Wednesday, April 17, 2019

மூக்கை வளைக்காதீர்


இம--மூக்குச் சிந்தும்போது மூக்கை வளைக்காதீர்கள்!

12-12-2000-ஆம் ஆண்டு எல்லாம் வல்ல இறைவன், எனக்கு மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை (மமம) வெளிப்படுத்தினான். எனது நோய்கள் முழுவதும் குணமாகாத நிலையில்,   2007 ஆம் ஆண்டு சூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து வளைந்த மூக்கு சரி செய்யப்பட்டது. அதனால், மூக்குச் சிந்தும்போது, மூக்கை வளைத்துச் சிந்தக் கூடாது. மூக்கு வளைந்துவிடும். பிறகு அறுவை சிகிச்சை செய்துதான் நிமிர்த்த முடியும். அதற்குப் பிறகு எனக்கு மேற்கூறிய தொந்தரவுகள் வெகுவேகமாகக் குறைந்தது. நோய்கள் வருவதைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. ஆகவே உணவில் கழிவில்லாமல் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தேன். நோய்கள் வெளிப்பட்டாலும், மமம செய்து அவற்றைக் குணப்படுத்திவிடுவேன்.

ஆனால் குளிர்காலத்தில் மட்டும், தும்மல், மூக்கடைப்பும், மூக்கில் நீராக ஒழுகுதல், இளப்பும் (Wheezing) இருந்து கொண்டே இருந்தது. அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். மனவளம் அதிகரித்து, அறியாமை குறைந்து, ஆன்மீக ஆற்றல் பெருகியதினால், இறைவன் வெளிப்பட்டு, அவன் எனது நோய்களின் பால் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளாக 5-வது, 6-வது விதிகளை முறையே 12-7-2005- மற்றும்  14-11-2005- தேதிகளிலும் வெளிப்படுத்தினான். 5-வது விதி, பசி எடுத்த பிறகு சாப்பிட வலியுறுத்துகிறது. இதைக் கடைப்பிடித்தவுடன் எனக்கிருந்த நோய்களிலிருந்து குணமடைவதில் முன்னேற்றம் கண்டேன்.

 6-வது விதி மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை  உறுதிசெய்ய வலியுறுத்துகிறது. இதைக கடைப்பிடித்தவுடன், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், பசியின்மை, காற்றடித்துக்கொண்டிருந்தாலும் வியர்த்தல், சோம்பல், உடல் சூடாக உணருதல், முதலிய நோய்களிலிருந்து நலம் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டது.

                      ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: