Tuesday, September 23, 2014

ஈழப்போர்


http//www.grace1983.blogspot.in
Read in English
http//www.medicineliving.blogspot.in

 ஈழப்போர் கற்றுக்கொடுத்தது என்ன?

இலங்கை, மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!.
1. தமிழர்களுக்கு உதவகூடிய ஒரு பெரிய ஆற்றல் ஒன்று இருக்கிறது! அதை மறந்து விட்டீர்களா! அந்த மாபெரும் ஆற்றல் சுத்தடியாக, ஓட்டு மொத்தமாக தமிழர்களுக்கு இல்லாததால்தான் தமிழன் தோற்றான்; குழந்தைகள், பெண்கள் உட்பட மக்கள் லடசகணக்கில் இறந்து மடிந்தார்கள்! இளைஞர்கள் கடத்தபட்டும் இளம்பெண்கள் கற்பழிக்கபட்டும் கொலை செய்யபட்டார்கள்! அந்த ஆற்றலை கண்டுபிடியுங்கள்! உங்களதாக்கிக்கொள்ளுங்கள்! அப்புறம் பாருங்கள்! உலகம் உங்களடிமை!   

2. ஆன்மீகம் என்றால் என்ன்?
உடற்பயிற்சியாலும் (physical exercise) மனபயிற்சியாலும்(mental exercise) மனித ஆற்றலை பெருக்கிகொள்ளும் அறிவியல் முறைதான் ஆன்மீகமாகும் (spiritual). அவ்வாறு கிடைக்கும் ஆற்றல்தான் ஆன்மீக ஆற்றல் அல்லது இறை ஆற்றல் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலுக்கு இணையான ஆற்றல் வேறெதுவுமில்லை.

2A. ஒரு நாளில் பல செயல்களை/வேலைகளை எழுந்தது முதல் படுக்கபோகும் வரை செய்கிறோம். அவை யாவும் உடற்பயிற்சியாகும். அந்த உடற்பயிற்சியில் இணைந்து செயல்பட வேண்டிய மனபயிற்சி இல்லை.. அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஆன்மீக ஆற்றலும் கிடைக்கவில்லை.

3. ஒரு மதத்தினர் ஒரு நாளைக்கு பல வேளைகள் கடவுளை கூட்டாகவே வழிபாடு செய்கிறார்கள் (மொத்தம் 50 நிமிடங்கள் மனபயிற்சி செய்கிறார்கள்). அவர்கள் அத்தனை வேளைகளிலும் வழிபடும் இடத்திற்கு நடந்தே செல்கிறார்கள் (உடற்பயிற்சி செய்கிறார்கள்). அவர்களின் நாடுகளில் எந்த இடத்தில் தோண்டினாலும் எண்ணைய் பீரிட்டு வந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளையும் வென்று குடியேறி, குடியேறிய நாட்டின் மக்களையும் தன் மதத்திற்கு மாற்றி, ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.  

4. இன்னொரு மதத்தினர் தினசரி காலை மாலை என இரண்டு வேளைகளிலும் அவர்களின் வீடுகளில் இறைவனை வழிபாடு செய்து விட்டு (அரை மணி நேரம் மனபயிற்சி), ஞாயிற்றுகிழமை தோறும் கூட்டாக வழிபாடு செய்கிறார்கள் (1 ½  மணிநேரம் மனபயிற்சி). தனிப்பட்ட வீடுகளுக்கும் சென்று கூட்டு வழிபாடு செய்கிறார்கள். இந்நாடுகளின் ஒரு நாட்டைச் சேர்ந்த அரசி, வழிபாட்டு ஆலயத்திற்கு செல்லாதவர்களை தண்டித்திருக்கிறாரென்றால், அவர்கள் மனபயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இவர்களும் புதியன கண்டுபிடித்து, ஆயுதங்கள் செய்து ,பிறநாடுகளை வென்று, அடிமைபடுத்தி, செல்வங்களை அள்ளிச் சென்றார்கள். இப்பொழுதும் புதியன கண்டுபிடிக்கும் திறமையால், 100 ரூபாய் பொருட்களை ரூபாய் 1000, 10,000 என விற்று செல்வசெழிப்புடன் வாழ்கிறார்கள். தியானம் என்னும் மனப்யிற்சியை செய்யும் நாடுகளும் வளமுடனும் வல்லமையுடனும் வாழ்கிறார்கள். அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைக்குள்ளானால், இந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவதில்லை. ஏன் போர் தொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

5. ஆனால் உனது நிலைமை என்ன? உனது சொந்த நாட்டிலேயே அகதிகளாய், பசியும், பட்டினியுமாய், உன்னுடைய பாரம்பரியத்தை இழந்து அடிமையாய் வாழுகிறாய்! வெளிநாடுகளுக்கு கள்ளதோணியில் பிழைக்க செல்கிறாய். சிலசமயம் தோணிகள் கவிழ்ந்து குடும்பம், குடும்பமாக சாகிறார்கள். செல்லும் நாடுகளில் பிடிபட்டால், பாதாளச் சிறையில் கசையடி, இன்னும் சொல்லமுடியாத சித்திரவதைகள். தாய் தந்தையரை இழந்த குழந்தைகள், கணவன்மார்களை இழந்த பெண்கள்

6. இந்த நிலைமைக்கு காரணம் என்ன! திருநீரை நெற்றியில் பூசிவிட்டால் கடவுள் வழிபாடு உனக்கு முடிந்துவிட்டது! சாமி படத்துக்கு தீபம் காட்டிவிட்டால் கடவுள் அருள் கிடைக்கும் என்று திருப்தியாக செல்கிறாய்! மொட்டை அடித்துவிட்டால் அதுதான் வழிபாடு என்று நினைக்கிறாய்! உனது வழிபாட்டில் சடங்குகள்தான் நிறைந்திருக்கின்றன. உனது வழிபாட்டில் மனபயிற்சி என்ற ஒன்றுக்கு இடமே இல்லை! இதன் விளைவு சொல்லானாத துயரம்! தோல்வி! விடிவு தெரியாமல் நீளும் இரவு!

7. உங்களுடைய வேதனையை போக்குவதற்காகவே இறைவன், என்னுள் உள்ளவன், எனக்கு மனபயிற்சியின் மகத்துவத்தை போதித்தான். மனபயிற்சியின் மூலம் நோய்களை குணபடுத்த முடியும் என்பதை எனக்குள்ள நோய்களையெல்லாம் குணப்படுத்தி அறியவைத்தான். நோய்களை குணப்படுத்திய இரட்டை மருத்துவ (Twin Medicine-TM) படியில் எட்டு வைக்க வைத்து, மேல்படியான  ‘கவனவாழ்க்கை’(Attentive Life-AL) என்னும் ஆன்மீகத்தின் உயர்நிலக்கு என்னை கொண்டு சென்றான். இதுதான் ஆன்மீகத்தின் உயர்ந்த படி (100% முழுமையான ஆன்மீகம்) என்பதை உணரவைத்து தெளியவைத்தான். அதாவது விழித்து எழுந்தது முதல் படுக்கப் போகும் வரை உடற்பயிற்சியோடு இணைந்து செயல்படும் மனப்பயிற்சியில் இருக்கும் ஒரு வாழ்க்கை முறைதான் கவனவாழ்க்கையாகும். இதனால் உங்களுக்கு எப்படி விடிவு காலம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.

8. கண்டக்டர் ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறி ஒரு மிகபெரிய செல்வந்தராகவும், உலகமுழுவதும் கோடிகணக்கான ரசிகர்களையும் , பெற்றது எவ்வாறு? அவர் ஒரு நாளைக்கு 60 நிமிடம் மனபயிற்சி, 20 நிமிடம் யோகாசனம் செய்து இறை ஆற்றலைப் பெற்றார். ஒரு 50 நிமிட கூட்டு மனப்யிற்சிக்கே எண்ணைய் வளம் கிடைக்கிறதென்றால், 1000 நிமிடங்கள் (விழித்திருக்கும் நேரம் 16 ½*60 =1000 நிமிடங்கள்) மனப்பயிற்சிக்கு (கவனவாழ்க்கைக்கு) எவ்வளவு பலன் கிடைக்கும் என்று நீங்களே கணக்குபோட்டு பாருங்கள்!

9. பராக் ஒபாமா அமெரிக்க தாய்க்கும் ஆப்ரிக்க நாட்டின் தந்தைக்கும் பிறந்தவர். ஒரு கருப்பர் இனத்தை சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வந்திருக்கிறார். கவனவாழ்க்கையை பின்பற்றும் இலங்கை தமிழர் ஏன் அமெரிக்க அதிபராக  ஆகக் கூடாது. ஏனென்றால் 100% ஆன்மீக ஆற்றலை பெற்றவர்தான் கவனவாழ்க்கை வாழுபவர். இதேபோல புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் செல்வாக்கு பெற்று அந்நாடுகளின் மக்கள் சபை பிரதிநிதிகளாக ஆக முடியும். புதியன கண்டுபிடித்து புது புது பொருட்களை உலகச்சந்தையில் காசாக்கி, செல்வந்தர்களாக வலம் வரலாம். இவ்வளவு ஆற்றல் பெற்ற உங்களை பிறகு எவராலும் அடிமையில் வைத்திருக்க முடியுமா?

10. இதைவிட மேலான ஒன்றையும் உங்களுக்கு நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவர் உதாரணமாக ஒரு நாட்டின் அதிபர் உங்களோடு பேசுவாரா? அவருக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியுமா? ஆனால் அந்த அதிபரைக் காட்டிலும் அளவில்லாத ஆற்றலைக் கொண்ட உங்களைப் படைத்த இறைவன் கவனவாழ்க்கை வாழும் உங்களோடு பேசுவான்! நீங்கள் அவனோடு பேசலாம்! இதுதான் கவனவாழ்க்கையின் சிறப்பு!

11. மிகவும் துயரமான நிலையில், பிறந்த மண்ணைவிட்டு புலம் பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறியிருக்கிறீர்கள். அப்படிபட்ட சூழ்நிலையில் உங்களை தாக்கியுள்ள மனவழுத்தம், மனகுழப்பம், மனகவலை எத்தகைய ஆழமுடையது என்பதை சொல்லவேண்டியதில்லை! உங்களுக்கேற்பட்டுள்ள மனக்காயத்தினால், உங்களது ஆக்க நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கபட்டிருக்கும்தமிழர்களே! தயங்காமல் வாருங்கள்! தினந்தோறும் மூன்று வேளை ( மொத்தம் 45 நிமிடம்) கூட்டு மனபயிற்சிக்கு தயாராகுங்கள்உங்களிடமுள்ள மனவழுத்தத்தை வெளியேற்றுவதற்குரிய மருத்துவ மனபயிற்சி சொல்லிதரப்படும். அதன்மூலம், முழு மனநலம் பெறுவீர்கள்; தெளிவான மனத்தில், தெளிந்த சிந்தனை பிறக்கும்; ஆக்க நடவடிக்கைக்குறிய வேகம் பிறக்கும். பிறகு தற்பொழுதுள்ள கற்பனை வாழ்க்கையிலிருந்து கவனவாழ்க்கைக்கு மாறுங்கள்! அதற்குபிறகு (இழந்த) உயிர்களை தவிர இழந்த அனைத்தையும் பெறுவீர்கள்

12. கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராயிருக்கிறேன். ஒருவர் கவனவாழ்க்கைக்கு மாறினால், 100 பேர்களுக்கு அதாவது, அவரைசுற்றியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பலன் கிடைக்கும்.


Healer, Medicinal Meditation Expert & 
Er.R.A.Bharaman (Aromani), 
Superintending Engineer (Rtd.)/Tamil Nadu Electricity Board,
Cell;9442035291

Please visit website: www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com

Copyright - R.A.Bharaman alias Aromani   


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: