Tuesday, July 23, 2019

அனுமதித்தேன்!;

அனுமதித்தேன்; பல நோய்களிலிருந்து 

விடுவிக்கப்பட்டேன்!.- இம


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா 

மருத்துவமனை.

    
     செல் எண்கள்: 9442035291; 7092209028 

பத்து ஆண்டுகளாக, இரவில் சிறிது அதிகமாகச் சாப்பிட்டாலும், நல்ல தூக்கத்திலிருக்கும்போது ஒரு கால் விரல்களை சுண்டி இழுக்கும்; அது இல்லாவிட்டால், காலையில் வயிற்று வலி இருக்கும், இரண்டுமே பயங்கரமான வலி எடுக்கக் கூடிய நோய்கள். அப்பொழுதெல்லாம் வலிக்குறிய மருத்துவ மனபயிற்சி செய்து அவற்றிலிருந்து தற்காலிகமாக நலம் பெறுவேன்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-வது வாரம் வந்தால், இருமல், சளி வந்து விடும். இருமல் பயங்கர சத்தத்துடனிருக்கும்; சுற்றிலுமுள்ளவர்களின் பேச்சுக்குப் பயந்து, வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில் மாத்திரைகள் சாப்பிட்டு இருமல், சளி இல்லாமல் செய்துவிடுவேன். அப்பொழுது நோய்களைப் பற்றிய புரிதலும் இல்லாமல் இருந்தேன்.

இந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி இருமலுடன் சளி ஆரம்பித்தது. இரு வேளையும் சாப்பிட்டுவிட்டு நடந்ததால், இருமல் அதிக சத்தமில்லாமல் இருந்தது. எனது குடும்பத்தாறும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வற்புறுத்தவில்லை. ஜூலை மாதம் 7-ந்தேதிதான் அவை நின்றன. எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதோடு மேலே குறிப்பிட்ட இரண்டு நோய்களும் காணாமல் போய்விட்டன. கழிவுப் பொருட்களை வெளியில் செல்ல அனுமதித்தால் நோய்களிலிருந்து நலம் பெறலாம் என்பதை கண்டுபிடித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.

நோய்கள் வராமலும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடியுங்கள்.  

              ஹீலர் அரோமணீ..
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.
Email: twinmedicine@gmail.com



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: