Friday, April 12, 2019

மனம் ஒரு கோவில்

D 174-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்--இம-
          மனம் ஒரு கோவில்!

சாமி உருவச் சிலையைப் பார்த்து “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று வழிபடுகிறீர்கள்; சாமி படத்தைப் பார்த்து “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று வழிபடுகிறீர்கள். ஏதாவது துன்பம் ஏற்பட்டுவிட்டால் “எனது குடும்பத்தை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாத்து” என்று தனிமையில் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ வழிபடுகிறீர்கள்.

இப்பொழுது, வழிபடுபவரின் மனதினை நான் எடுத்து விடுகிறேன். என்ன நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்! அவரால் வழிபாடு செய்வது மட்டுமல்லாது, எந்த செயல்பாட்டிலும் ஈடுபட முடியாது! இருந்த இடத்திலேயே ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்!. மனதில்தான், கடவுளிடம் வேண்டிக்கொள் என்ற எண்ணம் தோன்றி “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று மனதிலேயே உரக்கவோ அல்லது மனதிற்குள்ளோ வேண்டிக்கொள்கிறீர்கள். ஆகவே மனம்தான் மனிதனுக்கு எல்லாமாகவும் விளங்குகிறது. எனவே மனமே ஒரு கோவில்! 

                ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி) 
                  twinmedicine@gmail.com
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: