Monday, August 22, 2016

-சும்மா இரு! (!மக)

     C 214-MMP 2 கவனவாழ்க்கை               வேட்டைக்காரன் உலகின் மாபெரும் மாவீரன் ஆனது எப்படி!
 2-ஆன்மீக வாழ்க்கை
மனதால் ஒருவரது வாழ்க்கையை ஆக்கவும் முடியும்!; அழிக்கவும் முடியும்!.
1.   மனப்பயிற்சி (mental exercise) என்பது உடலுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மனதிற்குக் கொடுக்கும் பயிற்சியாகும். மனப்பயிற்சியானது வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதற்கு, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு, வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு, தகுதியான எண்ணங்கள் வெளிப்படுவதற்கு, வெளிப்பட்ட எண்ணங்கள் செயலாக்கம் பெறுவதற்கு உடற்பயிற்சியுடன் சேர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்கிறது. அதாவது மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் மேற்கூறிய வாழ்க்கையை வளமாக்கும் செயல் முறைகள் நடைமுறைக்கு வருகின்றன. மனதிலிருந்து எண்ணங்கள் வெளிவரும்போது, அந்த எண்ணங்களைச் செயல்ப் படுத்துவதற்கு உடல் உடனே தயாராகிவிடுகிறது. இதைத்தான் மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்கிறோம். இதைத்தான் வளர்ச்சியடைந்த மனம் (developed mind)  என்கிறோம். மனதால் ஒருவரது வாழ்க்கையை ஆக்கவும் முடியும்!; அழிக்கவும் முடியும்!.

2.   சாமி சிலைகளால் ஆன்மீகப் பவர் கிடைப்பதில்லை

உடற்பயிற்சியையும், மனப்பயிற்சியையும் சேர்த்து ஒருங்கிணைப்பதற்குத்தான், நடந்தே சென்று (உடற்பயிற்சி) மலையில் இருக்கும் சாமி சிலையை வழிபடும் (மனப்பயிற்சி) அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படி வழிபடும்போது கிடைப்பதுதான் ஆன்மீகப் பவராகும் அல்லது ஆன்மீக ஆற்றலாகும். ஆன்மீக ஆற்றல் நிரம்பக் கிடைக்கப் பெற்றவர்கள் சாதனை படைக்கிறார்கள்; வாழ்க்கையில் வளம் பெறுகிறார்கள். ஆகவே ஆன்மீகப் பவர் கிடைப்பது மலை உச்சியில் உள்ள சாமி சிலையால் அல்ல. பக்தன் மேற்கொள்ளும் நடைப்பயணத்தாலும் (உடற்பயிற்சி), நடைப் பயணத்தின் போது அவன் பாடும் இறை வணக்கப் பாடல்களாலும் (மனப்பயிற்சி), “இறைவா! என் குடும்பத்தைக் காப்பாற்று! எனது மகனுக்கு சீக்கிரம் ஒரு வேலை கிடைக்கனும், என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கனும்!” என்று  வழி நெடுக அவன் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டே வருவதாலும்தான் அந்தப் பக்தனுக்கு சிறிதளவு ஆன்மீகப் பவர் கிடைக்கிறது.  ஆகவே சாமி சிலைகளால் ஆன்மீகப் பவர் கிடைப்பதில்லை என்பதை பகதர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

3.   கணவனும் மனைவியும் இணைந்து செயல்படும்போதுதான் அந்த குடும்பத்தில் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். ஒரு பஸ்ஸின் டிரைவரும், கண்டக்டரும் இணைந்து செயல்படும்போதுதான், பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஒரு தொழிற்சாலையில் முதலாளியும், தொழிலாளர்களும் இணைந்து செயல்பட்டால்தான் அந்தத் தொழில் லாபத்தில் இயங்கும். இதேபோல உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் இணைந்து செயல்படும்போதுதான் மனித வாழ்க்கை சிறப்படைந்து மேலோங்கி வளர்ந்து கொண்டே செல்லும்.

4.   உடற்பயிற்சிக்கும் மனப்பயிற்சிக்கும் சம்மான பலன்கள் உண்டு என்பதை எம்,ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறிலிருந்து தெரிந்து கொண்டோம். மனப்பயிற்சியை தொழிலாகக் கொண்ட பிராமணர்களும், செய்யும் தொழில்களின் மூலம் மனப்பயிற்சி பெற்றவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றம் பெற்றிருப்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

5.   நெற்றியில் திருநீரைப் பூசிக்கொள்வது வழிபாடு ஆகாது!

ஆனால், தட்சிணைத் தட்டு வந்தவுடன் திருநீறு எடுத்துப் பூசிக் கொள்பவர்களும், தீப  ஒளியைக் கண்களில் ஒத்திக் கொள்பவர்களும், தெய்வ உருவச் சிலைகளைப் பார்த்து கன்னங்களில் போட்டுக் கொள்பவர்களும், தேங்காய் உடைப்பவர்களும், மொட்டை அடிப்பவர்களும், காவடி ஆடுபவர்களும், கால்கடுக்க நின்று, உருவச் சிலையைப் பார்த்துவிட்டு, தெய்வ தரிசனம் நன்றாக கிடைத்தது என்று திருப்தி அடைபவர்களும், மொலப்பாரி எடுக்கும் பெண்களும், தீச்சட்டி எடுப்பவர்களும், தேரைப் பிடித்து இழுப்பவர்களும், தெருக்களில் சாமி சிலை ஊர்வலம் வரும்போது தரையில் விழுந்து வணங்கி, திருநீறு, குங்குமம் வாங்கிக் கொள்பவர்களும், சாமி படங்களுக்குத் தீபம் காட்டுபவர்களும், பொங்கல் வைப்பவர்களும், புனித தீர்த்தம் என்று நீரை வாங்கி வீட்டில் தெளிப்பவர்களும், இரண்டு சாமி சிலைகளுக்குத் திருமணம் செய்து வைப்பவர்களும், வீட்டில் நல்லவைகள் நடக்க ஹோமம் வளர்த்து, குருக்கள் மந்திரம் சொல்லும்போது பணத்தைச் செலவழித்து வேடிக்கை பார்ப்பவர்களும் இன்னும் பல உடல் சார்ந்த (உடற்பயிற்சியை தரும்) மதச்சடங்குகள் செய்பவர்களும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் இவர்கள் எந்த மனப்பயிற்சியும் செய்யாமலே ஆலயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். வீடுகளிலும் எந்த மனப்பயிற்சியும் செய்வதில்லை.

6.   இங்கிலாந்து மகாராணி ஒருவர், ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்யாதவர்களுக்கு (மனப்பயிற்சி செய்யாதவர்களுக்கு) அபராதம் விதித்து தண்டித்திருக்கிறார். அதனால்தான் இங்கிலாந்துக்கார வெள்ளையர்கள், உலகையே ஆண்டிருக்கிறார்கள்.

7.   ஒரு நாளைக்குப் பல முறை மனப்பயிற்சி செய்பவர்களைக் கொண்ட மதமும் உண்டு. மற்ற மதங்களில், அரசன் முதல் அடிமட்ட சாமான்யர்கள் வரை ஒரே விதமான மனப்பயிற்சியை (வழிபாட்டினை) செய்து வருகிறார்கள். செய்து வரும்படி அன்பாகவும், வற்புறுத்தியும் ஆள்பவர்களால், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில்தான் குருக்கள் மட்டும் மனப்பயிற்சி பெறுகிறார். பிற மக்களுக்கு அது கிடைக்காமல் செய்யப்பட்டது; மறைக்கப்பட்டது; அவ்வாறு அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிப்பது தெய்வ குற்றமாகும் என்று சொல்லி, பயம் உண்டாகும்படியான மூடநம்பிக்கை மக்களிடையே பரப்பப்பட்டது. அய்தீகம் என்ற வார்த்தையைப் போட்டு அதிக பட்ச மூடநம்பிக்கைகளைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது இந்து மதத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடாகும், அந்த கோயிலுக்குப் போனால் திருமணம் ஆகிவிடும்! இந்த கோயிலுக்குப் போனால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி காகிதத்தில் வழக்கு விபரங்களை எழுதி, சிலைக்கு முன்னால் வைக்கச் சொல்வது, சனி விலகுவதற்கு ஒரு கோவில், பூட்டு போட்டால் திருமணம் நடக்கும், இன்னொரு கோவிலில் தொட்டில் கட்டிப் போட்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லிச் சொல்லி, மக்களை, மூட நம்பிக்கைகளைப் படிகளாக வைத்து, உச்சியில் அறியாமை என்னும் தெய்வத்தை வழிபட  வைத்திருக்கிறார்கள்.

8.   செய்த பாவத்திற்குப் பரிகாரம் கிடையாது!

மக்களிடையே மூட நம்பிக்கைகளப் பரப்புவதில் ஜோதிடர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஆரம்ப காலத்தில் ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்றில்லை. கோவில்களுக்கு மக்கள் கூட்டத்தைத் திருப்பவே பரிகாரம் என்ற வார்த்தை இடைச் செருகலாக ஜோதிடத்தில் சேர்க்கப்பட்டது.  “பரிகாரம் செய்து நடக்க வேண்டியதை நல்லதாக மாற்றுவதற்கு எந்த ஆற்றலாலும் (இறைவனாலும் கூட) முடியாது; அவன் செய்த பாவத்திற்குறிய தண்டனையை, அவன் அநுபவித்தே ஆக வேண்டும்”. என்று வேதம் சொல்லுகிறது.

திருவள்ளுவரும் “பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்” என்று 319-வது குறலில் சொல்லியிருக்கிறார். அதாவது,  ’ஒருவன் பிறர்க்கு முற்பொழுதில் துன்பம் செய்தால், அவனுக்குத் துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்’, என்பதாகும். ஆங்கில நாட்டின் விஞ்ஞானி சர் ஐசக் நுயூட்டன் “ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு”. என்று கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.  ஆனால் ஜோதிடர்கள் பரிகாரம் செய்து மாற்றலாம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஜோதிடர்களுக்கும் கோவில்களில் உள்ள குருக்களுக்கும் தொடர்புண்டு. நாங்கள் பார்த்த ஜோதிடர் தேவிபட்டணத்தில் உள்ள குரு ஒருத்தர் பெயரைச் சொல்லி எனது மகளுக்குத் திருமணம் விரைவில் நடக்க சடங்கு செய்ய சிபாரிசு செய்தார். அந்த குரு இரண்டு வாழைத் தண்டுகளை புது மாப்பிள்ளையாகவும், மணப்பெண்ணாகவும் பாவித்து மந்திரங்களை ஓதினார். அரைமணி நேரத்தில் அந்தச் சடங்கு முடிந்து விட்டது. அதற்கு ரூ.200 வாங்கிக் கொண்டார் (1993-ல்). பிறகு கடல் தண்ணீருக்குள் உள்ள நவக்கிரகங்களைச் சுற்றிவரச் சொன்னார். அதையும் செய்தோம். ஆனால் எனது மகளுக்கு 1998-ல் தான் திருமணம் நடந்தது.  வேதத்திற்கு எதிரான கருத்து  (‘பரிகாரத்தால் கெட்டதை நல்லதாக மாற்ற முடியும்’) என்று எந்த இந்துமதப் பெரியவர்களும் எதிர்ப்புத் தெர்விக்காதது வியப்பாக இருக்கிறது. இவ்வாரு வேதத்திற்கு முரண்பட்ட கருத்துக்கள் அநுமதிக்கப்படுகின்றன. இதுவும் இந்துமதத்தின் ஒரு பெரிய குறைபாடாகும்.

நமது தெய்வங்களால் இந்தியா அடிமையாவதைத் தடுக்க முடியவில்லையே! ஏன்?

9.   மக்கள் கோவில்களுக்குப் போனால், அந்தந்த கோவில்களின் ஐதீகப்படி நல்லவைகள் நடந்ததாக நிரூபித்துக் காட்டப்படவில்லை. இதன் விளைவு பாரதத்தில், மன்னர்களின் ஒற்றுமை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. புதிய போராயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவன் கத்தியைச் சுழற்றும்போது, அவன் துப்பாக்கியில் குறிபார்த்துச் சுட்டான். இவர்கள், வேலேந்தும்போது அவன் பீரங்கிக் குண்டுகளால் கொத்து கொத்தாகச் சாகடித்தான். நம்மவனால் சண்டை போட அவன் பக்கத்தில் கூடப் போகமுடியவில்லை. இதனால் நம்மவரது மனவுறுதி பிறந்த மண்ணிலே புதைக்கப்பட்டது. விளைவு, மனப்பயிற்சியில் சிறந்தவர்களால் 400 ஆண்டுகளாக இந்தியா அடிமைப்படுத்தப்பட்டது. நமது தெய்வங்களால் இந்தியா அடிமையாவதைத் தடுக்க முடியவில்லையே! ஏன்? எங்கே கோளாறு? ஆராய்ந்து பார்ப்பீர்!

10.  இந்தியர்களின் பலவீனத்தை அறிந்துதான், நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் வெள்ளையர்களை வெளியேற்ற ஆயுதங்களை கையில் எடுக்க வில்லை. அஹிம்சை என்னும் இரத்தத்தைச் சிந்த வைக்காத ஆயுதத்தைக் கையிலெடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இருந்தாலும் மக்களின் ஆன்மீக நிலை உயரவில்லை. மனப்பயிற்சி பெறாமல், பழைய நடைமுறைகளிலேயே கடவுளை  வழிபடுகிறார்கள். அரசு நலிந்தவர்களுக்கு எவ்வளவோ சலுகைகள் கொடுத்து நடைமுறைப்படுத்தினாலும், அவர்கள் பின்னடைந்தே இருக்கிறார்கள். காரணம் கடவுளை வழிபடுதலில் (மனப்பயிற்சி உள்ளடக்கிய) பின்னடைந்தே இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், அவர்களின் வழிபாடுகளில் மனப்பயிற்சி இடம் பெறாததால், மனம் வளர்ச்சி பெறாமல், மனம் குன்றியே (under developed mind)   இருக்கிறார்கள்.

11. இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு கொடுமைகள் நடக்கின்றனவே! ஏன்?

இதனால் மனப்பயிற்சியால் வளம் பெற்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் லடசக்கணக்கான இளைங்கர்கள் குடும்ப வாழ்வைத் தொலைக்கிறார்கள்; குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்க முடிவதில்லை; உற்றார் உறவினர்களின் குடும்ப விஷேசங்களில் பங்கேற்க முடிவதில்லை. அப்படிச் செல்பவர்கள் ஏஜண்ட்களால் ஏமாற்றப்படுகிறார்கள். தனிமையில் விடப்பட்ட பெண்கள் படி தாண்டுகிறார்கள். இதனால் கொலைகளில் போய் முடிகிறது.

12.  வெளிநாடுகளில் வேலை செய்யும் முதலாளிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். பேசிய சம்பளம் கொடுப்பதில்லை. குறைவாகவே கொடுக்கிறார்கள். மாதா மாதம் தவறாது கொடுப்பதில்லை. கடுமையான வெயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குகிறார்கள். வறுமையின் காரணமாக வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கு பட்டினி போட்டு, அடி, உதை கொடுக்கப்படுகிறது. அவர்களுடைய பெண்மையும் மானமங்கப்படுத்தப்படுகிறது. கை ஒடிந்த பெண், கால் முறிவு ஏற்பட்ட பெண் (ஆந்திராவைச் சேர்ந்த 50 வயதைத தாண்டிய பெண் கை முறிவு ஏற்பட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்; பொல்லாச்சியைச் சேர்ந்த மத்திய வயதைத் தாண்டிய பெண் உடல் முழுவதும் காயப்பட்டு இங்கு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது) என்று இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு இங்குள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

13.  வேலை தேடி கள்ளத் தோனியில் செல்பவர்கள் பிடிபடும்போது அவர்கள் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டு ஏராளமான சித்திரவதைக் குள்ளாக்கப்படுகிறார்கள். மனப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட  மதத்தைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வேலை தேடி வருகிறார்களா? சித்திரவதை அநுபவிக்கிரார்களா? இல்லையே! ஏன்? சிந்திப்பீர்!

14.  மலேசியாவில் இந்து மதத்தை நிலை நாட்ட போராடினார்களே வெற்றி பெற முடிந்ததாவழிபாட்டில் மனப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காத இந்து மதத்தைச் சேர்ந்தவர்களால் வெளிநாடுகளில் போராடி எப்படி வெல்ல முடியும்!. சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த கபாலி படம் வெளிவந்தபோது ஒரு கட்டுரை படித்தேன். அதில் மலேசியாவில் சீனர்களிடையே தாதாக்கள் இருப்பதாகவும்,  அவர்கள் தங்கள் இனத்தைக் காப்பதற்காக தாதாக்களாக மாறியவர்கள் என்றும், ஆனால் தமிழர்களிடையே தோன்றியுள்ள தாதாக்கள் பணத்துக்காக தாதாக்களாக மாறியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலைப் படித்தபோது எனது மனம் மிகவும் வேதனையில் மூழ்கியது.

15. இலங்கையில் நடந்தது என்ன? ஆள்பவர்கள் மனப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் தமிழர்கள் மனப்பயிற்சி இடம்பெறாத திருநீரை மட்டும் பூசி வழிபாடு செய்பவர்கள்; ஆன்மீக ஆற்றல் நிரம்பப் பெறாதவர்கள். இறைவனின் ஆற்றல் கிடைக்கப்பெறவில்லை என்றால் போரில் எப்படி வெல்ல முடியும்! 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 99,000 பெண்கள் விதைவைகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

16.          ஜப்பான் ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆளத் திட்டம் போட்டது. அத்திட்டத்திற்காக 1940 மற்றும் 1942 ஆண்டுகளுக்குள் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும்படியான 415 கி.மீ. தூரத்திற்கு ஒரு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வேலையைத் துவங்கியது. அதற்கு, மலேசியாவிலிருந்தும், பர்மாவிலிருந்தும் 2 லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்களை வேலை செய்வதற்கு துப்பாக்கி முனையைக் காட்டி, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றது ஜப்பான் ராணுவம். போர் முடிவுக்கு வந்த பிறகு, 35,000 பேர்கள் மட்டும் திரும்பினார்கள். 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிந்து போனார்கள். அவர்கள் பாம்பு கடியாலும், விஷப்பூச்சிக் கடியாலும், காலரா, மலேரியா மற்றும் பெரிபெரி நோய்களாலும் இறந்து போனார்கள். அவர்களில் சிலர், கடுமையான வேலைபளு மற்றும் ஜப்பான் ராணுவத்தின் சித்திரவதை தாங்க மாட்டாமலும் தற்கொலை செய்து கொண்டார்கள்.
      நன்றி:குறிஞ்சிவேந்தன், ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ தேதி:2-9-2016
      தமிழர்களுக்கு மட்டும் இந்த கொடுமை ஏன்? சிந்திப்பீர்! 
     
      உலகின் பெரும்பகுதியை வென்ற மாவீரன் செங்கிஸ்கான் போருக்குப்   
      புறப்படுவதற்கு முன்பு மூன்று நாடகள் அவன் வழிபடும் இறைவன் இருக்கும்    
             மலையில் ஏறி மனப்பயிற்சி செய்து வழிபாடு செய்வானாம். அதோடு சமவெளியில்  
             உள்ள அவனது படைகளும் மனப்பயிற்சி வழிபாடு செய்வார்களாம். ஆகவே  
               அவனால் எல்லாப் போர்களிலும் தோல்வி காணாமல் வெற்றியே 
      கண்டிருக்கிறான்.  ..உலகளாவிய தமிழர்களே சிந்திப்பீர்! செயல்படுவீர்!.


17.  பொதுவாக சீனர்கள் முன்னேறிய, வளர்ந்த இனமாகவே காணப்படுகிறது. அரபு நாடுகளில் அடித்தட்டில் வேலை பார்க்கும் சீனப்பணியாளர்கள் அவ்வளவாக இல்லை; மேல்தட்டில் வேலைபார்க்கும் சீனர்களே அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... சீனர்களின் முன்னேற்றத்தின் அடிப்படையை சிறிது ஆராய்ந்தேன்.

18. சீனர்களின் ஆன்மீக ஆற்றல்

கி.மு 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் லாஓ சு (Lao Tsu) மற்றும் இவருக்கு சமகாலத்தவர் கோங் குஉஐ என்கின்ற கன்பியூசியஸ். இவர்களின் தத்துவங்கள்தான் தாவோயிசம் (Taoism) மற்றும் கன்பியூசினிசம் (confucianism) என்று அழைக்கப்படுகிறது.

19.  இரண்டு தத்துவங்களுமே சீனர்களின் வாழ்க்கை முறை எப்படி அமைய வேண்டும் என்று போதிப்பதுதான். கன்பியூசினிசம் முதன்மையாக உள்ள முக்கிய 5 உறவுகள் (ஆள்பவர், குடிமகன் உறவு, கணவன் மனைவி உறவு, முதியவர்கள், இளையவர்களின் உறவு, நண்பர்களுக்கிடையே உறவு மற்றும் தகப்பன், மகன் உறவு ) எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவு படுத்துகிறது; அந்த உறவுகளில் முன்மாதிரியாக மற்றவர்கள் பின்பற்றும்படியாக வாழ்ந்து காட்ட அறிவுறுத்துகிறது. கன்பியூசியஸின் தங்க விதி “உனக்கு பிறத்தியார் என்னென்ன (கெடுதல்கள்) செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ அதையெல்லாம் நீ பிறத்தியாருக்குச் செய்யாதே!” என்று சொல்லுகிறது. அதையேதான் தனது 316-வது குறளில் திருவள்ளுவர் கூறுகிறார் “இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்”. அதாவது ‘துன்பம் தருவன என்று தான் அறிந்தவற்றைப் பிறரிடத்தில் செய்தலைப் புரியாதிருக்க வேண்டும்’ என்பது அதன் விளக்கவுரையாகும்.

20. ‘சும்மா இரு’ என்பதன் பொருள் என்ன?

தாவோசிசம் நல்லிணக்கத்துடன் வாழ அறுவுறுத்துகிறது.  லாஓ சு, தாவோசிசத்தின் தந்தை, சொல்கிறார், “கடின வழியில் செனறு காரியத்தைச் சாதிப்பதற்குப் பதில் ‘(இயற்கையின்) ஓட்டத்தினூடே சென்று’ சாதிக்கக் கற்றுக்கொள்வதில்தான் மகிழ்ச்சிக்குறிய பாதை தெரியும்; இயற்கை (உங்களுக்காக) வேலை செய்வதற்கு நீiங்கள் போதுமான அவகாசம் அதற்குக் கொடுக்க வேண்டும். அதுதான் காரியம் நடைபெற சுலபமான வழியாகும். பிறகு ஒவ்வொரு காரியமும் சுலபமாக (சீட்டு சேருவதைப்போல) நடைபெற்றுவிடும். இதைத்தான் “சும்மா இரு (doing by not doing)”என்று சொல்வது.

21.  மக்களுக்காக இறைவன் எனக்களித்த கவனவாழ்க்கை தத்துவத்தில் அவன் மக்களை ’சும்மா இருக்கத்தான்’ சொல்லுகிறான். அவர்களின் விதிகளின்படி, அவர்களுக்கு ஆகவேண்டிய நல்லது கெட்டது அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பதிவுகளின்படிதான் அனைத்தும் நடக்கின்றன. இதைத்தான் “யாதும் ஊரே!, யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர் தர வரா!” என்று பாடிய பாடலில் கணியன் பூங்குன்றனார், வெள்ளத்தின் வழியே தெப்பம் செல்வதைப்போல, உயிரின் வழியே ஊழ்வினை என்ற விதி செல்லும் என்று கூறுகிறார்.  அதாவது ஒவ்வொரு உயிரிலும் விதி ஒட்டிக்கொண்டு பிறக்கும். அந்த விதியில் பதிவு செய்தபடி, உனக்கு ஒருவர் கெடுதல் செய்யலாம் இதற்கு அவர்மேல் வெறுப்பு கொள்வதோ அல்லது பலி எடுக்க நினைப்பதோ தேவையில்லாத ஒன்றாகும்,

22.  விதியைப்பற்றி திருவள்ளுவர் “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்”, என்று கேட்கிறார். இதற்கு விளக்கவுரை “நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று விரும்பி அநுபவிப்பவர், தீவினை உண்டாகும் காலத்தில் துன்பங்களை அவ்வாறே அநுபவிக்காமல் வருந்துவது ஏன்?” என்பதாகும். சுருக்கமாகச் சொன்னால் “இன்பத்தையும் துன்பத்தையும் சம்மாக எடுத்துக் கொண்டு ‘சும்மா இரு’!” என்றுதான் அர்த்தம்.

23.  வெவ்வேறு  குறள்களில்  “சும்மா இரு” அர்த்தம் கொடுக்கும்படியாக ஊழ்வினை என்கின்ற விதியைப்பற்றி சொல்லியிருப்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்.
24.  “கெட்டவிதமாக சேர்த்தப் பொருளை எவ்வளவு வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் போய்விடும்; நல்லவிதமாக சேர்த்த பொருளை தெருவில் கொட்டினாலும், அது போகாது!” ஆகவே பொருளைக் காப்பதற்கு நீ எந்த முயற்சியும் செய்யாமல்  ‘சும்மா இரு” என்று சொல்லாமல் சொல்லுகிறார்.

25.  “ஒருவன் கோடிப் பொருளைச் சேர்த்து வைத்தாலும் விதியின் வல்லமையால் அப்பொருட்களை அநுபவிக்க இயலாது”. சம்பாதித்தப் பொருட்களை அநுபவிக்க முடியாமல் அதற்காக வருந்துவதை விட்டு ‘சும்மா இரு’ என்று சொல்லாமல் சொல்லுகிறார்.

26.  “விதியைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன? அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற உபாயத்தைச் செய்தாலும் (பூஜை, புனஸ்காரம், பரிகாரம் முதலியன) அது அதனைத் தடைப்படுத்திக் கொண்டு முன் வந்து நிற்கும்”. ஆகவே எந்தவிதமான பரிகாரம் செய்தாலும், செய்த பாவங்களை அநுபவித்தே ஆக வேண்டும், அதை தடுத்து நிறுத்துவதற்கு எவ்வளவு பெரிய ஆற்றலாலும் (இறைவனாலும் கூட) முடியாது. ஆகவே  “சும்மா இரு”, என்று சொல்லுகிறார் வள்ளுவர். சுருங்கச் சொன்னால், எல்லாம் இறைவன் செயல்!; நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஆகவே “நீ சும்மா இரு!”

27.  மேற்கூறிய கருத்துகளின்படியும், இறைவன் எனக்களித்த கருத்தும் ஒன்றாக இருக்கிறது. அந்தக் கருத்துக்களின்படிதான், மக்களை “கற்பனை செய்யாதீர்கள், திட்டம் தீட்டாதீர்கள் மற்றும் நீண்ட நேரம் யோசித்து முடிவு எடுக்காதீர்கள்”, என்று எனது “ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்”,என்ற புத்தகத்தில் கேட்டுக் கொண்டேன். இந்த மூன்றையும் இயற்கையிடம் (இறைவனிடம்) விட்டு விடுங்கள். ஏனென்றால் அந்த மூன்றும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களைப்பற்றியது. ஆனால் எதிர்காலம் மக்கள் செய்யும் நல்லது கெட்டதுக்குத் தகுந்தாற்போல வெகுமதியோ அல்லது தண்டனையோ இயற்கையால் வழங்கபடும்  காலம். அந்தக் காலத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது அவர்கள் அநுபவிப்பது தோல்விகளைத்தான், துன்பங்களைத்தான். ஆகவேதான், ஜோதிடம் எதிர்காலப் பலன்களைச் சொல்லுவதால், மக்கள் ஜோதிடம் பார்க்காமலிருப்பது நல்லது. கவனவாழ்க்கை வாழ்பவர்கள், கடுமையான முயற்சிகளைச் செய்யாமல், தேவையான முயற்சிகளை மட்டும் செய்வார்கள். வெற்றி கொள்வார்கள்.  இயற்கை உதவிக்கு வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பார்கள்.
28.   
29.  சீன தாவேயிசம், அக்குபங்சர் மருத்துவத்தை (Medicine of Acupuncture) உள்ளடக்கியது. இம் மருத்துவத்தில் மனிதனின் உடலில் கண்ணுக்குத் தெரியாத உயிர்ச்சக்தியின் ஓட்டம் (இறை ஆற்றலின் ஓட்டம்) நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

30.  கவனவாழ்க்கை, இரட்டை மருத்துவத்தை (Twin Medicine) உள்ளடக்கியது. இதில் முதல் மருத்துவம் இயற்கையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. இரண்டாவது மருத்துவம், இறைவனின் பிரதிநிதியான மனதினை பயிற்சி செய்ய வைத்து, இறை ஆற்றலைப் பெருக்கி நோய்கள் குணப்படுத்துகிறது. இதில் தொடர்ச்சியாக அநுபவம் பெற்றவர்கள் சுலபமாக கவனவாழ்க்கைக்கு மாறமுடியும். ஆகவே இங்கு இரட்டை மருத்துவம் மக்களை கவனவாழ்க்கைக்கு மாற்றுவதற்கு பயன்படுகிறது.

31.  நான் அக்குபங்சர் மருத்துவத்தையும் கற்றிருக்கிறேன். மூன்று மருத்துவங்களின் மூலம் “உடல்நலம்தான் ஆன்மீகம்  என்பதை இறைவன் எனக்கு தெளிவுபடத் தெரிவித்திருக்கிறான். ஆகவே ஒருவர் மருந்து மாத்திரை சாப்பிடாமல் நல்ல உடல்மன நலத்தைப் பெற்றிருந்தாரானால், அவர் முழு ஆன்மீகவாதி ஆவார். அவர் எந்த கோவிலுக்கும் போகவேண்டியதில்லை; அவர் தொட்டதெல்லாம் துலங்கும்.

32.  சீன மக்கள் தழுவிய மற்றொரு மதம் புத்த மதம். புத்தர் கீழே குறிப்பிட்டுள்ளவாறு விவரித்தார் “நம்முடைய எல்லாப் பிரச்சனைகளும், துன்பங்களும், நமது குழப்பமான எதிர்மறை விளைவுகளைத் தரும் மனதால்தான் (negative states of mind) உண்டாகின்றன. நம்முடைய எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், நன்மைகளும் அமைதியான, நேர்மறை விளைவுகளைத் தரும் மனதால்தான் (positive states of mind) உண்டாகின்றன. அவர் மனப்பயிற்சி (meditation) உள்ளிட்ட முறைகளை, சீராக கோபம், பொறாமை, அறியாமை (ignorance) போன்ற எதிர்மறை மனதை (negative mind) வெற்றிகொள்வதற்கும், அன்பு, இரக்கம் (compassion), இறையறிவு (wisdom) போன்ற நேர்மறை மனதை (positive mind) வளர்ச்சியடையச் செய்யவும் கற்றுக் கொடுத்தார். வளர்ந்த இறையறிவைக் கொண்டு, ஒருவர் அன்றாடம் உண்டாகும் பிரச்சனைகளைச் சுலபமாக ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம். இதே போல, இரட்டை மருத்துவம் மற்றும், கவனவாழ்க்கையின் மூலமாக இறையறிவை (wisdom) வளர்த்துக் கொள்பவர்கள், நோய்களிலிருந்து விடுபடுவதோடு, அன்றாடம் உண்டாகும் பிரச்சனைகளைச் சுலபமாக அவர்களுக்குச் சாதகமாக மாற்றிவிடலாம். 

33. இருதயத்தைக் கவனித்து மனப்பயிற்சி செய்! இயற்கையைப் (இறைவனைப்) பார்க்கலாம். தொட்டதெல்லாம் துலங்கும்!

ஜென் புத்தமதம் புத்தமதத்திலிருந்து வேறுபட்டது. ஜென்னைப்பற்றி  போதிதர்மா (528 AD) இப்படிச் சொல்கிறார்: “இது எழுதப்பட்ட வார்த்தைகளைச் சார்ந்ததல்ல. வேதத்திலிருந்து மாற்றப்பட்டதுமல்ல. இது நேரடியாக
ஒருத்தருடைய இருதயத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஒருவரது இயல்பைப் பார்த்து புத்தாவாகிவிடுகிறார்
(Not dependent on the written word,
Transmission apart from the scriptures;
Directly pointing at one’s heart,
Seeing one’s nature, becoming Buddha.)”

34.  கவன  வாழ்க்கையும் எந்தவிதமான கல்வியியலையும் சார்ந்ததல்ல. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு வாழ்க்கை முறைகள்தான் இருக்கின்றன. ஒன்று கற்பனை வாழ்க்கை இரண்டு கவனவாழ்க்கை முறை. அவன் தோன்றியதிலிருந்தே கற்பனை வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறான். கவனவாழ்க்கையைப்பற்றி அவனறிந்திருக்க வில்லை. அதனால்தான் போர்கள் நடந்து கொண்டே வந்திருக்கின்றன; பேரழிவுகள் தொடர்ந்திருக்கின்றன. மக்களின் துயரங்கள் எந்தக் காலத்திலும் குறைந்த பாடில்லை. கவனவாழ்க்கையில் ஒருவர், போதிதர்மர் சொன்னதைப் போல, அவரது இதயத்தை நோக்கி மனப்பயிற்சி செய்யும்போது அநுபவம் பெறுகிறார். அநுபவப்பட்டவர் கவனவாழ்க்கைக்கு மாறுகிறார். கவனவாழ்க்கையில், அவருடைய இயல்பைப் பார்க்கிறார்; அவருக்குத் தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்து விடுகிறது.  

35.  முதன் முதலில் தாவோயிசமும், ஜென் புத்தமதமும் கவனவாழ்க்கை முறையை அறியாமல், அந்த முறையில் ஏற்படக் கூடிய மாற்றங்களை அறிந்து வைத்திருந்தார்கள். அந்த வாழ்க்கை முறைக்கு மாறுவதற்கு அவர்கள் கடுமையான பயிற்சி முறைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால் எனக்கு எளிய முறையில் மக்கள் கவனவாழ்க்கைக்கு மாறும்படியான இரட்டை மருத்துவத்தை அருளியிருக்கிறார். மக்கள் தங்களுக்குள்ள நோய்களிலிருந்து குணம் பெரும் வேளையில் சுலபமாக கவனவாழ்க்கைக்கு மாறமுடியும். ஆகவே கவனவாழ்க்கை முறையானது தாவோயிசம், புத்த மதம் மற்றும் ஜென் புத்த மதம் ஆகிய மூன்றின் வழித்தோன்றல் என்று சொல்லலாம். ஆகவே சீனர்கள், ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் கடைப்பிடித்த மேலே குறிப்பிட்ட 4 இசங்களை (Thaoism, Confucianism, Buddism and Zen Buddism ) அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைதான் காரணமாகும்.

36.  சீனர்களின் ஆன்மீகப் பவர் கூடுவதற்கு மற்றொரு சிறப்பான ஒன்றை சொல்லியாக வேண்டும். 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாவோயிசத்துடன் இணைந்திருந்த மருத்துவம் அக்குபங்சர். இதில் உடலில் உள்ள 12 உறுப்புகளுக்குச் சொந்தமான 60 புள்ளிகளில் பழுதடைந்த உறுப்புகளுக்குச் சொந்தமான ஒரு புள்ளியைத் தூண்டினால், அடைபட்ட புள்ளி திறக்கப்பட்டு அதன் வழியாக இந்த அண்டத்தின் ஆற்றல் (Eternal energy) பழுதடைந்த உறுப்புக்களைக் குணப்படுத்துகிறது. இவ்வாறு அம்மக்கள் மருத்துவத்தின் மூலமாகவும் இறையாற்றலைப் பெறுகிறார்கள்.

37.  சங்க இலக்கிய நூல்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநாணூறு, எட்டுத்தொகை போன்ற நூல்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மின்சாரம் இல்லாத காலத்தில், விளக்கு, காற்றாடி, பேப்பர்,  பேனா இல்லாமல் எழுதுவதற்கு, எழுதிய திருவள்ளுவர் உட்பட அனைத்துப் புலவர்களும் முழு இறையருள் பெற்றிருக்க வேண்டும். அதாவது கவனவாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் இயற்கையை நன்கு புரிந்து அதனோடு இயந்து வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் காலப் புலவர்களும், மக்களும் இறைவனோடு நேரடி தொடர்பு வைத்திருந்தார்கள். அதனால்தான் உலகம் வியக்கத்தக்க இலக்கியப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் இதுவரை மேற்சொன்ன படைப்புகளுக்கு இணையான படைப்புகள் வரவில்லையே! ஏன்? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

 ஹீலர், மருத்துவ மனப்பயிற்சி நிபுணர், பொறியாளர் ஆர்.எ.பரமன் (அரோமணி) , cell no. 9442035291 ;twinmedicine@gmail.com
  





முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: