Thursday, May 4, 2017

மருந்தே நோய் முக)

I 211 TM-சர்க்கரை நோய்-(முக) 
நோய்க்குரிய மருந்தே நோயை வளர்க்கிறது!
 சர்க்கரை நோயை (DIABETS) நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?
1.       முடியும். மக்கள் நம்பிக்கை வைத்து உறுதியான முடிவு எடுத்தால் முடியும். இதில் மக்களிடமுள்ள அறியாமையும் பயமும் முதலில் அகற்றப்பட வேண்டும். அந்த இரண்டையும் வைத்து, வணிகம் இதில் பெரிய அளவில் விளையாடிக் கொண்டிருக்கிறது.ஆ

2.       சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது?
நெருப்பினால், உணவின் சுவை கூடியிருக்கிறது என்பதை எவறும் மறுக்க முடியாது. வெளிநாட்டினர் காபி, டீக்களின் சுவையை அறிமுகப்படுத்திய பிறகு மக்கள் பசி உணர்வைக் கவனிக்காமலே அவைகளை அளவில்லாமல் குடிக்க ஆரம்பித்தார்கள். சாப்பாட்டு நேரம் வந்த உடனே சாப்பாட்டையும் சாப்பிட்டார்கள். இப்படி மூன்று நேரமும் பசியைக் கவனிக்காமல், வயிற்றின் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டார்கள். இதனால் செரித்தல் பாதித்தது; இயற்கை உணவையும், சமைத்த உணவையும் சேர்த்தே சாப்பிட்டார்கள்; காபி, டீ, சாப்பாடு அனைத்தையும் சூடாகத்தான் சாப்பிட்டார்கள்; தாகம் எடுக்காமலே நிறைய நீர் அருந்தினார்கள்; மலச்சிக்கலுக்கு ஆளானார்கள்; கள்வர்களுக்கும், கொசுக்களுக்கும் பயந்து ஜன்னல்களை அடைத்துக் கொண்டு காற்றோட்டமில்லாத அறைகளில் தூங்கினார்கள்; மதியம் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கி எழுந்தார்கள்; வெற்றிலை பாக்கு, புகையிலை, சிகரட், போதைப்பொருள் உபயோகித்தல், உடலுக்குக் கெடுதல் தரும் பழக்க வழக்கங்களை மேற்கொண்டார்கள்.

3.       மேற்குறிப்பிட்ட இயற்கை விதிகளின் மீறலால், உடல் மிகப்பெரிய அளவில் பலவீனப்பட்டது. இந்த உடல்  பலவீனம், சாதாரண கழிவு மற்றும் தேக்கமுற்ற கழிவுகளையும் தாண்டி நிரந்தர தேக்கமுற்ற கழிவுக்கு வழிவகுத்து விட்டது. இந்த கழிவை கிருமிகள் சாப்பிட்டும் முற்றிலும் அழிக்கமுடியாத., இந்நிலையில்தான், கணையம் (PANCREAS) பழுதுபடுகிறது.

4.       கணையத்தில்தான், இன்சுலின் ஹார்மோன் (INSULIN HARMONE) என்ற இயற்கையான சுரப்பி நீர் சுரக்கிறது.  அது இல்லாவிட்டால், உடல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். நீங்கள் சாப்பிடும்பொழுது, கணையம்தான் இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இன்சுலின், உடலின் செல்கள் குளுக்கோசை ஏற்றுக்கொள்ள வைத்து, ஆற்றலாக மாற்றுவதற்கு உதவி செய்கிறது. உங்களுக்கு உடனே தேவையில்லாத போது, குளுக்கோசை கல்லீரல் (LIVER), தசை (TISSUE) மற்றும் கொழுப்பு (FAT) செல்கள் சேமித்து வைப்பதற்கு இன்சுலின் உதவி செய்கிறது.

5.       இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (PANCREAS) செல்கள் (CELLS) பழுதுபடுகின்றன. செல்கள் பழுது பட்டால் அதைச் சரி செய்யலாமல்லவா (DOING REPAIR)! அதை விடுத்து, இன்சுலினையே நேரடியாக ஊசிமூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ உடலுக்குள் அனுப்பப்படுவது எந்த விதத்தில் நியாயம்.

6.       இன்சுலின் வரலாறு
இன்சுலினை பயன்படுத்துவது சம்பந்தமாக 1921-லேயே ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. முதலில், நாய்கள், பன்றிகள், மாடுகள் முதலியனவற்றின் இன்சுலின் மனித உடலில் பயன்படுத்தப்பட்டது. 1980-ல் தான் மனித இன்சுலினுக்குச் சம்மான இன்சுலின் செயற்கையாக தயார் செய்யப்பட்டு சிந்தடிக் இன்சுலின் (SYNTHETIC INSULIN) மனித உடலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகு அனலாக் இன்சுலின் விற்பனைக்கு வந்திருக்கிறது.

7.       தயாரிப்பில் பல்வேறு செய்முறைகள் பின்பற்றப்படுகின்றன; பல்வேறு இடுபொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் செய்முறையும், இடுபொருட்களும் மற்றொரு நிறுவனத்திலிருந்து மாறுபடுகின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் இன்சுலின் தயாரிப்புகளில் வேறுபாடு இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு பயன்படுவதற்காக மிகப் பெரிய அளவில் இன்சுலின் தயாரிக்கப்படுகின்றன.

8.       இங்கு ஒன்று பார்க்க வேண்டும்; 1000 பேர்களுக்குச் சமைக்கப்படும் உணவுக்காகச் சேர்க்கும் இடுபொருட்களும் செய்முறைகளும் குடும்பத்தில் ஐந்து பேர்களுக்குச் சமைக்கப்படும் உணவுக்காகச் சேர்க்கும் இடுபொருட்களும், செய்முறைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் சுவையும் மாறுபடுகின்றன.

9.       செயற்கை இன்சுலின், மனித உடலின் இன்சுலினுக்குச் சமமானது என்று சொல்லப்பட்டாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உடலுக்குள் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின், ஒரு உயிரியல் மூலத்திலிருந்து பெறப்பட்ட இரசாயனப் பொருள். செயற்கை இன்சுலின் உயிரற்ற மூலத்திலிருந்து (NON LIVING SOURCE) பெறப்பட்ட இராசயனப் பொருள்.

10.    மனிதர்கள், இறைவனால் படைக்கப்பட்ட உயிரோட்டம் கொண்டவர்கள்; அவர்கள், தனித்தனியாக மனம், உடல், அவற்றின் கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றில் வேறுபட்டவர்கள், மற்றும் மாறுபட்டவர்கள். ஒவ்வொருவருக்கும் சுரக்கும் இன்சுலினும் குணத்திலும், செயல்படும் விதத்திலும்  மாறுபடும்.

11.    மனிதர்கள் இரத்தத்தால் O (-) நெகடிவ், O(+) பாசிட்டிவ், A(-) நெகடிவ், A(+) பாசிடிவ், B(-) நெகடிவ், B(+) பாசிடிவ், AB(-) நெகடிவ், AB(+) பாசிடிவ் முதலிய இரத்த வகைகளால் வேறுபட்டவர்கள். உங்களது இரத்தம் A(+) ஆக இருந்தால், நீங்கள் சாப்பிடுகின்ற பொழுது, அதற்குப் பொருந்துகின்ற, இணைந்து செயல்படுகின்ற இன்சுலினை கணையம் சுரந்து இரத்தத்துடன் கலக்கச் செய்கிறது.

12.    ஆனால், செயற்கை இன்சுலின் எல்லா வகை இரத்தங்களுக்கும் சேருவதுபோலத் தயார் செய்திருக்க முடியாது. நிச்சயம் குறைபாடுள்ளதாகத்தான் இருக்கும். உப்பை (SODIUM CHLORIDE) உடலே உற்பத்தி செய்து கொள்கிறது. ஆகவே சுவைக்காகச் சேர்க்கும் உப்பை உடல் அந்நியப் பொருளாக எடுத்துக்கொண்டு, அதிக தாகமெடுத்து, நிறைய நீரை அருந்தச் செய்து, உப்பை வெளியேற்றிவிடுகிறது. அப்படி இருக்கும்போது குறைபாடு உள்ள, இரத்த வகைக்கு ஒத்து இணைந்து செயல்படாத இன்சுலினை எப்படி ஏற்றுக் கொள்ளும்? ஏற்றுக்கொள்ளாது. அதனால்தான், ஒவ்வாமையால் (ALLERGY), பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) என்னும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன.

13.    இன்சுலினின் வகைகள்:
இன்சுலினிலும் பல வகைகள் உண்டு.
மிருக இன்சுலின், செயற்கை இன்சுலின் மற்றும் அனலாக் இன்சுலின். மிருக இன்சுலின் மிருகங்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. செயற்கை இன்சுலின் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்படுகின்றன. பரிசோதனைச் சாலையில் தயாரிக்கும் இன்சுலினை, மிதமாகவோ அல்லது வேகமாகவோ செயல்படும்படியாக மாற்றினால் கிடைக்கும் இன்சுலின்தான் அனலாக் இன்சுலின்.

14.    இன்சுலின் செயல்பாட்டு வகைகள்:
இன்சுலின் வேகமாகச் செயல்படுதல் (RAPID ACTING), இந்த வகை இன்சுலின், ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்குகிறது; நாற்பத்தைந்து முதல் தொண்ணூறு நிமிடங்களில் உச்சக்கட்ட செயல்பாட்டில் இருக்கிறது; அதனுடைய செயல்பாடு
15.    மூன்று முதல் ஐந்து மணிநேரம் வரை இருக்கும். சாப்பாடு சாப்பிடும்போதே இந்த இன்சுலின் தேவைப்படுகிறது. இந்த இன்சுலினை நீண்ட காலச் செயல்ப்பாட்டு இன்சுலினோடு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இந்த வகை இன்சுலினிலும் மூன்று வகையான இன்சுலினைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

16.    குறுகிய செயல்பாடு (SHORT ACTING),; இந்த இன்சுலினை சாப்பிடுவதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இன்சுலின் நீண்ட செயல்பாட்டு இன்சுலினோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதில் இன்சுலின் ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை செயல்படும். இது சாப்பிட்டு முப்பது முதல் அறுபது நிமிடத்திற்குள் தேவைப்படும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

17.    இடைப்பட்ட செயல்பாடு (INTERMEDIATE ACTING); பதினெட்டு முதல் இருபத்து நான்கு மணி நேரம் நீடித்திருக்கும். இந்த வகை இன்சுலின் அரை நாளுக்கோ, அல்லது இரவு முழுக்கத் தேவைப்படலாம். இதனை வேகமாகச் செயல்படும் அல்லது குறுகிய செயல்பாடு இன்சுலினோடு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.

18.    நீண்ட செயல்பாடு (LONG ACTING). இருபது முதல் இருபத்து நான்கு மணி நேரம் நீடித்திருக்கும்.

19.    ஐந்தாவது வகை செயல்பாடு, ஏற்கனவே கலந்து பயன்படுத்தும் செயல்பாடு (PREMIXED). இந்த வகை, பொதுவாக இன்சுலின் தேவைப்படும் நேரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை போட்டுக்கொள்ள வேண்டும்.

20.    மேற்குறிப்பிட்டதைத் தவிர, அனலாகு விரைவானது (ANALOGUE RAPID), மிருகம் குறுகியது (ANIMAL SHORT), மனிதன் குறுகியது (HUMAN SHORT), மனிதன் இடைப்பட்டது (HUMAN INTERMEDIATE), மிருகம் இடைப்பட்டது (ANIMAL INTERMEDIATE), அனலாகு நீண்டது (ANALOGUE LONG), அனலாகு அல்ட்ரா நீண்டது (ANALOGUE ULTRA LONG), மிருகம் நீண்டது (ANIMAL LONG) போன்ற எட்டு வகைகளும் உண்டு. ஆக மொத்தம் பதிமூன்று வகையான செயல்பாடுகள் கொண்ட இன்சுலின் உண்டு.

21.    பல வகை சர்க்கரை நோயாளிகள்:
சர்க்கரை நோயில் பல வகை உண்டு. இன்சுலினே சுரக்காதவர்கள் முதல் வகை சர்க்கரை நோயாளிகள் (TYPE 1 DIABETES); இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்கு போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிட்டால், அவர்கள் இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் (TYPE 2 DIABETES). சுமாராக உலகம் முழுவதும், 90% விழுக்காடு சர்க்கரை நோயாளிகள் டைப் 2-ம் வகை நோயாளிகளாகும். மேலும், கர்ப்பினி பெண்களுக்குள்ள சர்க்கரை நோய், இளைஞர்களுக்கு உள்ள சர்க்கரை நோய் மற்றும் மற்ற வகைகள் அதாவதுஎல்லோரையும் பிடிக்கும் (CATCH ALL)’ சர்க்கரை நோய் என்று சர்க்கரை நோயில் பல வகைகள் உண்டு.

22.    சர்க்கரை நோயில் பல வகை என்றாலே, அது மக்களுக்குப் பயத்தைக் கொடுக்கப் பயன்படுகிறதே தவிர அந்நோயைக் குணப்படுத்துவதற்கு அல்ல. இரட்டை மருத்துவத்திலும் சரி, அக்குபங்சர் மருத்துவத்திலும் சரி, சர்க்கரை நோய் ஒரே ஒரு சர்க்கரை நோய்தான். அது குணப்படுத்தக் கூடிய நோய்தான்.

23.    இன்சுலின் உணர்திறன் (INSULIN SENSITIVITY).
இன்சுலின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளை உடல் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் தன்மையைதான் இன்சுலின் உணர்திறன் (INSULIN SENSITIVITY) என்கிறோம். இந்த இன்சுலின் உணர்திறன் ஆளுக்கு ஆள் வேறுபடும்இதைடெஸ்ட்செய்துதான் கண்டுபிடிக்க முடியும். டெஸ்ட் முடிவுக்குத் தகுந்தாற்போல இன்சுலின் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைவு இன்சுலின் உணர்திறன் (LOW INSULIN SENSITIVITY) பல்வேறுவிதமான உடல்நலப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். அதிக அளவு இன்சுலின் செலுத்தினாலும், இரத்த நாளங்களை பழுதடையச் செய்து விடும். உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், இருதய செயலிழப்பு, உடல் பருமன், ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) மற்றும் புற்று நோய் முதலியன வரலாம். மனவழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும் போது குறைந்த இன்சுலின் உணர்திறன் இருக்கும்.

24.    இன்சுலினால் உண்டாகும் பக்க விளைவுகள் (SIDE EFFECTS OF THE INSULIN)என்னும் எதிர்விளைவுகள்:
குறைச் சர்க்கரை ஏற்படுவதற்கு (LOW SUGAR) முக்கிய காரணங்களில் அதிக அளவு இன்சுலினை செலுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
குறைச் சர்க்கரை (BELOW 72mg/dl) யால் உண்டாகும் பக்க விளைவுகள்:

25.    ஊசி போடக்கூடிய இடத்தைச் சுற்றிலும் 1. வீக்கம், 2. அரிப்பு ஏற்படும்., 3. வியர்வை வியர்த்தல் (SWEATING), 4. களைப்பு (FATIQUE), 5. மயக்கம் (FEELING DIZZY) முதலியன உணரலாம்.

26.    மேலும் சில பக்கவிளைவுகளைப் பார்க்கலாம். 6. வெளிர்த்துக் காணப்படுதல் (BEING PALE), 7. பலவீனமாக உணருதல் (FEELING WEAK), 8. எப்பொழுதும் பசி உணர்வோடிருத்தல் (FEELING HUNGRY), 9. இதயத் துடிப்பு அதிகரித்தல் ( A HIGHER HEART RATE THAN USUAL), 10. மங்கலான பார்வை (BLURRED VISION), 11. குழப்பம் (CONFUSION), 12. வலிப்பு (CONVULSIONS), 13. உணர்விழத்தல் (LOSS OF CONSCIOUSNESS), 14. மிகவும் மோசமான நிலையில்கோமா’ (COMA)

27.    இன்னும் சில மோசமான பக்க விளைவுகளைப் பார்ப்போம். 15. உடலுக்குக் குறுக்கே ஒரு வெடிப்பு (A RASH ACROSS BODY), 16. மூச்சுத் திணறல் (TROUBLE BREATHING), 17. தும்மல் (NAUSEA), 18. வேகமான இருதயத் துடிப்பு (RAPID HEART BEAT), 19. இரத்தவழுத்தக் குறைவு (DROP IN BLOOD PRESSURE). 20. தோல் தடிமனாகவோ அல்லது உறிஞ்சோ காணப்படுதல் (THICKENING OR PITTING OF THE SKIN). 21. திரவம் நிரம்பியிருப்பதால், கைகள் அல்லது கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுதம் (SWELLING OF THE ARMS OR ANKLES AS A RESULT OF FLUID RETENTION). மற்றும் 22. கண்பார்வைக் கோளாறுகள் (EYE SIGHT PROBLEMS) முதலியன. 23. சில வகை இன்சுலினைப் பயன்படுத்தும்போது தலைவலி ஏற்படுகிறது.

28.    பாவம் ஓரிடம், பலி ஓரிடம்.
உடலில் சுரக்கும் இன்சுலினுக்கும், உடலினுள் செலுத்தப்படும் செயற்கை இன்சுலினுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.

வரிசை எண்
உடலில் சுரக்கும் இயற்கை இன்சுலின்
உடலினுள் செலுத்தப்படும் செயற்கை இன்சுலின்
1

2

 3






4


5





 6






 7



8











9.












 10





 11












 12
இயற்கையானது

உயிரியல்-வேதியல் (Bio-Chemical)

ஒரு உயிரியல் மூலத்திலிருந்து சுரக்கும் இரசாயனப் பொருள்.





சுரப்பதில் தவறு ஏற்படாது.


மனித இரத்தம் O(-), O(+), A(-), A(+), B(-), B(+), AB(-), AB(+) ஆகிய பிரிவுகளில் இன்சுலின் இணைந்து செயல்படும்.


 ஒரே ஒரு வகை இன்சுலின்தான் உண்டு..





 இந்த இன்சுலினுக்கு ஒரே விதமான செயல்பாடுதான் உண்டு.


இன்சுலின் குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரக்காமல் விட்டாலோ, அதற்குத் தகுந்தாற்போல ஏற்படும் சர்க்கரை கழிவுதான் இரத்தத்தில் காணப்படுகிறது. ஆகவே, ஒரே ஒரு வகை சர்க்கரை நோய்தான்.




இன்சுலின் உணர்திறன் மனிதர்களுக்கு மாறாது (Insulin Sensitivity). உடல்மன நலமுள்ளவர்களுக்குச் சுரக்கும் இன்சுலின் எந்தச் சூழ்நிலையிலும் தவறாக வேலை செய்யாது..








பக்கவிளைவுகள் என்னும் எதிர்விளைவுகள் கிடையாது.




 இன்சுலினை இங்கு தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.











உடல் இன்சுலினை அதிகமாகச் சுரக்காது. தேவையான அளவுதான் சுரக்கும்.





செயற்கையானது

வேதியல் (Chemical)

 உயிரற்ற மூலத்திலிருந்து (Non living source) பெறப்பட்ட செயற்கையான இரசாயனப் பொருள்



தயாரிப்பில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

செயற்கையாக தயாரிக்கப்படும் இன்சுலின் இரத்த வகைகளுக்குத் தகுந்தாற்போல இணைந்து செயல்பட முடியாது

இதில் மிருக இன்சுலின், , செயற்கை இன்சுலின், மற்றும் அனலாக் இன்சுலின் ஆகிய மூன்று வகை இருக்கின்றன..



இதில் பதிமூன்று வகையான செயல்பாடுகள் உண்டு.

சர்க்கரை நோயில் பல வகை உண்டு.சர்க்கரை நோய் 1, 2, கர்ப்பிணிப் பெண்களின் சர்க்கரை நோய், இளைஞர்களின் சர்க்கரை நோய், எல்லோரையும் பிடிக்கும் சர்க்கரை நொய் என்று பல வகை உண்டு


இதில் இன்சுலின் உணர்திறனை.’டெஸ்ட்’ செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும். இதில் மனிதத் தவறுகள் மற்றும் சோதனைக் கருவிகளின் குறைபாடுகள் ஆகியவற்றால், தவறுகள் ஏற்படும்பொழுது, தவறாக தேர்வு செய்யப்பட்ட செயற்கை இன்சுலின் தவறாக வேலை செய்ய வாய்ப்புண்டு.

சுமார் 12 (பாரா 79) சர்க்கரை நோயின் அறிகுறி சுமார்- 23 பக்கவிளைவுகள் (பாராக்கள் 25,26,27 ) என்னும் எதிர்நோய்கள் உண்டு.

பல வகை இன்சுலின்கள், சர்க்கரை நோய்கள், பல நிறுவனத் தயாரிப்புகள், பல வகை செயல்பாடுகள், இன்சுலின் உணர்திறன், பக்கவிளைவுகள் என்னும் எதிர்நோய்கள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்சுலினைத் தேர்ந்தெடுப்பதில் தவறு ஏற்பட வாய்ப்புண்டு.

செலுத்தும் இன்சுலின் அதிகமாகிவிட்டால், குறை சர்க்கரை (low sugar) ஏற்பட்டு,    ‘கோமா’ நிலைக்குக் கொண்டு செல்வது உட்பட கடுமையான விளைவுகள் ஏற்படும்..





29.    மேற்குறிப்பிட்ட ஒப்பீட்டு அட்டவணையின்படி, மக்களின் உடலில்களில் சுரக்கும் இன்சுலினுக்கும், செயற்கையாகத் தயாரிக்கப்படும் இன்சுலினுக்கும் பனிரண்டு வேறுபாடுகள் இருக்கின்றன. இவைகள்தான், சர்க்கரை நோயாளிகள் நிரந்தரமாகக் குணமாகாமல் ஆவதற்கும், உறுப்புக்களும் மற்ற அவயங்களும் சேதமாவதற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

30.    உடலின், வேறுபாட்டுக் கொள்கை.
A.ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் (POWER HOUSE) ஜெனரேட்டர் 1 மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்து கொண்டிருக்கிறது. அதன் மின்னழுத்தம் (VOLTAGE) 11 கிலோ வோல்ட், மும்முனை  மின்சாரத்தின் கட்ட வரிசை (PHASE SEQUENCE) RYB, அதிர்வெண் (FREQUENCY) 50 சைக்கில்ஸ் பெர் செக் (CYCLES PER SEC) ஆகிய பராமீட்டர்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது 2-வது ஜெனரேட்டர் பராமரிப்பு வேலை முடிந்து உற்பத்திக்குத் தயாராகி இயந்திரத்தைத் துவக்கிவிட்டார்கள். இது மின் உற்ப்பத்தியைத் தொடங்கிவிட்டது. இந்த 2-வது ஜெனரேட்டரின் மின்சாரத்தை 1-வது ஜெனரேட்டரோடு இணைக்க (SYNCHRONIZE)  வேண்டும். அப்படி இணைப்பதற்கு ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.

31.    இந்த 2-வது ஜெனரேட்டரின் பராமீட்டர்களும், 11 கிலோ வோல்ட், RYB மற்றும் 50 சைக்கில்ஸ் பெர் செக் (CYCLES PER SEC) வந்த பிறகுதான் இணைக்க முடியும். இதில் ஒன்று மாறினாலும் (BRY என்று மாறினாலும்) இணைக்க முடியாது. இயந்திரங்களை இணைக்கவே இரண்டு இயந்திரங்களின் பாராமீட்டர்களும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது உயிரோட்டம் உள்ள உடல், பனிரண்டு வேற்றுமைகளைக் கொண்ட செயற்கை இன்சுலினை எப்படி ஏற்றுக் கொள்ளும்!

32.    B. எனக்கு சளியும், இளப்பும் (WHEEZING) இருந்த காலத்தில், பச்சை காய்கறிகளையும், பழங்களையும், பச்சையாக, சாப்பிட்டு வந்தால், இளப்பைக் குணப்படுத்தலாம் என்று, பத்திரிகைகள் வெளியிட்ட கருத்தினால் ஈர்க்கப்பட்டேன். எனது நோய்களைக் குணப்படுத்துவதற்காக, மூன்று மாதங்களுக்கு மேலாக பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவாக எடுத்துக் கொண்டேன். சமைத்த உணவுக்கு மாறியவுடன், உடல் முழுவதும் சளி மற்றும் மோசமான இளப்பினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் 10-3-1997 அன்று சேர்க்கப்பட்டு, மரணவாயிலுக்குச் சென்று தப்பித்தேன். என்னை வைத்து ஆராய்ச்சி செய்த இறைவன், அன்று அவன்இயற்கை உணவு நோய்களைத் தருகிறதுஎன்ற அரோமணியின் இரண்டாவது விதியை வெளிப்படுத்தினான். அதற்குறிய அறிவியல் விளக்கத்தையும் அளித்தான்.

33.    மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து 99 விழுக்காடு (99%) சமைத்த உணவையும், 1 விழுக்காடு (1%) பழங்களையும் சாப்பிட்டு வந்தான். ஆகவே உடலின் செல்கள் சமைத்த உணவை ஏற்றுக் கொண்டு, சமைக்காத உணவை பழங்கள் உள்படஒவ்வாமையால் அல்லதுஎதிர்ப்பால்சாப்பிட்ட பழங்களை கழிவாக மாற்றி வெளியில் நோய் என்ற பெயரில் அனுப்புகின்றன. இதுதான் அன்று எனக்கு நடந்தது. சாப்பிட்ட காய்கறிகள், பழங்கள் அத்தனையும்சளிஎன்னும் கழிவுப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது.

34.    உடல் சமைக்காத பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஏன் எதிர்க்கிறது என்பதற்கு அவன் விளக்கமளித்தான். சமைத்த உணவுக்கும் சமைக்காத உணவுக்கும் வேறுபாடுகள் பல இருக்கின்றன. அந்த வேறுபாடுகள்தான் சமைக்காத பழங்களை உடலின் இணைய (SYNCHRONIZATION) முடியாதபடி உடல் எதிர்க்கிறது என்ற விளக்கத்தை அளித்தான். கீழை அட்டவணையில் சில முக்கிய வேறுபாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வரிசை எண்
சமைத்த உணவு
சமைக்காத உணவு உ,ம் பழங்கள்
1


2




3

4




5.
வெப்ப ஆற்றலைப் பெற்றது.


வெப்பத்தை உட்கொண்டு வேதியல் (chemical) மாற்றமடைகிறது; புதிய பொருட்களாக மாறுகின்றன.

மாற்றம் நிரந்தரமானது

எளிதில் பற்றி எரியும். ஆகவே ஆற்றலும் உடலுக்கு விரைவில் கிடைக்கும்.


உணவுப் பொருட்கள் கூடுதல் அகஆற்றலைப் (internal energy) பெறுகின்றன.
வெப்ப ஆற்றலைப் பெறாதது.

வேதியல் மாற்றமடைவதில்லை.



மாற்றம் அடையாதது.

பற்றி எரிய தாமதமாகும். ஆகவே ஆற்றல் தாமதமாகக் கிடைக்கும்.

வெப்ப ஆற்றல் இல்லாததால், கூடுதல் ஆற்றல் கிடைக்க வாய்ப்பில்லை.


35.    ஆகவேதான், சமைத்த உணவு ஆற்றல் மிகுந்தது என்றும், பழங்களை வேகவைத்து சாப்பிடச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறேன். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும் என்னுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னுடையஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

36.    நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு வேறுப்பாடுகள் கொண்டதாக இருந்தாலே, அந்த உணவை கழிவாக மாற்றி, நோயாக வெளியே அனுப்பிவிடுகிறது. அப்படியிருக்கும்போது பனிரண்டு வேற்றுமைகளைக் கொண்ட செயற்கை இன்சுலினை உடல் எப்படி ஏற்று இணைந்து செயல்படும்!

37.    C. நமது உடலின் வெப்பநிலை (TEMPERATURE) 37 °C. ஆனால் நீங்கள் 50°C சூடான காபி, 48°C சூடான சோறு, 25°C குளிர்ச்சியுள்ள குளிர்ந்த பானம், 22°C குளிர்ச்சியுள்ள பிரிட்ஜ் நீர். -10°C ஐஸ் கிரீம் ஆகிய செண்டி கிரேடு வெப்பநிலைகளில் உணவு எடுத்துக்கொள்கிறீர்கள். இந்த வெப்பநிலைகள் 37°Cக்கு சமமாக இல்லை. ஆகவே அப்படி வெப்பவேறுபாடுடன் கூடிய உணவை, உடலானது கழிவுப் பொருட்களாக மாற்றி, பற்கள் உட்பட, உணவு மண்டல உறுப்புகளின் நோய்களாக வெளிப்படுத்துகிறது. இதை அடிபடையாகக் கொண்டுதான் அரோமணியின் 3-வது விதியை இறைவன் அருளினான்.அந்த விதிஉடலின் வெப்பநிலை 37°C -க்கு வேறுபட்ட உணவின் வெப்பநிலைக்குத தகுந்தாற்போல, நோய்கள் தோன்றும்என்று கூறுகிறது. இந்த விதியின்படிதான், உண்ணும் உணவு சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.  விபரங்களுக்குஅரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்புத்தகத்தைத் தயவு செய்து படியுங்கள்; விளக்கம் பெறுங்கள்.

38.    மேற்குறிப்பிட்ட மூன்று விதமான வேறுபாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப, உடல் தனக்குள் இருக்கும் உறுப்புகளும், நாடி, நரம்புகளும், தசைகளும், அதில் சுரக்கும் சுரப்பி நீர்களும், இரத்தமும், அதன் கடைசி செல்லுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரேமாதிரியான பராமீட்டர்களும் ஒத்துப்போகும்படியாக இருந்தால்தான், உடல் வெளிப்பொருளை உணவு உட்பட ஏற்றுக்கொள்ளும். மாறி இருக்குமானால் அதை எதிர்த்து கழிவுப்பொருளாக ஆக்கி நோயாக வெளித்தள்ளுகிறது. இதைத்தான் உடலின் வேறுபாட்டுக் கொளகை என்கிறோம்.

39.    உடல், செயற்கை இன்சுலினை ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்குறிப்பிட்ட கொள்கையின்படிதான், கணையும் சுரக்கின்ற இன்சுலினுக்கும், வெளியிலிருந்து செலுத்துகின்ற இன்சுலினுக்கும் பனிரண்டு வேறுபாடுகள் இருக்கின்றன. ஆகவே உடல் வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்தும் இன்சுலினை உடல் எதிர்க்கிறது; எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது; இவைகள் நோய்களாக வெளித்தள்ளப்படுகிறது. ஒரு வேறுபாடு இருந்தால் கூட உடல் செயற்கை இன்சுலினை ஏற்றுக் கொள்ளாது.

40.  உடல் மிகவும் நுணுக்கமானது. தனக்குப் பிடிக்காததை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை ஓயாது, உறங்காது. ‘ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்புத்தகத்தில் 9-வது விதியின்கீழ், நான் சொல்லப்போவது வருகிறது. ஒரு ஆண்டாக தலைவலியும், இளப்பும் இருந்து கொண்டிருந்தது, எனக்குக் காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். பிறகு இறைவனின் தலையிட்டின் பேரில், அந்த நோய்கள் சிந்தடிக் போர்வையைப் போர்த்திப் படுத்ததால் வந்தது என்பதை அறிந்தேன். பருத்தியால் செய்த போர்வையை மாற்றியவுடன் தலைவலியும், இளப்பும் சட்டென மறைந்தது. ஆகவே உள்ளூர்ப் பழங்களையும், காய்கறிகளையும், தானிய வகைகளையும்தான் உடல் ஏற்றுக் கொள்கிறது. ஒரு செயற்கைப் போர்வையையே உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதென்றால், உடலுக்குள் செலுத்தும் செயற்கை இன்சுலினை உடல் எப்படி ஏற்றுக்கொள்ளும்!
.
41.  இன்சுலின் எடுத்துக்கொண்டும், கட்டுப்பாடுகளைச் சரியாக கடைப்பிடித்தும், உறுப்புகள் சேதமாகின்றன. இது ஏன், எப்படி?
இரத்தத்தில் உயர் சர்க்கரையை கட்டுப்படுத்தினால், வயிற்றில் கோளாறுகளையும், சிறுநீரக சேதத்தையும் (KIDNEY DAMAGE) , கண் குருட்டையும் (BLINDNESS), நரம்புகள் கோளாறுகளையும் (NERVE PROBLEMS), கால்கள் இழப்பையும் (LOSS OF LIMBS), ஆண்மைக் கோளாறுகளையும் (SEXUAL FUNCTION PROBLEMS), ‘ஹார்ட் அட்டாக்மற்றும் பக்கவாதத்திலிருந்தும் (STROKE) தப்பிக்கலாம். என்று சொல்லப்படுகிறது.

42.    .அதைக் கட்டுப்படுத்தத்தான், சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி, மாத்திரைகளை தவறாது எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியிருந்தும் எந்த சர்க்கரை நோயாளிக்கும் சரியான சர்க்கரை அளவு (120 mg/dl) வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

43.    உடல் இன்சுலினை சுரக்காததால், அதற்குச் சமமான இன்சுலினை வெளியிலிருந்து ஊசி மூலம் அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியானால், சர்க்கரை நோயாளிகளுக்குக் குணம் கிடைத்து, எதை வேணும்னாலும் சாப்பிடலாம் என்ற நிலை எந்த சர்க்கரை நோயாளிக்காவது வந்திருக்கிறதா! அரிசி சோரைச் சாப்பிடக் கூடாது; ஓரிரு பழங்களைத் தவிர, அவ்ற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; சீனி சேர்க்கவே கூடாது, கறி (MUTTON) சாப்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்- இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏன்? இன்சுலின் எடுத்துக்கொண்டும், கட்டுப்பாடுகளைச் சரியாக கடைப்பிடித்தும், உறுப்புகள் சேதமாகின்றன. இது ஏன், எப்படி?

44.    இங்குதான் உடல் சுரக்கும் இன்சுலினுக்கும், செயற்கை இன்சுலினுக்கும் உள்ள வேறுபாட்டுக் கொள்கை பதில் சொல்ல வருகிறது. அதுமட்டுமல்லபாவம் ஓரிடம், பலி ஓரிடம்,’ என்ற வழக்கு மொழியும் உதவிக்கு வருகிறது. மேலே குறிப்பிட்ட நோய்கள் எதுவும் இரத்தத்தில் உள்ள உயர் சர்க்கரையின் அளவினால் வருவது அல்ல. செயற்கை இன்சுலினால்தான், நாம் விரும்பியதை சாப்பிட முடியாமல் போவது; நோய்கள் வருவது;, உறுப்புகளின் இழப்பு ஆகியவை அனைத்தும் ஏற்படுகின்றன. நாம் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரைதான் காரணம் என்று சர்க்கரையின் மீது வீண் பழி போடுகிறோம். அதாவது பாவம் செய்தது செயற்கை இன்சுலின்; ஆனால் பலி போடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் மீது.

45.    செயற்கை இன்சுலினை உடல் எதிர்க்கிறது. எதிர்த்து அந்த இன்சுலினை பயன்படுத்தாமல், அப்படியே இரசாயன கழிவுப்பொருளாக மாற்றுவதற்கு கல்லீரலுக்கு (LIVER) அனுப்புகிறது. கல்லீரல் அந்த இன்சுலினை கழிவுப் பொருளாக மாற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளா நோய்களாக வெளித்தள்ளுகிறது.

46.    வசதிமிக்க ஒருவருக்கு, 35 வயதில் சர்க்கரை நோய் ஆரம்பித்து, 76-வயது வரை, பெயர் பெற்ற ஒரு சர்க்கரை நிபுணர் நடத்தும் மருத்துவ மனையில், அனைத்து டெஸ்ட்களும் செய்து, மருந்து மாத்திரை தவறாது எடுத்துக் கொண்டும், நடு நடுவே வந்த தொந்தரவுகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டும் வந்த சர்க்கரை நோயாளிக்கு, 76-வது வயதில் 96% இதய அடைப்பு வந்திருக்கிறது. இது எதனால்?

47.    மேற்கூறிய இருதய அடைப்பு,, அவர் நாற்பத்தொரு ஆண்டுகளாக போட்ட செயற்கை இன்சுலினால்தான் வந்தது. இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! இப்படி மூன்று முறை ஏன் சத்தியம் செய்கிறேன் என்றால், சர்க்கரை நோயாளிகளை நம்பவைப்பதற்கு இதைவிட எனக்கு வேறு வழி தெரியவில்லை! ஏனென்றால் ஒரு சாதாரண, எளிய நோயை, குணப்படுத்தக்கூடிய நோயை, ஆளைக்கொல்லும் அரக்க நோயாக, பூதாகரமாகக் காட்டி, அவர்களைப் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அந்தப் பயத்திலிருந்தும் அறியாமை என்னும் இருட்டிலிருந்தும் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்.

48.    பக்க விளைவுகள் என்னும் எதிர்விளைவுகளில் ஒரு பட்டியல் எதிர் நோய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதோடு மேலும் பல நோய்களை கீழே கொடுத்துள்ளேன்.

49.    பெண்களுக்கு உண்டாகும் நோய்கள்: யோனி மற்றும் வாய் ஈஸ்ட் தொற்று மற்றும் யோனி புண் (VAGINAL AND ORAL YEAST INFECTIONS AND VAGINAL THRUSH), சிறுநீரகத் தொற்றுகள் (URINARY INFECTIONS), பெண் பாலியல் செயலிழப்பு, (FEMALE SEXUAL DYSFUNCTION) பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (POLYCYSTIC OVARY SYNDROME)

50.    ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக ஏற்படும் நோய்கள்: கூடுதலான தாகம் மற்றும் பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், காரணமில்லாமல் எடை கூடுதல் அல்லது குறைதல், , புண்கள் மெதுவாக ஆறுதல், , தோல் தொற்றுகள்மடிப்புகளில் கருத்தத் தோல் திட்டுகள் ஏற்படுதல் (PATCHES OF DARKER SKIN IN AREAS OF THE BODY THAT HAVE CREASES), அரிப்பு, மூச்சு இனிப்புப் பழ, அல்லது அசிடோன் வாசனை வீசுதல் (BREATH THAT HAS A SWEET, FRUITY, OR ACETONE ODOR), கைகளில் அல்லது பாதங்களில் குறை உணர்வினை உணருதல்.

51.    மேற்குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் செயற்கை இன்சுலினை ஏற்காததால், உடல் ஏற்படுத்திய எதிர் நோய்களாகம். நோய்கள் முற்றும்போது கால் விரலை எடுப்பது, காலை எடுப்பதுகண்பார்வை போவது, போன்ற உறுப்புகள் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமாகி விடுகின்றன.

52.    இன்சுலின் செல்களை பழுது பார்ப்பது அல்லது செயற்கை இன்சுலினை உடலுக்குள் அனுப்புவதுஇதில் எது நல்லது?

தவழக்கூடிய குழந்தைக்கு அருகில் கிடக்கும் பொம்மையை எடுத்துத் தூரப் போடுகிறோம். உடனே அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று அந்தப் பொம்மையை எடுக்கிறது. இப்படித்தான் குழந்தையை தவழ்ந்து, எழுந்து பிறகு நடக்க வைக்கிறோம். இப்படிச் செய்யாமல், பொம்மையை குழந்தையின் பக்கத்திலேயே போட்டுக் கொண்டிருந்தால், குழந்தை தவழவே தவழாது. நடக்காத சவளப் பிள்ளையாகிவிடும். இதே போலத்தான், பழுதுபட்ட செல்களை சரிசெய்து மீண்டும் இன்சுலின் சுரக்கச் செய்ய வேண்டுமே தவிர, உடலுக்குள் இன்சுலினைச் செலுத்தி, செல்களின் வளர்ச்சியைத் தடை செய்யக் கூடாது. இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எந்த வயதில் சர்க்கரை நோய் ஆரம்பித்தாலும் அந்த வயதிலிருந்தே இன்சுலின் போடப்படுகிறது. இது வணிகத்திற்கு நன்றாக இருக்கலாம்; ஆனால், இயற்கைக்கும் உண்மைக்கும் மாறானது.

53.    பழுது பட்ட இன்சுலின் செல்களை சரி செய்து வளர்ச்சியடையச் செய்ய முடியுமா?
முடியும். எனக்கு இப்பொழுது வயது 75. 1969-ல் சளி, இளப்பு ஆரம்பித்தது. மருந்து மாத்திரைகளும் கட்டாயமாக்கப்பட்டது. 2008 வரை தொடர்ந்தது. கிடடத்தட்ட 38 ஆண்டுகள் மருந்தோடு வாழ்ந்தேன். உடல் பலவீனமானது; சளி, தும்மல்,மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளர்ச்சி, தலைவலி, வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றோட்டம், வேறு வேறு உடல் வலிகள், பல் பிரச்சனைகள், இளப்புஇப்படி என்னிடமிருந்த நோய்களின் பட்டியல் நீண்டது. வயிறு சுருங்கியிருந்திருக்கிறது  என்பதை மே மாதம், 2016-ல்தான் தெரிந்துகொண்டேன். ஏன் வயிறு சுருங்கியது என்பதை நீங்களை ஊகித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அக்குபங்சர் சிகிச்சைதான் என்னை அறிய வைத்தது. அதுவரை எனக்குப் பசியிருக்கும்; ஆனால் வயிறு நிறைய சாப்பிடமுடியாது. ஒரு ஏப்பத்திற்கு மேல் சாப்பிட்டால், வயிற்றில் மந்த உணர்வு   ஆரம்பித்து விடும். அதனால் அதாவது உணவு எடுத்துக்கொள்ளும் அளவும் குறைந்துகொண்டே வந்தது; எடையும் குறைந்து கொண்டே வந்தது. எடை குறைவு எனக்கு மிகப் பெரிய கவலையைக் கொடுத்தது. உணவுக் குறைவும், தொடர்ந்து வந்த சளியும்தான் எனது எடை குறைவுக்குக் காரணம் என்று தெரிந்தும் அந்த இரண்டையும் எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

54.    4-12-1993 லிருந்து 30-8-2013 வரையிலும் அதாவது 20 ஆண்டுகளில், ஒன்றன் பின் ஒன்றாக உடல் நலத்திற்குறிய ஒன்பது இயற்கை விதிகளையும் இறைவன் செய்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்து, அவற்றை தவறாது கடைப்பிடித்தேன்; இறைவன், 12-12-2000-ல் மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை அருளினார்இவ்வாறு இரட்டை மருத்துவத்தை- இம (TWIN MEDICINE-TM) கடைப்பிடித்து வரவும், டிசம்பர் 15, 2008-லிருந்து மருந்து எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் எனது எடை கூடவில்லை. ஜனவரி, 2015 லிருந்து அக்குபங்சர் சிகிச்சையையும் சேர்த்துக்கொண்டேன்.

55.    தொடர்ந்து மேற்கொண்ட அக்குபங்சரின் ஒரு புள்ளி தொடு சிகிச்சைதான் மே 20, 2016-ல் எனது சுருங்கியிருந்த வயிற்றை விரிவடைய வைத்தது. 38 ஆண்டு காலமாக நான் சாப்பிட்ட மருந்து மாத்திரைகள் எனது வயிற்றைச் சுருக்கிவிட்டது. அன்று வழக்கமாக சாப்பிடுவதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகச் சாப்பிட்டேன். அதாவது ஒரு ஏப்பத்தோடு சாப்பிடுவதை நிறுத்தியவன் மூன்று ஏப்பங்கள் வரை சாப்பிட்டேன். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஅதனால் வயிற்றில் மந்த உணர்வோ அல்லது  வலியோ இல்லை. அதற்குப் பதிலாக கழிவுகள் அதிகமாகத் தேங்கி, மே 25 முதல் தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், இருமல் முதலியனவாக வெளியேறியது. மருத்துவ மனப்பயிற்சி மற்றும் அக்குப்பங்சரில் சிகிச்சை எடுத்து 15 நாட்களில் குணமானது.

56.    வயிறு விரிவடைந்ததிலிருந்து எனது சாப்பாட்டில் ஏற்றம் இறக்கம் இருந்தது. இறுதியில் இரண்டு ஏப்பத்தில் பசி உணர்வு மறைந்து விடுகிறது என்பதை அறிந்து அந்த அளவுலேயே நிலை நிறுத்தி வருகிறேன். இதற்கிடையில் உடலின் ஒராண்டு பராமரிப்பு 11, நவம்பர் 2016-ல் தொடங்கி மார்ச் 5-ந் தேதி முடிவடைந்தது. கடந்த நான்கு மாதங்களில் தேங்கியிருந்த கழிவுப் பொருட்களையெல்லாம் நீக்கி (நோய்களையெல்லாம் குணப்படுத்தி), உடலானது அடுத்த 8 மாதங்களுக்கு பணி செய்வதற்குகந்த உடலாக மாற்றி ஆத்மாவிடம் ஒப்படைத்தது.

57.    இதற்குப்பிறகுதான் அதிசயம் நடந்தது. சளி முற்றிலுமாக குறைந்துவிட்டது; பசிக்குத் தகுந்தாற்போல உணவும் அதிகரித்தது. எனது எடையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எடை  அதிகரிக்கிறது என்றால் என்ன பொருள்? சளி எப்படி உற்பத்தியாகிறது! மூக்குச் சளி சவ்வுகள் (NASAL MUCOUS MEMBRANE) பழுதாவதாலும் நுரையீரல்கள் (LUNGS) பழுதுபடுவதாலும் சளி உற்பத்தியாகிறது.

58.    மேற்கூறிய இரண்டினுடைய 75 வயதுள்ள பழுதுபட்ட செல்களின் வளர்ச்சியால்,சளி உற்பத்தி குறைந்தது; அந்த செல்கள் மட்டுமல்லாது, எடை கூடியதால், அனைத்து செல்களும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று பொருள்; செல்களின் எடை கூடும்போது தசைகளின் எடையும் கூடுகிறது; இதனால் ஒட்டுமொத்த உடலின் எடையும் கூடியிருக்கிறது. இந்த 75 வயதுள்ள செல்கள் வளர்ச்சியடையும்போது 36 வயதுள்ள இன்சுலினைச் சுரக்கும் செல்கள் வளர்ச்சியடையாதா! இன்சுலின் சுரக்கும் செல்களோடு உடலின் அனைத்து செல்களும் வளர்ச்சியடையும். அந்த சர்க்கரை நோயாளியின் கணையம் இன்சுலினைச் சுரக்க ஆரம்பிக்கும்; எடை கூடுவதோடு மட்டுமல்லாமல், இதர குறைபாடுகளிருந்தால், அக்குறைபாடுகளும் நீங்கிவிடும்.

59.    அறுவை சிகிச்சைக்குப் பிறகு செல்கள் வளர்ச்சியடைகின்றன

உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான அறுவைசிகிச்சைகள் (OPERATIONS) மேற்கொள்ளப்படுகின்றன. முறிந்த எலும்புகள் ஒட்ட வைத்து தையல் போடப்படுகின்றன; முறிந்த எலும்புகளின் செல்கள் வளர்ச்சியடைந்து, சரியாகி, அதன் மேல் உள்ள அறுக்கப்பட்ட தசைகளின் செல்களும் வளர்ச்சியடைந்து மூடிக்கொள்கின்றன. விபத்துக்குள்ளான நோயாளி சரியாகி நடக்க ஆரம்பிக்கிறார்.

60.    இதேபோல 76 வயது நிரம்பிய இருதய நோயாளிக்குதிறந்த இருதய அறுவை சிகிச்சை (OPEN HEART SURGERY)’ செய்யப்பட்டு குணமாகிறார். இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கண்களின் மாற்று அறுவை சிகிச்சை, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவை சிகிச்சை இன்னும் பிற உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சைகள், கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை, உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை, முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை, வயிற்றில் குழந்தையை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை. மூட்டு வலிக்கு அறுவைச் சிகிச்சை, விபத்துக்களில் சேதமடைந்த உறுப்புகளைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை, மூக்கில் வளர்ந்த சதையை நீக்க அறுவை சிகிச்சை, நெறுப்பு விபத்தில் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை, கர்ப்பப் பையை வெட்டி எறிதல் என நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

61.    மேற்கூறிய அறுவை சிகிச்சைகளில், நரம்புகள் அறுக்கப்படுகின்றன; இரத்த நாளங்கள் அறுக்கப்படுகின்றன; தசைகள் அறுக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நரம்புகளின் செல்களும், இரத்த நாளங்களின் செல்களும்; தசைகளின் செல்களும் வளர்வதால்தான் நோயாளிகள் குணம் பெறுகிறார்கள்.

62.    மேற்கூறிய அனைத்தும் வளர்ச்சியடையும்போது, இன்சுலினைச் சுரக்கும் செல்கள் வளர்ச்சியடையாதா? வளர்ச்சியடையும். ஆனால், இன்சுலினைக் கண்டுபிடிக்கத்தான், ஆராய்ச்சியாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து பொருளுதவியும் செய்யப்பட்டது. அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் செல்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியை செய்வதற்கு வேண்டிய வசதிகள் மற்றும் பொருளாதார ஒதுக்கீடும் செய்து தரப்படவில்லை.

63.    ‘டெஸ்ட்’ செய்ய வேண்டியது அவசியமா?

சளி ஒரு கழிவுப் பொருள்; சளியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சோதனை செய்து எவ்வளவு அளவு என்று அளப்பதில்லை. அந்த கழிவுப் பொருள் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் வெளியேறுகிறது. சர்க்கரை நோயில் சர்க்கரையும் ஒரு கழிவுப் பொருள். கணையத்தில் இன்சுலினைச் சுரக்கும் பகுதி பழுதுபட்டு சர்க்கரையை குளுகோஜனாக மாற்ற முடியாமல், அதனை கழிவுப் பொருளாக இரத்தத்தில் அனுப்புகிறது. இரத்தம் அந்தக் கழிவுப்பொருளை சிறுநீரகத்திற்கு கொண்டுவந்து, சிறுநீரோடு வெளியேற்றுகிறது.

64.    சளியை மூன்று மாதத்திற்கு ஒரு முறைடெஸ்ட்செய்து அளக்காத போது, சர்க்கரை என்ற கழிவுப் பொருளை மட்டும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அளப்பதின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. தற்காலத்தில் ‘டெஸ்ட்கள் என்பது மக்களுக்குப் பயத்தை உண்டாக்கும் சோதனையாக மாறிவிட்டது.

65.    இப்பொழுது மக்கள் டாக்டர்களைகன்சல்ட்பண்ணாமலே மருந்து கடைகளில் போய் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அந்த மருந்துகள் ஏற்படுத்தும் எதிர்நோய்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆகவே அரசு, 10 மாத்திரைகள் கொண்ட அட்டைகளிலும், மருந்து பாட்டில்களிலும், அவைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னும் எதிர்விளைவுகளை, பெரிய எழுத்துக்களில் பொறிக்கச் செய்ய வேண்டும். அதைப் படித்த மக்களுக்கு, டாக்டர்களைகன்சல்டசெய்த பிறகே மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கம் வந்து விடும்.

66.    இப்பொழுது இன்சுலின் சுரக்கும் செல்களின் வளர்ச்சியை தடுப்பது எது? செயற்கையாக இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதுதான். இது தொடர வேண்டுமா? வாழ்வின் இறுதிநாட்கள் வரை சர்க்கரை நோயாளியாகவே காலம் தள்ள வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

67.    ஆண்மைக் குறைவு:

என்னிடம் வரும் நோயாளிகள்சார் எனக்கு ஆண்மைக் குறைவு இருக்கு, அதை குணப்படுத்த முடியுமா?” என்று கேட்பார்கள். உடனே நான்குணமாக்க முடியுமே! சர்க்கரை நோய் இருக்காஎன்று நான் கேட்பேன். அதற்கு அவர்கள்ஆம். இப்பொழுது இன்சுலின் எடுத்து வருகிறேன்என்பார்கள். நான்நான் சிகிச்சை அளிக்கிறேன். ஆனால், நீங்கள் ஊசி, மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட வேண்டும்என்று சொல்வேன்யோசித்துச் சொல்கிறேன்என்று என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். திரும்ப வரமாட்டார்கள்.

ஆண்மைக் குறைவே அவர்கள் போடும் இன்சுலினால்தான் வருகிறது என்பதை அறியாமல் தொடர்ந்து போட்டு வருகிறார்கள். இன்சுலின் போடுவதை நிறுத்தினால்தான் ஆண்மைக் குறைவை சரி செய்ய முடியும். பெண்மைக் குறைவும் இன்சுலின் போடுவதால்தான் பெண்களுக்கு ஏற்படுகிறது. இளவயதிலும், நடுத்தர வயதிலும் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியடைவதை விட்டு விட்டு, இன்சுலினை போட்டு ஆண்மைக் குறைவை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு இருபாலாரும் மகிழ்ச்சியை இழந்து தவிப்பதை எண்ணி எனது மனம் வேதனைப்படுகிறது. முதிர்ந்த வயதிலும் பாலியல் உணர்வு குறைவில்லாமல் கிடைக்கும்படியாகத்தான் இறைவன் மனிதனின் உடலை வலிமையாகப் படைத்திருக்கிறான்.

68.    இரட்டை மருத்துவம் மற்றும் அக்குபங்சர் தொடு சிகிச்சைகளில் சிகிச்சை:
இரண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு இரட்டை மருத்துவம்-இம  (TWIN MEDICINE-TM) (1-அரோமணியின் 9 விதிக்குர்களை உள்ளடக்கிய வாழும் தாய் மருத்துவம் மற்றும் 2-மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம்) மற்றும் அக்குபங்சர் ஒற்றைப் புள்ளி தொடு சிகிச்சை (SINGLE POINT TOUCH THERAPY-ACUPUNCTURE ) மூலம் சிகிச்சை கொடுத்தேன். மருந்து மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை மட்டும்தான் விதித்தேன். சிகிச்சை காலம் முடியும் வரை உணவில் பால், தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும், மற்ற எதையும் சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தேன். அவர்களும் அதனை ஏற்று அதன்படியே நடந்து கொண்டார்கள்.

69.    சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைத்ததாகக் கூறினார்கள். நல்ல பசி ஏற்படுவதாகவும், தூக்கம் கிடைப்பதாகவும், தாகம் அடிக்கடி ஏற்படுவதில்லை என்றும், இரவில் சிறுநீர் அடிக்கடி வருவதில்லை என்றும் களைப்பு ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்தார்கள்.

70.    ஒரே வாரத்தில் இவ்வளவு முன்னேற்றமா என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்குள்ளாகியிருக்கும் ஒரு பெண்ணிடம், ”இனிமேல் உனக்குச் சித்திரவதை கிடையாது. இங்கிருந்து நீ போகலாம்என்று சொன்னால், முதன் முதலில் அவள் எதிலிருந்து விடுபடுகிறாள்? மனதில் இதுநாள் வரை இருந்த மனவழுத்தம் மற்றும் மனமுறுக்கிலிருந்து (STRESS AND STRAIN) விடுபடுகிறாள்.. அதற்கப்புறம்தான் மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் இறக்கை கட்டி பறக்க ஆரம்பிக்கும்

71.    இதேபோலத்தான், தொடர்ந்து போட்டு வரும் இன்சுலினால், உடலின் அனைத்து உறுப்புகளும் தாங்க முடியாத மனவழுத்தம் மற்றும் மனமுறுக்கு ஆகியவை இருந்திருக்கிறது. உடல் தனது எதிர்ப்பை எதிர்நோய்களின் மூலம் தெரியப்படுத்தினாலும் வணிகம் ஏற்படுத்திய அறியாமை வளையத்தை விட்டும், மற்றும் பயத்திலிருந்தும் சர்க்கரை நோயாளிகளால் வெளிவரமுடியவில்லை.

72.    எனது அறிவுரையைக் கேட்டு, இன்சுலின் போடுவதை நிறுத்தியதும், உடலில் நிலவிய மனவழுத்தம் மற்றும் மனமுறுக்கு முதலில் விலகிவிட்டது. அதற்கப்புறம் எனது சிகிச்சை சுலபமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இருவர் இரண்டு மாதங்களாகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள். மூன்றாவது நபர் ஒரு வருடம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எனது சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த காலங்களில் அவர்கள் இன்சுலின் போடவில்லை; வேறு மாத்திரைகள், சத்து மாத்திரை போன்ற எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி இருந்தும் இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கும்போது உண்டாகும் தொந்தரவுகள் எதுவும் இல்லை.

73.    இருவரும்டெஸ்ட்எடுத்தார்கள். அதில் ‘475’ ml/dl யூனிட் அளவுக்கு காட்டியிருக்கிறது. வணிகம், TV, பத்திரிகை வாயிலாக தினசரி, “ஒரு நாள் இன்சுலின் போடாவிட்டாலும் கை போய்விடும், கால் போய்விடும், கண் போய்விடும்என்று மக்களைப் பயமுறுத்தும் பிரசாரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதைத் தவிர, மனப்பயிற்சி மூலம் மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளாதவர்களுக்கு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைத்து அறிவுரை கூறவும், வதந்திகளைப் பரப்புவதற்கு விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில் சிலர், “ஆமாப்பா! ஒரு நாள் இன்சுலின் போடாவிட்டாலும், மயக்கம் வரும், கிருகிருப்பு வரும்என்று பயமுறுத்தவும் செய்வார்கள். இந்த மாதிரியான பிரசாரத்திற்குப் பயந்துதான் அந்த இருவரும்  என்னிடம் சொல்லாமலே சிகிச்சையை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் வந்திருந்தால் அவர்கள் பயத்தைப் போக்கியிருப்பேன். மூன்றாவது நபர், அவருக்குத் தொந்தரவுகள் எதுவுமில்லாததால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

74.    நான் இப்பொழுது சொல்வது அவர்களுக்குச் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். இந்த கட்டுரையை அவர்கள் படிக்க நேர்ந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியவர்கள் அவர்கள்தான். அந்த மகிழ்ச்சியைத் தர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

75.    இரட்டை மருத்துவமும் அக்குபங்சரும் நோய்களை குணப்படுத்தும் முறை:

நோய்கள் குறிப்பாக சர்க்கரை நோய்கள் இரட்டை மருத்துவம் மற்றும் அக்குபங்சர் மூலம் எப்படி குணமாகிறது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.

76.    முன் கையில் வலி தரக்கூடிய ஒரு பெரிய புண் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வலி கை முழுக்கப் பரவியிருக்கும். உதாரணமாக, புண்ணைச் சுற்றிலும் மூக்கால் அடி தூரம் வரை வலி பரவியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். முக்கால் அடி தூரத்தில் வலி இலேசாக இருக்கும். அரை அடி தூரத்தில் சிறிது வலி அதிகமாக இருக்கும். கால் அடி தூரத்தில் இன்னும் சிறிது வலி அதிகமாக இருக்கும். புண்ணைச் சுற்றிலும் வலி மிக மிக அதிகமாக இருக்கும். இப்பொழுது வலிக்குரிய மருத்துவ மனப்பயிற்சியைச் செய்ய ஆரம்பிக்கிறேன். மனப்பயிற்சியானது முக்கால் அடி தூரத்தில் இருக்கும் இலேசான வலியை முதலில் குணப்படுத்தும்; பிறகு அரை அடி தூரத்திற்கு வரும்போது மனதில் வலி சிறிது அதிகமாக இருக்கும்; அதையும் குணப்படுத்திவிட்டு, மனமானது கால் அடி தூரத்தில் இருக்கும் வலியை எடுத்துக் கொள்ளும்; இங்கு இன்னும் வலி சிறிது அதிகமாகவே இருக்கும்; இதையும் குணப்படுத்திவிட்டு, மனம் புண்ணுக்கு மிக அருகில் வந்துவிட்டது. அப்பொழுது வலி மிக மிக அதிகமாக இருக்கும். மனப்பயிற்சி தொடர்ந்து செய்யும் போது இந்த வலியும் குறைந்து முழுவதுமாக வலியிலிருந்து விடுபடுவேன். சூரியனை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பம் கூடுமா அல்லது குறையுமா?

77.    இப்படித்தான், வலிக்குரிய மனப்பயிற்சி செய்பவர்கள், என்னிடம் பயந்து போய் சார்!, வலி குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே இருக்கிறதுஎன்று கேட்பாரகள். அவர்களுக்கெல்லாம் மேற்கூறிய விளக்கத்தைச் சொல்லிதொடர்ந்து மனப்பயிற்சி செய்யும்படி அறிவுறுத்தி அனுப்புவேன்.

78.    மேலே கூறியதைப் போலத்தான், சர்க்கரை நோயாளிகளுக்கும் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளிலிருந்து குணம் பெறுவார்கள். 1. தாகமும் பசியும் அதிகரித்தல் 2. அடிக்கடி சிறுநீர் கழித்தல் 3. எந்தவித காரணமும் இல்லாமல் எடை குறைதல் அல்லது கூடுதல். 4. களைப்பு 5. மங்களான பார்வை 6 காயங்கள் மெதுவாகக் குணமடைதல் 7. குமட்டல் 8 தோலில் நோய்கள் .9 உடலின் மடிப்பு உள்ள தோல்களில் கருப்புத் தடிப்புகள் தோன்றுதல் 10. எரிச்சல் 11. மூச்சு விடும்போது பழத்தின் இனிப்பு சுவை அல்லது அசிடோன் நாற்றம் இருக்கும் 12. கால்களிலோ அல்லது கைகளிலோ குறைவான உணர்வை உணருதல்.

79.    இரட்டை மருத்துவம் (இம) மற்றும் அக்குபங்சர் (அப) மூலம் சிகிச்சை அளித்தவுடன், மேலே உள்ள தொந்தரவுகள் குறையத் தொடங்குகின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வேண்டியதிருக்கும். அந்தக் காலம் முடிந்தவுடன்தான், இன்சுலினைச் சுரக்கும் செல்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். செல்கள் வளர்ச்சி ஆரம்பிப்பதற்குள்டெஸ்ட்எடுத்தால், ‘475’ ml/dl தான் இருக்கும். மேற்குறிப்பிட்ட வலி உதாரணத்தைப் போல, ‘475’ ml/dl க்கு கூடுதலாகவும் வரலாம். இன்சுலின் சுரப்பிகளின் செல்களின் வளர்ச்சி ஆரம்பித்த பிறகுதான் சுரக்காமலிருந்த இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். அதற்குப் பிறகுதான் ‘475’ ml/dl-லிருந்து குறைய ஆரம்பிக்கும். அப்படி குறைவதற்கு இம மற்றும் அப-சிகிச்சைக்கு காலம் வேண்டும். பல ஆண்டுகள் வேண்டியதில்லை. ஒரு சில ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை எந்த டெஸ்ட்டும் எடுக்க வேண்டியதில்லை; எடுக்க வேண்டிய அவசியமுமில்லை.உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை வைத்தே, குணமாகிக்கொண்டு வருகிறதா இல்லையா என்பதை உடலே சொல்லிவிடும். உடலை விட சிறந்த பரிசோதனை சாலை உலகில் எங்குமில்லை. இன்சுலின் செல்கள் வளர்ச்சியடைந்து சிறுநீரில் கலந்து வரும் சர்க்கரைக் கழிவு குறைந்து வந்தாலே, ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்குப் பெண்மைக் குறைவும் நீங்கி வருவதை உங்கள் உடலே உங்களுக்கு அறிகுறிகள் மூலம் தெரிவித்து விடும். அப்புறம் எதற்கு சோதனை?

80.    இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். இரட்டை மருத்துவம் மற்றும் அக்குபங்சர் தொடு சிகிச்சையில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு உடல் இளைக்க ஆரம்பிக்கும். நோயிலிருந்து குணம் கிடைத்த பிறகு எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

81.    நான் உளுந்த வடையை விரும்பிச் சாப்பிடுவேன். உளுந்த வடை எண்ணையை நன்றாக உறிஞ்சி, ஊதி, உப்பி பள பள வென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும்; சாப்பிட ஆசையைத் தூண்டும். கடையில் சுட்டதாக இருந்தால் அந்த எண்ணை சேராது; மறுநாள் தலைவலி வந்து விடும். அதற்காக, நான் இரண்டு கைகளுக்குள் வடையை வைத்து பிளிந்து எண்ணையை எடுத்து விடுவேன். எண்ணை பிளியப்பட்ட வடை வத்தி ஒட்டிப் போயிருக்கும். அதற்குப் பிறகு வடையை சாப்பிடுவேன். இதேபோலத்தான், நீங்கள் எனது சிகிச்சைக்கு முன்பு எடை அதிகமாகவே இருப்பீர்கள். எனது சிகிச்சையில், உங்கள் உடலுக்குள்ளிருக்கும் நீண்ட காலமாக தேக்கமுற்ற கழிவுப் பொருட்களெல்லாம் பிளிந்து வெளித்தள்ளப்படும். கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்தால், உங்கள் உடல் இளைத்துத்தான் காணப்படும். நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டவுடன், உங்கள் எடை அதிகரிக்க (எனக்கு எடை கூடியதைப் போல) ஆரம்பிக்கும்.

82.    இன்சுலின் பயன்படுத்தாத, இரட்டை மருத்துவம், அக்குபங்சர், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறுவீர்கள்.

83.    இன்சுலின் போடுவதை உடனே நிறுத்துங்கள்! உங்கள் ஆண்மையையும், பெண்மையையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!

  
                                                                HEALER R.A.BHARAMAN alias AROMANI
                                                                                                    CELL.+91 9442035291; 7092209028



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: