Wednesday, April 17, 2019

13-6-2013


இம--பகலில் தூங்கலாமா வேண்டாமா!

அரோமணியின் 8-வது இயற்கை விதியை 13-6-2013 அன்று இறைவன் வெளிப்படுத்தினான். அதனை நடைமுறைப்படுத்தியவுடன் பகலில் எனக்கிருந்த சோர்வு, அதனால் ஏற்பட்ட பலவீனம் அதைத் தொடர்ந்து வரும் நோய்கள் ஆகியவற்றிலிருந்து நலம் பெற்றேன். இந்த விதி பகலில் தூங்குவதை தடை செய்கிறது.

அரோமணியின் 9-வது இயற்கை விதியைக் கடைப்பிடித்தவுடன், ஒவ்வாமையிலிருந்தும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய சளித் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டேன். 9-வது விதி உடலிலுள்ள துவாரங்கள் அடைபடாமலிருக்க வலியுறுத்துகிறது.

இப்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு கண்டுபிடிக்காததால், எனக்கு எடை கூடவில்லை. எந்த நோய் வந்தாலும், மம-வைக் கொண்டு குணப்படுத்தி விடுவேனே தவிர எனது எடையைக் கூட்ட முடியவில்லை. பசி குறைவாக இருந்தது; மலச்சிக்கல் இருந்தது; சோர்வு இருந்தது; சோம்பேறித்தனம் இருந்தது. உடல் பலவீனத்தையும் என்னால் உணர முடிந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை. இறைவன் வெளிப்படுத்திய அரோமணியின் 10-வது இயற்கை விதியை கடைப்பிடித்தவுடன் உடல் பலவீனம் பஞ்சாய் பறந்துவிட்டது.

                     ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி) 
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: