Friday, April 12, 2019

உண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்

D 189-TM-இமஆ-உ
உண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்

மருத்துவ மனப்பயிற்சியின் போது நடக்கும் நிகழ்வு. 
மருத்துவ மனபயிற்சியுன்போது (Medicinal Meditation), உடல் அறிவியற்பகுதியாகவும், மனம் ஆன்மீகப்பகுதியாகவும் பிரிந்து, இணைந்து பணியாற்றி உங்களுக்குப் பலன் கிடைக்கச் செய்கிறது.

சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம்;
ஆயுத சிறப்புப் படைப் போலீசு (Armed Reserved Police) என்ன செய்கிறது? அடக்க முடியாத கலகம், ஏதாவது ஒரு ஊரில், ஏற்பட்டுவிட்டால், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அந்த படை அந்த ஊருக்குச் சென்று கலகத்தை அடக்கிவிட்டு தானிருக்குமிடத்திற்குத் திரும்பும். அதேபோலதான், நமது உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) இருக்கிறது. உங்கள் கவனத்தை, செய்யும் செயலில் அல்லது வேலையில் செலுத்தும்போது, மனதின் உத்தரவின் பேரில் (மனம் கவனிப்பதுதான் உத்தரவு) உடலானது, சிஒர-ஐ செயல்/வேலை செய்யும் உறுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறது. அந்த ரத்தம் தான் கொண்டு வந்த ஆற்றலை, வேலை செய்யும் உறுப்புக்களுக்குக் கொடுத்து அந்த உறுப்புகளின் தேய்மானத்தைத் தடுக்கவும், வேலை செய்வதால் ஏற்படும் சிரம உணர்வை குறைக்கவும் செய்கிறது.

 அறிவியற்பகுதி:
மருத்துவ மனபயிற்சியை ஆரம்பித்தவுடன், மனதின் உத்தரவைப் பெற்ற உடலானது, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்ததை (சிஒர) மார்பிற்கு அனுப்புகிறது.சி.ஒ/ர ஆனது, தான் கொண்டுவந்த ஆற்றலை அந்தப் பகுதிக்குக் கொடுத்து, மன அழுத்தத்தையும், மனகவலையையும் சிறிது சிறிதாக வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவைகள் இரண்டும் வெளியேற வெளியேற மார்பின் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும்.

ஆன்மீக பகுதி:
நீங்கள், மார்பு சுருங்கி விரிவதையும், பிடிப்பு உணர்வையும் கவனித்தவுடன். மனமானது பிடிப்பு அல்லது இறுக்க உணர்வை எடுத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பயணிக்கிறது. பயண வழியெங்கும் மன அழுத்ததையும், மனக்கவலையையும் வெளியேற்றிக் கொண்டே செல்லும்; அதன்மூலம் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும். ஆழ்மனதை சென்றடையும் போது, மனதில் இறுக்கமும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது; மனதில் கணம் இருக்காது; மனம் இலேசாக இருக்கும். இந்த இடத்தில்தான், மேல் மனம் ஆழ்மனதோடு இணைகிறது. இங்குதான் ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது. அப்படி இணையும்போது மேல் மனமானது நித்திய இறைவனின் ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வாழ்க்கையை வளப்படுத்த வருகிறது. இதன் உண்மைத் தன்மையை,  நீங்கள் மருத்துவ மனப்பயிற்சியை தவறாது செய்து அறிந்து கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட மருத்துவ மனப்பயிற்சி, மன அழுத்தம், மனகவலை, சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி இல்லாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இணைய தளத்தின் வேகம் (Speed of the internet) ஆரம்பத்தில் 2G யில் இருந்தது. இப்பொழுது வளர்ந்து இந்தியாவில் 4G என்ற அளவில் வேகம் வந்து நிற்கிறது. சீனாவில் ஒரு நகரம் முழுவதும் 5G வேக வசதி பெற்று விழா கொண்டாடியிருக்கிறார்கள். இதேபோலத்தான், வழிபாட்டு முறையிலும் உயர்ந்த நிலை இருக்கிறது. மேலே சொன்ன வழிபாட்டு முறையில் காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள் இறைவனை நோக்கி (மார்பை நோக்கி) வழிபாடு செய்யச் சொன்னேன். இதில் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள்தான் வழிபாடு செய்கிறோம். ஆகவே ஆன்மீக ஆற்றலும் 40 நிமிடத்திற்குறிய ஆன்மீக ஆற்றல்தான் கிடைக்கும். அடுத்த கட்டமாக, ஒரு நாள் முழுவதையும் வழிபாடாக மாற்றும் உயர்ந்த ஆன்மீக முறையும் இருக்கிறது.

                   ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி).


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: