Wednesday, April 17, 2019

5-10-2019-


இமஉ-டலின் செல்களின் சேமிப்பிலிருந்து ஆற்றலை எடுக்கலாமா ?

.5-10-2019-ந் தேதி அன்றுதான் எனக்கு, இறைவன் அரோமணியின் 10-வது இயற்கை விதியை வெளிப்படுத்தினான். அந்த விதியைக் கடைப்பிடித்தவுடன் தான் என்னுடைய செரிக்காமை, பசி எடுக்காமை, மலச்சிக்கல், சோர்வு முதலிய உடல் நலக்குறைவுகள் சரி செய்யப்பட்டன. அதிகமாக சாப்பிட முடிந்தது; சுறுசுறுப்பாக இயங்க முடிந்தது. உடல் வலிமையாகி வருவதையும் என்னால் உணர முடிந்தது.

10-வது விதியின்படி உழைப்பிற்கு, நடைப்பயிற்சிக்கு உடலின் செல்களின் சேமிப்பிலிருந்து ஆற்றல் செல்லக் கூடாது. அதற்கு காலையிலும் மதியமும் சாப்பிட்ட பிறகு மேற்கூரிய செயல்களைச் செய்ய வேண்டும். எனது உடல் நீண்ட நாட்கள் தேறாமலிருந்ததற்கு, நான் வெறும் வயிற்றில் இருவேளையும் நடைப்பயிற்சியை மேற்கொண்டதுதான். ஆகவே அந்த நடைப்பயிற்சிக்குத் தேவையான ஆற்றலை, உடலின் செல்கள், அவைகள் சேமித்து வைத்த ஆற்றலிலிருந்து வழங்கி வந்திருக்கிறது. சேமிப்புக் குறைந்ததால் எனது உடல் பலவீனமாகவே இருந்திருக்கிறது. வங்கியின் (Bank) சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்தால், பொருளாதாரம் உயருமா அல்லது குறையுமா!

அரோமணியின் 11-வது இயற்கை விதி, காலை, மாலை இருவேளையும் 20 நிமிட நேர மருத்துவ மனப்பயிற்சி (Medicinal Meditattion) செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நான் இதைத் தனியாகச் செய்வதில்லை. எனது நோய்களைக் குணப்படுத்துவதற்காக செய்யும் மருத்துவ மனப்பயிற்சிகளே (Medicinal Medidation) போதுமானதாக இருந்தது.

                             ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

 Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: