிறிது தூரத்தில் கிடக்கும் பொம்மையை, தூக்கிக் கொடுப்பதைப்போல.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினை உடலில் செலுத்தி, இன்சுலின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அதனால்தான் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் செலுத்தும் சர்க்கரை நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். உடலின் முயற்சி தடுக்கபடுகிறது.

சர்க்கரை நோயிலிருந்து விடுபட, உடலின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைபிடியுங்கள்.

          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.                            

Saturday, August 10, 2019

தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்

“தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..”-இம
     
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
                 உசிலம்பட்டி-625532.
                  செல் எண்கள்: 9442035291, 7092209028.

       தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்
பெறுநர்
ஆசிரியர்,
‘தினத்தந்தி’ நாளிதழ்.
சென்னை-600007.

அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 10-7-2019, தேதி,  தினத்தந்தி நாளிதழின் கட்டுரை பக்கத்தில், “தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் ஆசிரியர் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றி சொல்லி வருத்தமும் எச்சரிக்கையும் விட்டிருக்கிறார்.

”வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்பதைப்போல, ஆங்கிலத்தைக் கட்டுப்படுத்த அந்த ஆங்கிலத்தைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதற்குதான், பள்ளிகளில் 6-வது வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையிலும் அடைப்புக் குறிக்குள் ஆங்கில தொழில் நுட்ப சொற்கள் பயன்படுத்தலாம் என்றும், கல்வியின் அனைத்து படிப்புகளிலும் தமிழை ஒரு பாட மொழியாக வைக்கலாம் என்றும் எனது திட்டத்தினை 2002-ம் ஆண்டு முதல் எழுதி போராடி வருகிறேன். எனது இரண்டு கட்டுரைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

என்னுடைய கருத்தை சுமார் 2 3/4  கோடியை நெருக்கி வாசகர்களைக் கொண்டுள்ள “தினத்தந்தி” நாளிதழில் வெளியிட்டால், மக்கள் விழிப்புணர்வு பெற்று, அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது,  எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆகவே எனது கருத்தை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                 இப்படிக்கு
                                          தங்கள் உண்மையுள்ள 
                                   ஹீலர் R.A.பரமன் (அரோமணி)
                                            
 இணைப்பு 2 கட்டுரைகள்.

MISC-TAMIL EDUN-HC PANEL-16-3 18; MISC-TAMIL EDN-INT-12-7-19
EMAIL SENT ON 12-7-19 AT 8.15PM