Wednesday, July 13, 2016

பிராமணர்கள் முன்னேற்றத்தின் பின்னணி

             B 215-MM 1-மருத்துவ மனபயிற்சி-இம-   முழு கட்டுரை)     
பிராமணர்கள், முதலியார், சைவப் பிள்ளை, நாடார், நகரத்தார், கவுண்டர், நாயுடு இனங்களின் முன்னேற்றத்தின் பின்னணி!

   1. ஆன்மீக  வாழ்க்கை
      
12.    பிராமணர்கள்இன்று மக்கள் ஆன்மீகத்தைப் பற்றி¢ பல்வேறு வேறுபட்டக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்கள் கற்கால மனிதர்களிடமிருந்து தொண்டு தொட்டு வந்து கொண்டே இருக்கின்றன. கதைகளை உருவாக்கி, அந்த கதைகளின் நாயகர்களை கடவுள்களாக வழிபட்டார்கள். அந்த வழிபாட்டு முறை இன்றளவும் தொடர்கிறது. பல மகான்கள் தோன்றினார்கள். அவர்களின் போதனைகளின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் தோன்றலாயின. இந்த மகான்களின் தோன்றிய இடம், அங்குள்ள மக்களின் மொழி, வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் முதலியனவும் அந்த மதங்களோடு பரவின. இதனால் மதப்பூசல்களும், உயிர் மற்றும் உடமை இழப்புகளும் ஏராளமாக இன்றளவும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. மகான்களின் போதனைகளும், அவர்கள் தோற்றுவித்த மதங்களின் உச்சக் கருத்தும், மையக் கருத்தும் ஒன்றே ஒன்றுதான். அதுதான்எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்யாதிருப்பதுவும், அதனால் விளையும் மனிதனின் இறுதிக் குறிக்கோளான தெய்வீக மகிழ்ச்சியுமாகும். ஆன்மீகத்தின் இறுதிக் குறிக்கோள் உள்ளத்தில் நிரந்தர மகிழ்ச்சியை நிலைநிறுத்துவதாகும். எண்ணம் மனதில் தோன்றுவது; தோன்றிய எண்ணம் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது. ஆகவே ஆன்மீகம் மனதின்பால் செயல்படுகிறது. எனவேதான்மனமே ஒரு கோயில்என்ற பழமொழி மக்களிடையே புழக்கத்தில் வந்திருக்கிறது.

2.   எண்ணத்தாலும்,, சொல்லாலும், செயலாலும் பிறருக்கு கெடுதல் செய்து மகிழ்ச்சி கிடைப்பதுவும் உண்டு. அந்த மகிழ்ச்சி நிலையானது அல்ல; அது, அழிவைக் கொண்டுவரும் மகிழ்ச்சி.  ஆன்மீக மகிழ்ச்சி ஆகாது.

3.   ஆன்மீகம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையில் முக்கியமான இரட்டை எதிர்பதம் உழைப்பு*ஓய்வு என்பதாகும். உழைப்பு இல்லையேல் உணவு இல்லை. உணவு இல்லையேல் உயிரில்லை. உயிரில்லையேல் உடலில்லை; உடலிலையேல் ஆத்மா இல்லை; பரமாத்மாவும் இல்லை. ஆகவே பூமியில், மனித வாழ்க்கையின் ஆதாரம் உழைப்புதான். உழைப்பு என்பது உடலுழைப்பு, மற்றும் மனவுழைப்பு (மூளைவுழைப்பு) ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். மேற்குறிப்பிட்ட இரண்டின் மூலம் நாம் பெறுவது முறையே உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சியாகும். இந்த இரண்டையும் சேர்த்து, இணைந்து செய்யும் பொழுது கிடைப்பது மனவளமாகும். அவ்வளத்தின்  மூலம் மனிதனுக்குக் கிடைப்பது உண்மையான வளர்ச்சியாகும். மனிதர்களிடமும், உயிரினங்களிடமும் இறைவன் எதிர்பார்ப்பது இந்த வளர்ச்சியைதான்.

4.   மிருகங்களின் வாழ்க்கையை உற்றுநோக்குங்கள்! காலையில் எழுந்ததும் இரைதேடச் (உழைப்பு-உடற்பயிற்சி) செல்கின்றன. புலி, சிங்கம், ஓநாய் முதலிய மிருகங்கள் மான், முயல், வரிக்குதிரை முதலிய மிருகங்களை வேட்டையாடிச்  சாப்பிடுகினறன. அப்படிச் சாப்பிடும்போது, எந்த இடத்தில், எப்படிப் பதுங்கி, எந்தக் கோணத்தில் பாய்ந்தால் இரை விழும் என்று எண்ணி (மனப்பயிற்சி) பாய்ந்து இரையைக் கவ்வுகிறது. இதேபோல புல், பூண்டு, இலைதழைகளைச் சாப்பிடும் யானை, மான், ஒட்டகச் சிவிங்கி முதலிய மிருகங்கள், வளமான, வளமில்லாத, சுவையுள்ளது, சுவையில்லாதது எது எனறு தேடியலைந்து (உடற்பயிற்சி),  அறிந்து (மனப்பயிற்சி) இரையை தேடிக் கொள்கின்றன. இதற்கிடையில் காம உணர்வால் உந்தப்பட்டு, தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்கின்றன. இதோடு மிருகஙகளின் கதை முடிந்து விடுகிறது. மனிதனின் கதையும் வேறுபாடுடையதில்லை. ஆதிகால மனிதன் தனது கரடு முரடான ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு, மிருகங்களைத் துரத்திக் கொண்டு சென்று (உடற்பயிற்சி) வேட்டையாடி மிருகங்களைக் கொன்று உணவைத் தேடிக் கொண்டான். எந்தக் கோணத்தில், ஆயுதங்களைப் பிரயோகித்தால், இரை விழும் என்று முடிவெடுத்து (மனப்பயிற்சி) செயல்பட்டு மிருகங்களை வீழ்த்தினான். பிறகு காம உணர்வினால் உந்தப்பட்டு, தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, தனது வாரிசுகளை உருவாக்கிய பிறகு , இவ்வுலகிலிருந்து மறைந்து விடுகிறான். இத்துடன் மனிதனின் கதையும் முடிந்து விடுகிறது.

5.   நவீன கால மனிதனின் கதையும் வேறுபாடு இல்லாத கதைதான். அவன் இரைக்காக மிருகங்களின் பின்னால் ஓடினான். இவன் இரைக்காக, பஸ், இரயில், கப்பல், விமானம் போன்றவற்றில் ஓடுகிறான் (உடற்பயிற்சி). அவன் எந்தக் கோணத்தில், ஆயுதங்களைப் பிரயோகித்தால் இரை விழும் என்று எண்ணி (மனப்பயிற்சி) செயல்பட்டான். இவன் எந்தக் கல்வியைப் பயின்றால் இரை கிடைக்கும் என்று சிந்தித்து, அதைப் பயின்று (மனப்பயிற்சி) வேலையில் சேருகிறான். இவர்களும் பாலியல் உணர்வால் உந்தப்பட்டு, தாம்பத்ய உறவில் ஈடுபட்டு, தஙகளது குழந்தைகளை வாரிசுகளாக விட்டுச் செல்கிறார்கள்

6.   ஆகவே மனப்பயிற்சியும், உடற்பயிற்சியும் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகும். மனிதனாகப் பிறந்த எவராலும் எண்ணாமல் (மனப்பயிற்சி), உழைக்காமல் (உடற்பயிற்சி) வாழமுடியாது. அதனை நாம் நலமுடன் வளர்த்தோமானால், நமக்குக் கிடைப்பது செரிவடைந்த அல்லது நிறைவடைந்த மனவளமாகும். இதனால் நமக்குக் கிடைப்பது நிறைவான வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கை மனிதனின் இறுதிக்குறிக்கோளான மகிழ்ச்சியைக் கிடைக்கச் செய்கிறது. இறைவனின் குறிக்கோளும் மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

7.   மனப்பயிற்சியாலும், உடற்பயிற்சியாலும் ஆற்றலைப்பலமடங்கு பெருக்குவதற்குரிய அறிவியல்  முறைதான் (Spiritual process) ஆன்மீகமாகும். அப்படிக் கிடைக்கும் ஆற்றல்தான் ஆன்மீக ஆற்றலாகும் (Spiritual Power). இந்த ஆற்றலானது, நமது மனவாற்றல், உடலாற்றல் மற்றும் இப்பிரபஞ்ச ஆற்றல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும். இப்பேரண்டத்தின் உயிரினங்களின் ஆற்றலையும், இப்பிரபஞ்ச விரிவாக்க ஆற்றலையும், எண்ணிலடங்காத இயற்கைச் சட்டங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு ஆக்க அறிவைத்தான் நாம் இறைவன் என்று சொல்லுகிறோம்.

8.   இந்த ஆற்றலைப் பெறுவதற்குரிய முயற்சிகளின் பலன்தான் மதங்களின் தோற்றமாகும். இத்தோற்றம், தோற்றுவித்த மகான்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா! மதச் சடங்குகள் அதிகரிக்கப்பட்டு, மனப்பயிற்சியின் நேரம் குறைந்து, அதனுடைய முக்கியத்துவம் மறைக்கப்பட்டுவிட்டது. இதனால் மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் , ஒன்றோடொன்று இணைந்து செயல்படாமல், ,விலகி, வெகுதூரம் சென்றுவிட்டன. இதன் காரணமாக மனிதன் கோபம், பொறாமை, துரோகம், நம்பிக்கை மோசம், பணத்தாசை, மண்ணாசை, பெண்ணாசை இப்படி பல எதிர்மறைக் குணங்களையும் மற்றும் நோய் நொடிகளையும், விபத்துக்களையும், ஒருவரை ஒருவர் வீழ்த்துவது அல்லது அழிப்பது என்று உலகையே துன்பமயமாக்கி விட்டான். இதற்கெல்லாம் மூலகாரணம் மக்களின் ஆன்மீகத்தைப் பற்றிய அறியாமைதான்.

9.   நமது மூதாதையர்கள் அறிவாளிகள். மலைமீது ஏறிச் சென்று (உடற்பயிற்சி), அங்குள்ள உருவச் சிலையை வழிபாடு செய்ய (மனப்பயிற்சி) மலைமீது கோயிலைக் கட்டி வைத்தார்கள். உடற்பயிற்சி செய்தவர்கள் (ஏறிச் சென்றவர்கள்) கோயிலுக்குச் சென்றவுடன், மனப்பயிற்சி செய்யாமல் (இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடுவது, பிரார்த்தனை செய்வது, ஆழ்நிலை மனப்பயிற்சி போன்ற) எதுவும் செய்யாமல், வெறும் திருநீரை மட்டும் பூசிக்கொண்டு இறைவன்  அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகிறார்கள்.

10.    உடற்பயிற்சி மட்டும் தவறாது செய்து புகழ் ஏணிக்குச் சென்ற எம்.ஜி.ஆர் ஐப் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் அவர் மனப்பயிற்சி செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே அவர்50% தான் ஆன்மீக ஆற்றலைப் பெற்றார். இதனால், தன்னுடைய புகழை, சினிமா உருவத்தை (image) தக்க வைக்கப் பெரும் கவனம் எடுத்துக் கொண்டார். அவர் நடித்தப் படங்களில், அவர் மதுகுடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுதெல்லாம், கருப்புக் கண்ணாடி அணிந்து, தலையில் குல்லாய் போட்டிருப்பார். ஆரம்பக் கட்டத்தில் அவர் திராவிட முன்னேற்றக் கட்சியால் (திமுகவளர்ந்தார். பிற்பகுதியில் இவரால் திமுக வளர்ந்தது

11.    ஆனால் மேற்சொன்னதற்கு நேர்மாறாகசூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்தத் திரைப் படங்களில், அவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் உள்ள காட்சிகள் நிரம்பவே இடம் பிடித்தன. அவர் தன்னுடைய புகழை, சினிமா உருவத்தை (image) காப்பாற்றிக் கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்பொழுது மேக்கப் இல்லாமலே காட்சியளிப்பார். சிறிது வழுக்கைத் தலையுடன் முடியலங்காரம் எதுவுமில்லாமல், உடையில் கவனம் செலுத்தாமல், வாயில் சிகரெட்டுடன் சாமான்ய மனிதன் எப்படி இருப்பானோ அப்படியே காட்சியளிப்பார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியின் போது, தான் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அதை நிறுத்தி விட்டதாகவும், சிகரட் பிடிப்பதையும் விரைவில் விட்டுவிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். அவர், இவ்வாறு வெளிப்படையாக, உண்மையை துணிச்சலாகப் பேசியதால் அவரது புகழ் மங்கிவிட்டதா! இல்லையே! புகழ் கூடிக்கொண்டுதானிருக்கிறது. புகழ் பெறுவதற்கு இவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை!. இதற்குக்காரணம் என்ன? அவர் யோகாசனம் (உடற்பயிற்சி), தியானம் (மனப்பயிற்சி) ஆகிய இரண்டையும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவறாது செய்து வருகிறார். இதன்மூலம் 100% ஆன்மீக ஆற்றலை சூப்பர் ஸ்டார் பெற்று வருகிறார

இந்து மதக் கோட்பாடின்படி, பிராமணர்கள், ஆன்மீக வாழ்க்கை வாழவேண்டும் என்றும், வேதங்களைப் படித்து, அதனைப் பரப்பவும் கோயில்களிலும், வீடுகளிலும் குருக்களாக பணி செய்வதுமாகும். இருந்தாலும், மற்ற தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சோழர் காலத்தில்  சங்கீத வித்வான்களாகவும், வணிகர்களாகவும், போரிடாதப்  பிரிவில் நிர்வாகிகளாகவும், போரிடாத படைப்பிரிவில் உள்ள பணிகளிலும், பிறகு படையில் சேவகர்களாகவும், தளபதிகளாகவும் பணியாற்றியிருக்கிறார்கள் அவர்களுடைய இந்த பணிகள் அவர்களுடைய மனவளத்தைப் பெருக்கியிருக்கிறது. இந்த மனவளம் அவர்களுடைய சந்ததியனருக்கும் மாற்றப்பட்டிருக்கிறது.

13.  அவர்கள், கோயில்களில் இறைவனைப் பற்றிய மந்திரங்களைச் சொல்லி மனப்பயிற்சி செய்கிறார்கள். இதைத் தவிர வீடுகளில்  ‘சந்தியா வந்தனம்என்கின்ற வழிபாட்டினைமூன்று வேளைகளிலும் சொல்லி மனப்பயிற்சி செய்கிறார்கள். பாசி மாலையை வைத்து 108 தடவை மந்திரங்களை ஓதுகிறார்கள். திருமணங்களில், மரணவீடுகளில், இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் போது, இவ்வாறு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மனப்பயிற்சியோடு இணைந்திருக்கிறார்கள். சூரிய நமஸ்காரம், துளசி செடியைச் சுற்றி வந்து இறைபாடல் பாடுவது, சுப்ரபாதப் பாடல், சகஸ்ரநாம மந்திரம்  மற்றும் காயத்திரி மந்திரம் போன்ற மந்திரங்கள் மிகவும் பிரசித்து பெற்றவை. இவ்வாறு அவர்கள் மனப்பயிற்சி செய்து, செய்து மனவளத்தை அதிகரித்துக் கொண்டார்கள். இதனால் அந்த சமூகத்தில் சிறந்த சங்கீத வித்வான்களும், கல்வியாளர்களும், நிர்வாகிகளும், மருத்துவர்களும், பொறியாளர்களும், வழக்கறிங்கர்களும், நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல் வாதிகளும், ஆராய்ச்சியாளர்களும், மதபோதகர்களும் தோன்றினா


ஆன்மீகம்!
1.   
14.  ஐ.நா.மன்றத்தில் உயர் பதவி வகித்த ஒரு தமிழர் இச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.  தமிழ் மொழியின் பல ஓலைச் சுவடிகள் கரையானுக்கு இரையாகாமல் இன்று நமது கைகளில் புத்தகங்களாகத் தவழ்கின்றன என்றால் அதற்கு மூலக் காரணக் கர்த்தா, நல் தமிழுலகம் உள்ளவரை, மறக்க முடியாத, எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்படும்  ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்தான். ‘பாட்டுக்கு ஒரு புலவன்’ பாரதியார் அவர்கள் தனது 14 வது வயதிலேயே தமிழில் பாடல்களைப் பாடத்தொடங்கினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், மெட்ராஸ் மாகானத்தின் முதல் முதலமைச்சராகவும் பணியாற்றி, தமிழகத்திற்கு புகழ் சேர்த்தவர் சி.வி.இராஜகோபாலாச்சாரியார் பிராமண இனத்தைச் சேர்ந்தவர்தான். ‘நோபல் பரிசு’ பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன் அவர்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவர்தான். பிரபலமானவர்களை பட்டியலிட்டு காட்டுவது இக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆகவே பிராமணர்கள் செய்யும் மனப்பயிற்சிதான், அவர்களை  முன்னேற்றத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

15.    முதலியார்
சோழர் காலத்தில், ஆட்சியின் நிர்வாகத்தில், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்களைக் குறிப்பிடும் விதமாக முதல் மனிதர் என்பது மருகி முதலியார் என்று அழைக்கப்பட்டனர். தொண்டைமண்டல (Thondaimandala Saiva Vellalar) வெள்ளாளர், கொண்டைக்காடி வெள்ளாளர் (Thondaimandala Kondaikkati Vellalar) போன்றோர் முதலியார் இனத்தைச் சேர்ந்தவர்கள். சைவ வெள்ளாள முதலியார்கள்  சேர்ந்தவர்களும் சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு மந்திரிகளாகவும், தளபதிகளாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில், கிளார்க்குகளாகவும், தங்க வேலை செய்பவர்களாகவும் (goldsmiths,), பிறகு நிலப்பிரபுக்களாகவும் ('Landlords'.) மாறியிருக்கிறார்கள். இவர்களின் முன்னோர்களும், தாங்கள் செய்த பணிகளால் மனப்பயிறசி பெற்று,  மனவளத்தை இயற்கையிலேயே பெற்று, வாழ்க்கையில் வளம் பெற்றவர்களாயிருந்திருக்கிறார்கள். இவர்களும் மனப்பயிற்சி பெறக்கூடிய உயர்பதவிகளில்  இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெற்ற மனவளம், இவர்களுடைய சந்ததியருக்கும் மாற்றப்பட்டு வந்திருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் பி.டி.ராஜன், ஓ.வி.அழகேசன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன் மற்றும் பலர் இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள்.


16.  சைவப் பிள்ளைமார்
தமிழகத்தில் முன்னேறிய இனங்களில் ஒன்றாகும். இவர்கள் தமிழகத்தின் நிலப்பிரபுக்களாக இருந்தனர்; இருக்கின்றனர். அவர்கள் பாண்டிய மன்னர்களிடமும், பிற்காலத்தில் போலிகர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர்களிடம், மந்திரி, தளபதி போன்ற  எல்லாவிதமான முக்கிய பதவிகளிலும் இருந்திருக்கின்றனர்., இதைத்தவிர, ஊரக நிர்வாகங்களில்,கணக்குப் பிள்ளை, கிராம நீதிபதி, நாட்டாண்மை போன்ற  பதவிகளை அலங்கரித்தனர். அவர்கள் வகித்த பதவிகள் அனைத்தும் அவர்களுக்கு சிறந்த மனப்பயிற்சியை அளித்தன. முடிவெடுக்கும் திறனை அதிகப்படுத்தியது. சுருங்கக் கூறினால் அவர்கள் சிறந்த மனவளத்தைப் பெற்றார்கள். இதனால், தமிழ் சமுதாயத்தில் சீரான முன்னேற்றமும் அந்தஸ்தும் அவர்களால் பெறமுடிந்தது. இராமலிங்க சுவாமிகள், அருணாசலக் கவிராயர், நம்மாழ்வார் சரித்திரப் புகழ்வாய்ந்தவர்கள். இவ்வினத்தில் தோன்றிய 5 சைவ சித்தாந்த நாயன்மார்களில் அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர் புகழ்பெற்றவராவார். வி.ஓ.சிதம்பரம் பிள்ளை பெயர் பெற்ற செக்கிழுத்த, கப்பலோட்டிய, சுதந்திர போராட்ட வீரர். ஜீவா, சுதந்திரப் போராட்ட,  கம்யுனிஸ்ட்  தலைவர் .பத்திரிகைகளில் சமீப காலமாக அடிபடும் பெயர் நவனீதம் பிள்ளை. இவர் தென் ஆப்பிரிக்கா நீதிபதியாக இருந்தவர். ஐ.நா.மன்றத்தின் மனித உரிமை கமிசனின் தலைவராகவும் இருந்தவர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். மறைமலையடிகளார், புதிமைப்பித்தன், ஜெயகாந்தன் இப்படி இன்னும் பல எழுத்தாளர்கள் வரிசை நீண்டு கொண்டே போகும். வணிகம், அரசியல், விளையாட்டு, இசை ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தாங்கள் சார்ந்த தொழில்களின் மூலம் மனவளம் பெற்றவர்கள்

17.  நாடார்
நாடார் சமூகத்தினர் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்ற்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அரசுத் துறைகளிலும் பல்வேறு உயர்பதவிகளிலும், வணிகத்திலும், தொழில் முனைகளிலும் முன்னணி வகிக்கின்றனர். நாடார் உறவின் முறை என்ற பெயரில் நிதி நிலையைப் பெருக்கி, பல கல்வி நிறுவனங்களை நிறுவி, தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் கல்விப் பணியாற்றி வருகின்றனர். கல்வி கற்றோர் அதிகமில்லாத காலத்தில், சாமானியனும் தமிழ் கற்றுக் கொள்ள  ‘தந்தி’ என்னும் தமிழ் நாளிதழ்தான் காரணம். அதை நிறுவிய பெருமை இச் சமூகத்தில் உதித்த பெருமகனார் சி.பா.ஆதித்தனாரைச் சாரும். சாமான்யனும் கல்வி கற்று, அரசுப் பணியில் சேரலாம் என்ற கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் இச் சமூகத்தில் தோன்றியவர்தான்.

அவர்களின் முன்னேற்றத்திற்கும்மனப்பயிற்சிதான் காரணமாகும். அவர்களுக்கு அந்த மனப்பயிற்சி அவர்கள் செய்யும் தொழிலிருந்து கிடைக்கிறது. அவர்கள் செய்யும் வணிகத்தில் குறிப்பாக பலசரக்கு கடையில், இந்தப் புகழுக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் செய்த தொழிலிருந்து கிடைத்த மனப்பயிற்சிதான் காரணம் என்றால் மிகையாகாது. நூற்றுக்கணக்கான பொருட்களின் வரவு, செலவு, இருப்பு, மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பலப் பொருட்களை எழுதி, கணக்குப் பண்ணி விநியோகம் செய்வதிலேயே அவர்களுக்கு நல்ல மனப்பயிற்சி கிடைக்கிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் சிறந்த வணிக அறிவுடனும், மனவளத்துடனும் பிறக்கிறார்கள். ஆகவே நாடார் சமூகத்தினர், அவர்கள் செய்யும் வணிகத் தொழிலிருந்து மனப்பயிற்சியைப் பெற்று மனவளத்தைப் பெருக்கி முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள்

19.  நகரத்தார

நகரத்தார் என்று சொல்லக்கூடிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் தாங்கள் செய்யும் தொழில்களால் மனப்பயிற்சி பெற்று மனவளத்தைப் பெருக்கிக்கொண்டதுடன் செல்வத்தையும் பெருக்கிக்கொண்டார்கள். தொழில்நிறுவனங்களையும், கல்விநிறுவனங்களையும் பெருக்கி வளம் பெற்றவர்கள்

20.  கொங்குநாட்டு வெள்ளாள கவுண்டர்

கொங்குநாட்டு வெள்ளாள கவுண்டர்கள் எளிமையாகவும், பணிவும், நேர்மையும் கொண்ட நடத்தையும், உயர் பண்பும் கொண்ட விவசாயிகள் என்று கவிராயர் கம்பர் பாடியுள்ளார். அவர்கள் சார்ந்த கொங்கு நாட்டில் வணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனவளம் பெருகியவர்களாய் காணப்படுகிறார்கள். இதனால் இந்தியாவிலும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உயர்பதவிகளில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்

21.  நாயுடு

நாயுடு இனத்தவர் விஜயநகர பேரரசர்காலத்தில் மாவட்ட கனர்னர்களாகவும், ஜமீந்தார்களாகவும், நிலப்பிரபுக்களாகவும் தொழிலதிபர்களாகவும் இருந்து நிர்வாகத்திறமையால் மனவளம் பெற்றவர்கள்.  சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், கோவையை தொழில்மயமாக்கியதற்கு அவர்களிடமிருந்த  மனவளம்தான் காரணமாக நான் கருதுகிறேன். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்

22.  மேலே குறிப்பிட்ட இனங்களைத்தவிர, மற்றவர்கள் அவர்கள் செய்யும் தொழில் உடலுழைப்பு சார்ந்தாக இருப்பதால், மனப்பயிற்சி பெற முடியவில்லை. ஆகவே மனவளம் இல்லாமையால் முன்னேற்றத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

  மேலே குறிப்பிட்ட வளர்ந்த இனத்தவர்களும் மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்ளாமல், திருநீரைப் பூசிவிட்டால் கடவுள் வழிபாடு முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அதனால் அந்த இனங்களிலும் துயர நிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன. ஆணோ அல்லது பெண்ணோ இளவயதில் இறந்து விதைவையாவது; கணவன் மனைவி பிரிந்திருப்பது அகால மரணங்களால், குடும்பங்களை நிலைகுலையச் செய்வது; விபத்துக்களில் உயிரிழப்பால் குழந்தைகள் அனாதையாவது, தீராத நோய்களால் அன்புக்குரியவர்கள் அவஸ்தைக்குள்ளாவது போன்ற மனதை துன்பங்களால் துவள வைக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டுதானிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் இப்பொழுது அவர்கள் பெற்றிருக்கும் மனவளமும் போதாது என்பதுதான்

22.  
24.  சில நாடுகளில் தோண்ட தோண்ட எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் இங்கு மழை இல்லை; வறட்சி வாட்டுகிறது; நிலத்தடி நீர் குறைந்து குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை சிந்திப்பீர்!.                      



ஹீலர், மருத்துவ மனப்பயிற்சி நிபுணர், பொறியாளர் ஆர்.எ.பரமன் (அரோமணி) , cell no. 9442035291 ;twinmedicine@gmail.com
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: